Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Sunday 19 March 2017

கருவூல அலுவலகத்துக்கு செல்ல அவசியம் இல்லை: ஓய்வூதியர்கள்

கருவூல அலுவலகத்துக்கு செல்ல அவசியம் இல்லை: ஓய்வூதியர்கள் ஆதார் அட்டை மூலம் உயிர்வாழ் சான்றை பதிவு செய்யலாம் - ஏப்ரல் முதல் புதிய வசதி அறிமுகம்.

ஓய்வூதியதாரர்கள் கருவூல அலுவலகத்துக்கு செல்லாமல் ஆதார் அட்டை மூலம் உயிர்வாழ் சான்றிதழை ஆன்லைனில் பதிவுசெய்யும் புதிய வசதி ஏப்ரல் முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாவட்டக் கருவூலங்கள் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டு தோறும் ஏப்ரல் முதல் ஜுன்மாதம் வரை கருவூலத்தில் நேரடியாக ஆஜராகி உயிர்வாழ் சான்றிதழை பதிவு செய்ய வேண்டும். நேரில் வர இயலாதவர்கள் உயிர்வாழ் சான்று பெற்று கருவூலத்துக்கு அனுப்ப வேண்டும். இந்நிலையில், ஜீவன் பிரமான் வாழ்வு சான்றிதழ் திட்டம் மூலம் ஓய்வூதியர்கள் சம்பந்தப்பட்ட கருவூலங்களுக்கு செல்லாமலேயே அரசு இ-சேவை மையங்கள் வழியாக இணையத்தளத்தில் (www.jeevanpramaan.gov.in) ஆதார் அட்டை மூலம் உயிர்வாழ் சான்றிதழைப் பதிவு செய்யும் முறை இந்த ஆண்டு முதல் நடை முறைப்படுத்தப்படுகிறது.இதுவரை ஆதார் அட்டை, வருமான வரி கணக்கு எண் (பான் கார்டு)குடும்ப அடையாள அட்டை சமர்ப்பிக்காத ஓய்வூதியர்கள், இந்த ஆவணங்களின் நகல்களுடன் தங்களின் ஓய்வூதிய எண்ணை (பிபிஓ நம்பர்) குறிப்பிட்டு கருவூ லத்தில் சமர்ப்பிக்கவேண்டும். ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத் துக்கு வரும்போது ஓய்வூதிய புத்தகம், வங்கி சேமிப்பு கணக்கு எண் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும்.

நேரில் வர இயலாத ஓய்வூதியர் கள் ஓய்வூதியப் புத்தகம், வங்கி சேமிப்பு கணக்கு எண், ஆதார் அட்டை, வருமான வரி கணக்கு எண், குடும்ப அடையாள அட்டை போன்ற ஆவணங்களின் நகல்களு டன் உயிர்வாழ் சான்றை உரிய படிவத்தில் ஓய்வூதியம் பெறும் கருவூலத்துக்கு அனுப்ப வேண்டும். உயிர்வாழ் சான்று படிவத்தை www.tn.gov.in/karuvoolam என்ற இணையதளத்தி லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.வாழ்வு சான்று படிவத்தை ஓய்வூதிய வங்கிக் கணக்கு உள்ள கிளை மேலாளர், அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்தியஅரசு அலுவலர், வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்-இவர்களில் யாரேனும் ஒருவரிடம் சான்றொப்பம் (அட்டஸ்டேஷன்) பெற்று அனுப்ப வேண்டும்.வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூ தியர்கள் அங்குள்ள மாஜிஸ்ட்ரேட், நோட்டரி, வங்கி மேலாளர் அல்லது இந்திய தூதரக அலு வலரிடம் உயிர்வாழ் சான்று பெற்று, ஓய்வூதிய புத்தகம், வங்கி சேமிப்பு கணக்கு எண், ஆதார் அட்டை, வருமான வரி கணக்கு எண், குடும்ப அடையாள அட்டை போன்ற ஆவணங்களின் நகல்களுடன் ஓய்வூதியம் பெறும் கருவூலத்துக்கு அனுப்ப வேண்டும். ஓய்வூதியர்கள் தங்களது ஆதார் எண்ணை கருவூலத்தில் பதிவு செய்து, இணைய தளவழி சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வெளிநாட்டில் வாழும் ஓய்வூதியர்களும், குடும்ப ஓய்வூதியர்களும் ஆதார் எண் பெற்று ஜீவன் பிரமான் போர்ட்டலில் பதிவு செய் திருந்தால் உயிர்வாழ் சான்றை இணையதளம் மூலமே பெற்றுக் கொள்ளலாம். மேலும், குடும்ப ஓய்வூதியர்கள் (நேரில் வருபவர் கள் மற்றும் நேரில் வரஇயலாத ஓய்வூதியர்கள்) மறுமணம் புரிய வில்லை என்பதற்கான உறுதி மொழியினை சமர்ப்பிக்க வேண்டும்.ஓய்வூதியர்கள் தற்போதைய இருப்பிட முகவரி, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருப்பின்) ஆகிய விபரங்களையும் அளிக்க வேண்டும். ஏப்ரல் முதல் ஜுன் வரை நேர்காணலுக்கு வரத்த வறினாலோ அல்லது சான்றொப்பம் செய்யப்பட்ட உயிர்வாழ் சான்றை அனுப்பத் தவறினாலோ ஆகஸ்டு முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும். இதுவரை ஓய்வூதியர் புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பம் அளிக்காதவர்கள் கருவூலத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பொதுத்துறை வங்கிகளின் மூலம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், தமிழ்நாடு மின்சார வாரியம், ரயில்வே, அஞ்சல்துறை, தொழி லாளர் வைப்பு நிதித்திட்டம் (இபிஎப்), மத்திய அரசு ஓய்வூதி யர்கள், உள்ளாட்சி மன்ற ஓய்வூதி யர்களுக்கு மேற்சொன்ன அறிவிப்பு பொருந்தாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசூழியர்கள் வீட்டுக்கடன் திட்டம்

🍎அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம் பற்றி அறியுங்கள்!

🌻பொதுவாக அரசு ஊழியர்களுக்குக் சலுகைகள் அதிகம்தான். அவற்றுள் முதன்மையானது “அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம். காரணம், மிகக் குறைந்த வட்டி வீதம்; வட்டி கணக்கிடும் முறை; இன்னும் சில சிறப்பம்சங்கள்.

🌻ஒரு சில நலத்திட்டங்கள் பயனாளியை முழுமையாகச் சென்றடை யாமைக்கு இரு காரணங்கள்:

1) பயனாளி திட்டத்தை முழுமையாகப்
புரிந்துகொள்ளாமல் திட்டம் பற்றிய சந்தேகத்துக்குத் தாமே விடையைக் கற்பித்துக்கொள்வது

. 2) இத்தனை பயனுள்ள திட்டம் நமக்குக் கிட்டுமா என்ற எதிர்மறை எண்ணம். அதைத் தீர்க்கவே இக்கட்டுரை.

🍊 வட்டி வீதம்:

🌻கடன் தொகையில்

முதல் 50,000 ரூபாய் வரை : 5.5 %

50,001 முதல் 1,50,000 வரை : 7%

1,50,001 முதல் 5,00,000 வரை: 9%

5,00,000க்கு மேல் : 10%

🌻இது இன்றைய தேதியில் உள்ள வட்டி வீதம். இது ஒரு சதம் குறைந்ததும் உண்டு; கூடியதும் உண்டு. என்றாலும் நாம் கடன் பெறும்போது என்ன வட்டி வீதமோ அதன்படிதான் கடன் முடிவில் வட்டிக் கணக்கீடு இருக்கும். மேலும் மாத இறுதியில் நிலுவையாயுள்ள கடனுக்கு மட்டுமே தனி வட்டி.

🍊கடன் வரம்பு:

🌻அரசுப் பணியாளரின் அடிப்படை ஊதியம், தர ஊதியம், தனி ஊதியம், சிறப்பு ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றின் எழுபத்தைந்து மாத ஊதியத்தின் கூடுதல் தொகையே கடன் வரம்பு. இதற்கான உச்சவரம்பு ரூ. 25,00,000.

🌻கணவன் - மனைவி இருவருமே அரசுப் பணியாளர் எனில், இருவரது எழுபத்தைந்து மாத ஊதியத்தின் கூடுதல் தொகையைக் கடனாகப் பெறலாம்.

🌻 அப்போதும் உச்சவரம்பு ரூ. 25,00,000/-க்கு உட்பட்டே இருக்கும். கடன் தொகை யாரேனும் ஒருவர் பெயரில் வழங்கப்படும். ஒருவரிடமே கடன் பிடித்தமும் செய்யக்கூடும்.

🍊யாரெல்லாம் கடன் பெறலாம்?:

🌻சம்பள ஏற்ற முறையில் ( Scale of Pay) முறையான அரசுப் பணியில் ஆறு ஆண்டு காலம் நிறைவுசெய்த அரசுப் பணியாளர், ஆசிரியர், கல்லூரி விரிவுரையாளர் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

🍊கடனின் பல்வேறு பிரிவுகள்:

1) தனது பெயரில் வீட்டு மனை உள்ள பணியாளர் வீடு கட்டுவதற்குக் கடன் கோரலாம். கூரை மட்டம்வரை முதல் தவணையும், அதற்கு மேல் வீட்டைக் கட்டி முடிக்க இரண்டாவது தவணையும் கிடைக்கும்.

2) வீட்டு மனை இல்லாதோர் மனை வாங்கவும், வாங்கிய மனையில் வீடு கட்டவுமாக இரண்டுக்கும் ஒருசேர கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். மனைக்கு 20%முதல் தவணை; பின்னர் வீட்டைக் கட்டி முடிக்க இரு தவணை என மொத்தம் மூன்று தவணைகளில் கடன் விடுவிக்கப்படும்.

3) தனிநபர், தனியார் நிறுவனங்கள் கட்டித்தரும் ஆயத்த வீட்டை வாங்க ஒரே தவணையில் கடன் பெறலாம். பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் தரும் சான்றின் அடிப்படையில் வீட்டின் மதிப்பு கணக்கிடப்பட்டு, வரம்புக்கு உட்பட்டு கடன் தரப்படும்.

4) தனியார் விற்பனை செய்யும் அடுக்ககம் வாங்கவும் கடன் உண்டு. தவணை மொத்தம் மூன்று.

5) தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கட்டி விற்பனை செய்யும் வீடு வாங்கவும், ஒரே தவணையில் கடன் பெறலாம்.

6) தற்போது சொந்தமாக உள்ள வீட்டை விரிவுபடுத்தவும், சீரமைக்கவும் கடன் உண்டு.

7) தன் பெயரிலான மனையில், தனது சொந்த சேமிப்பைக் கொண்டு வீட்டைக் கட்ட ஆரம்பித்த ஒரு பணியாளர், ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் வீடு கட்ட பணவசதி இல்லாத நேர்வில், எஞ்சியுள்ள வேலைக்கான மதிப்பீட்டின்படி கடன் பெறலாம்.

8) தனது பெயரில் மனை இல்லாத பணியாளர், மனைவி பெயரிலான மனை மீது வீடு கட்டக் கடன் விண்ணப்பிக்கலாம். மனைவியிடமிருந்து ஒரு இருபது ரூபாய் முத்திரைத் தாளில் இசைவுக் கடிதம் பெற்று சமர்ப் பித்தால் போதும். இதற்குத் தனியே துறைத் தலைமை அனுமதி பெறவேண்டியதில்லை.

9) வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்த ஒருவர் அது ஏற்கப்படாத நிலையில், அவசரம் கருதி தனிநபரிடம்/வங்கி மூலம் கடன் பெற்று வீட்டு வேலையத் தொடங்கலாம்; தக்க உறுதிமொழியைத் தந்து, அரசுக் கடன் வரப்பெற்றதும் மேற்படி கடனை அடைக்கலாம்.

10) கூட்டுக்குடும்ப வீட்டில் பாத்தியதை உள்ள பணியாளர் தனக்கென வீடு கட்டிக்கொள்ளக் கடன்கோரி விண்ணப்பிக்கலாம்.

🍊விண்ணப்பம்:

🌻வீட்டு மனை எந்த மாவட்டத்தில் உள்ளதோ, அந்த மாவட்ட ஆட்சி யருக்குத்தான் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். வீடுமனை பத்திரம், மனை ஆகியன மனைவி பெயரில் இருப்பின் இசைவுக் கடிதம், வில்லங்கச் சான்று இவற்றுடன் கீழ்க்காணும் ஆவணங்களையும் இரட்டைப் பிரதிகளில் இணைத்துச் சமர்ப்பிக்கவேண்டும்.

* மனை வரைபடம்

* வீட்டு வரைபடம் ( உள்ளாட்சி அனுமதியுடன் )

* கட்டுமானச் செலவு பற்றிய விரிவான மதிப்பீடு மற்றும் சுருக்க மதிப்பீடு

* மனை உரிமையைக் காட்டும் சிட்டா/ அடங்கல் உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்/வட்டாட்சியர் சான்று

* அரசு வழக்கறிஞரின் சட்ட ஒப்புதல் (Legal opinion )

* அலுவலகத்திலிருந்து பெற்ற சம்பளச் சான்று

* உத்தேசப் பணிக்கொடை கணக்கீட்டுப் படிவம்

🍊கடன் ஏற்பளிப்பு:

🌻மேற்கண்ட ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பம் சரியாக இருப்பின் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும் முன்னுரிமை வரிசைப்படி கடன் ஏற்பளிப்பு ஆணை வழங்கப்படும். படிவம் 5-ல் ஒப்பந்தப் பத்திரம் எழுதித்தந்த பின் முதல் தவணை வழங்கப்படும்.

🌻முதல் தவணை பணத்தைக் கொண்டு கூரை மட்டம் வரை வீட்டை கட்டியபின் பொறியாளரிடமிருந்து பெற்ற பயன்பாட்டு (Utilization Certificate) சான்றுடன், படிவம் 3-ல் பெற்ற கடனுக்கு வீட்டை அரசுக்கு அடமானம் எழுதித்தர வேண்டும்.

🌻இந்த அடமானப் பத்திரத்தை சார் பதிவகத்தில் பதிவுசெய்துவிட்டு வந்து ஒப்படைத்த பின் மாவட்ட ஆட்சியர்/ நேர்முக உதவியாளர் / கோட்ட ஆட்சியர் வீட்டை ஆய்வு செய்வார். வரைபடத்தின்படி வீடு கட்டப்பட்டுள்ளதை உறுதிசெய்து சான்றளித்த பின் இரண்டாவது தவணை கிடைக்கும்.

🌻ஆயத்த வீடு வாங்குவோருக்குக் கடனை திருப்பிச் செலுத்த ஒப்பந்தப் பத்திரம் எழுதித் தந்ததும் ஒரே தவணையில் கடன் தரப்படும். இரண்டு மாதத்தில் வீட்டை வாங்கிப் பத்திரப் பதிவு செய்ய வேண்டும். ஆறு மாத காலத்துக்குள் வாங்கிய வீட்டை அரசுக்கு அடமானம் எழுதிப் பதிவு செய்ய வேண்டும்.

🍊கடன் பிடித்தம்:

🌻ஆயத்த வீட்டுக்குக் கடன் பெற்றவர் களுக்குக் கடன் வழங்கப்பட்ட மறு மாதமே பிடித்தம் தொடங்கும், புதிய வீடு கட்ட/வீட்டை விரிவுபடுத்த கடன் பெற்றவர்களுக்குப் புதிய வீட்டில் குடியேறிய மாதம் அல்லது முதல் தவணை பெற்ற தேதியிலிருந்து பதினெட்டாவது மாதத்தில் கடன் தவணை பிடித்தம் செய்யப்படும்.

🌻 இதற்கு அதிகபட்சம் 180 மாதத் தவணைகள்; பின்னர் வட்டி, இதற்கான அதிகபட்ச தவணை 60 மாதங்கள். ஆக, இருபது ஆண்டுகளுக்கு மிகாமல் கடனும் வட்டியும் பிடித்தம் செய்யப்படும்.

🌻இருபது ஆண்டுகளுக்குக் குறை வாகப் பணிக்காலம் உள்ள அரசுப் பணியாளரும் விண்ணப்பிக்கலாம். எஞ்சியுள்ள பணிக்காலத்துக்கு ஏற்றாற்போல் கடன் தொகையும், தவணைக் காலமும் நிர்ணயிக்கப்பட்டு கடன் வழங்கப்படும். சில நேர்வுகளில் வட்டித்தொகையைப் பணிக்கொடையில் பிடித்தம் செய்யவும் கூடும்.

🍊காப்பீடு:

🌻வீட்டைக் கட்டி முடித்ததும் கடன் தொகை மற்றும் வட்டித் தொகை ஆகியவற்றின் கூடுதல் மதிப்புக்கு வீட்டைக் காப்பீடு செய்து காப்பீட்டை கடன் முடியும் வரை புதுப்பித்தல் வேண்டும். காப்பீடு செய்யத் தகுதியான ஐந்து நிறுவனங்கள் அரசுப் பட்டியலில் உள்ளன. அவற்றில் மட்டுமே காப்பீடு செய்ய வேண்டும். கடனும் வட்டியும் பிடித்தம் செய்யப்படும்வரை ஆவணங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும். கடன் தொகையை வட்டியுடன் கட்டி முடித்தபின் அடமானப் பத்திரத்தை ரத்து செய்துவிட்டு வந்து ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

🍎சிறப்பு குடும்ப நலத்திட்டம்:

🌻வீடு கட்டும் கடன் பெற்றோருக்கெனக் குடும்ப பாதுகாப்புத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன்படி, தவணைத் தொகையில் ஒரு சதவீதத் தொகையை மாதச் சந்தாவாகச் செலுத்திவர வேண்டும்.

🌻 கடன்பெற்ற பணியாளர் இறக்கும் பட்சத்தில் கடனும் வட்டியும் இத்திட்டத்தின் மூலம் தள்ளுபடி செய்யப்படும்.

1) தனது பெயரில் வீட்டு மனை உள்ள பணியாளர் வீடு கட்டுவதற்குக் கடன் கோரலாம். கூரை மட்டம்வரை முதல் தவணையும், அதற்கு மேல் வீட்டைக் கட்டி முடிக்க இரண்டாவது தவணையும் கிடைக்கும். 2) வீட்டு மனை இல்லாதோர் மனை வாங்கவும், வாங்கிய மனையில் வீடு கட்டவுமாக இரண்டுக்கும் ஒருசேர கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். மனைக்கு 20%முதல் தவணை; பின்னர் வீட்டைக் கட்டி முடிக்க இரு தவணை என மொத்தம் மூன்று தவணைகளில் கடன் விடுவிக்கப்படும். 3) தனிநபர், தனியார் நிறுவனங்கள் கட்டித்தரும் ஆயத்த வீட்டை வாங்க ஒரே தவணையில் கடன் பெறலாம். பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் தரும் சான்றின் அடிப்படையில் வீட்டின் மதிப்பு கணக்கிடப்பட்டு, வரம்புக்கு உட்பட்டு கடன் தரப்படும

Saturday 11 March 2017

மேல்நிலைப் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும்பணி தொடக்கம்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

மேல்நிலைப் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும்பணி தொடக்கம்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

மேல்நிலை வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் பணி தொடங்கியுள்ளதாக, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு புதன்கிழமை தொடங்கியது. இதில், ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள தேர்வு மையத்தை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பார்வையிட்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 3,371 தேர்வு மையங்களில் 5 லட்சத்து 27,152 மாணவர்கள், 5 லட்சத்து 6,756 மாணவிகள் என மொத்தம் 10 லட்சத்து 33,908 பேர் எழுதுகின்றனர்.ஈரோடு மாவட்டத்தில், தேர்வு நடைபெறும் போது முறைகேடு நடைபெறுவதை தடுக்கும் வகையில், 176 பறக்கும் படை உறுப்பினர்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 10 மொழிகளில் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. கன்னடம், உருது, மலையாளம் என பல்வேறு மொழிகளில் 7,327 பேர் தேர்வு எழுதுகின்றனர். மேல்நிலைப் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.மாநிலத்தில், தமிழ் ஆசிரியர்கள் பற்றாக்குறை என்பது தவறான தகவலாகும். தேவையான தமிழ் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

Tuesday 7 March 2017

TPF TO GPF ACCOUNT SLIP Get on April1

TPF TO GPF ACCOUNT SLIP

ஊராட்சி / நகராட்சி ஆசிரியர்களின்சேமநலநிதி கணக்கானது( TPF ) பொது வருங்கால வைப்புநிதிக்கு (GPF) மாற்றப்பட்டதால் 2014-2015ஆம் வருட கணக்கீட்டு தாள் சரிசெய்யும் பணி மாநில கணக்காயர் அலுவலகத்தில் நிறைவு பெற்று

( AG's OFFICE )பதிவேற்றம் செய்யும் பணி NATIONAL INFORMATION CENTER ( NIC ) மூலம் நடைபெற்று வருகிறது.விரைவில் 2014 -2015 ஆம் ஆண்டு கணக்கீட்டுதாளை பதிவிறக்கம் செய்யலாம்.           

*ஆசிரியர் பொது வருங்கால வைப்புநிதி 2014 -2015 ஆம் ஆண்டு கணக்கீட்டுத்தாள் மார்ச் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு

*கணக்கீட்டுத் தாளை சேமநலநிதி எண் மற்றும் பிறந்ததேதியை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்யலாம்