Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Saturday 24 September 2016

திரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து

திரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து

இன்றைய காலத்தில் கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக வேலையை முடிப்பதே மிகவும் முக்கியம். அதைப்போல் நமது பிரச்சனைகளை சரியாகத் தீர்க்கும் விதமாக எதையும் கையாள வேண்டியுள்ளது. இதற்கு உடலும் உள்ளமும் முழுத் தகுதியுடன் இருந்தால் தான் இவை சாத்தியமாகும். உடலும் உள்ளமும் முழுத்தகுதியுடன் விளங்குவதற்கு, அன்றாட வேலைகளை ஒரு ஒழுங்கு முறையுடன் செய்து வர வேண்டும். முறையான மற்றும் கட்டுப்பாடான உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். வாழ்க்கையை உடலளவில் மிகவும் வசதியான முறையில் வாழ்கிறோம். ஆனால், மனதளவில் மிகவும் அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை தான் வாழ்கிறோம். இத்தகைய வாழ்க்கை முறை சீக்கிரமாகவே முதுமையாக உணர வைத்து விடும் அல்லது பல நோய்களுக்கு வழிவகுக்கும்.

திரிபலா என்றால் என்ன?

திரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் தான் திரிபலா. அம்மூன்று மூலிகைகளாவன நெல்லிக்காய் (Emblica officinalis),கடுக்காய் (Terminalia chebula) மற்றும் தான்றிக்காய் (Terminalia belerica) ஆகும்.

திரிபலா எப்படி நமக்கு உதவுகின்றது?

திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு ஆகும். ஆயுர்வேத மருத்துவர்களால், உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. சர்க சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய இம்மூன்றின் கலவையானது அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தினைப் போல் எந்த ஒரு வியாதியையும் தீர்க்கும் அற்புத சக்தியினைப் பெற்றுள்ளது.

நோய் எதிர்ப்புச் சக்தி

ஆயுர்வேதத்தில் திரிபலா என்பது இளமையை பாதுகாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நமக்கு முதுமைத் தன்மையை நீக்கி இளமைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் என்று பொருள். இது உடல் ஆரோக்கியத்தினை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்வில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். இது எப்போதுமே அதிகமாகவே இருக்க வேண்டும். நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் தடுப்பு அரண்களைத் தாண்டி, உடலின் உள்ளே நுழையும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் 'ஆன்டிபாடி' (antibodies) எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய, இந்த திரிபலா உதவுகிறது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்

உடலில் செல்களுக்கிடையில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில், சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்டாக திரிபலா செயலாற்றுகிறது. நமக்கு முதுமையைத் தரும் முக்கியமான காரணியான "கட்டற்ற காரணிகளை" (free radicals) உற்பத்தி செய்யும் வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் செல்கள் முறையாகச் செயல்படுவதற்கு முக்கியமாகத் தேவைப்படும் மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்புகள், உட்கரு ஆகியவை சிறப்பாகச் செயல்படுவதையும் திரிபலா தூண்டுகிறது.

செரிமானமின்மை

செரிமானக் கோளாறுகளை திரிபலா அற்புதமாக குணப்படுத்துகிறது. அதிலும் உணவுப்பாதையில், மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கரைக்க தேவைப்படும் பைல் (Bile) திரவத்தினை கல்லீரலிலிருந்து சுரக்கவும் உதவுகிறது. உணவுப்பாதையில் தேவையான கார அமிலநிலையை (pH level) தேவையான நிலையில் பேணுவதற்கும் துணை புரிகிறது.

மலச்சிக்கல்

திரிபலா ஒரு சிறந்த குடல் சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் இயற்கை மருந்து திரிபலாவாகும். உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்கும் நச்சு நீக்கியாகவும் இது செயலாற்றுகிறது. சிறந்த மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.

வயிற்றுப் பூச்சிகளும் தொற்றுகளும்

வயிற்றில் பூச்சி வளர்வதையும், தொற்றுக்களையும் கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தது தான் திரிபலா. குறிப்பாக வயிற்றிலிருந்து நாடாப்புழுக்களையும், வளையப்புழுக்களையும் வெளியே அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் உடலில் பூச்சிகளும், நுண்கிருமிகளும் வளர்வதற்கு உதவாத நச்சு நிலையை உடலில் பேணுவதற்கு திரிபலா உதவுகிறது.

இரத்தசோகை

இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க திரிபலா உதவுகிறது. இதன் மூலம் இரத்த சோகை என்னும் நோயைத் தீர்க்க முடியும். (இரத்த சோகை என்பது இரத்தத்தில், ஹீமோகுளோபின் எனப்படும் இரத்த சிவப்பு அணுக்களின் அளவு குறைந்து காணப்படும் நிலையாகும்).

சர்க்கரை நோய்

திரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்கது. நமது கணையத்தினைத் (pancreas) தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்கிறது. கணையத்தில்தான் இன்சுலினைச் சுரக்கும் லாங்கர்ஹான் திட்டுக்கள் (langerhans) எனப்படும் சுரப்பிகள் உள்ளன. மேலும் உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது இன்சுலின் ஆகும். மேலும் திரிபலா கசப்புச் சுவையுடன் இருப்பதனால், சர்க்கரை நோயின் ஒரு நிலையான ஹைப்பர்கிளைசீமியா (hyperglycemia) எனப்படும் அதிக சர்க்கரை நிலையில், இதனை எடுத்துக் கொள்வது சிறப்பானது.

உடல்பருமன்

இயல்பை விட உடல் பருமனானவர்கள், திரிபலாவை உட்கொள்வது மிகவும் பயன்தரும். இதனுடைய மருத்துவக் குணத்தினால் உடலிலுள்ள கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும். நமது உடலில் கொழுப்பு படிவதற்குக் காரணமான அடிபோஸ் செல்களைக் குறி வைத்து செயல்படுவதால், கொழுப்பின் அளவு குறைகிறது. இதன் மூலம் உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது.

சருமப் பிரச்சனைகள்

இது இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டிருப்பதால், சரும நோய்களுக்கான மருத்துவத்தில் பெரும் பங்காற்றுகிறது. இரத்தத்தினைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டிருப்பதால், தொற்று நோய்களையும் தீர்க்கும் குணம் கொண்டுள்ளது.

சுவாசக் கோளாறுகள்
சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது. சைனஸ் என்னும் நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது. மேலும் நமது சுவாசப்பாதையிலுள்ள சளியில் பாக்டீரியாக்கள் வளராமலும் இது தடுக்கிறது.

தலைவலி

தலைவலிக்கு நிவாரணமாகவும் திரிபலா பயன்படுகிறது. குறிப்பாக வளர்சிதை மாற்றத்தின் இடையூறுகளால் உண்டாகும் தலைவலிக்கு சிறப்பான நிவாரணத்தை அளிக்கிறது.

புற்று நோய்

புதுடில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வுகளின் படி, திரிபலாவுக்கு புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களில் மைட்டேடிக் நிலையில் ஸ்பிண்டில் வடிவத்தோற்றம் உண்டாவதைக் குறைக்க உதவி செய்கிறது. அதன்மூலம், புற்றுநோய் செல்களில் மெடாஸ்டேடிஸ் (metastasis) வளரும் அபாயத்தையும் குறைக்கிறது.
By
Dr.M.Muthukumaran
💐🌹🌷🌿🌴🍀🌷🌹💐
 Save Environment: "Let us join hands and create Sustainable World"
🌴🌲🌿🍀🌻🌳🌾🌿🌴

பட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன ?*

பட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன ?*
 
    *பட்டா :*

ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை  அளிக்கும் சான்றிதழ்.

*சிட்டா :*

குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

*அடங்கல் :*

நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

*கிராம நத்தம்*

ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.

*கிராம தானம் :*

கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.

*தேவதானம் :*

கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.

*இனாம்தார் :*

பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.

விஸ்தீரணம்=
நிலத்தின் பரப்பளவு.

நான்கெல்லை= எல்லைகளை குறிப்பது.

ஷரத்து= பிரிவு.

இலாகா = துறை.

*கிரயம்*

நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.

*வில்லங்க சான்று*

ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. நிலத்துண்டின் உரிமையை கட்டுப்படுத்தும் வகையில் அதன் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள பதிவுகளின்  விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.

புல எண் = நில அளவை எண். (Survey number)

இறங்குரிமை =
வாரிசுரிமை (succession)

*தாய்பத்திரம்*
(Parent deed)

ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.

*ஏற்றது ஆற்றுதல்*

குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல். (Specific performance)

*அனுபவ பாத்தியம்*
( possessory right)

நிலத்தில் உரிமையற்றவர் நீண்டகாலம் அதை அனுபவிப்பதால் ஏற்படும் உரிமை.

*சுவாதீனம் ஒப்படைப்பு*

நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.

ஜமாபந்தி =  வருவாய்தீர்வாயம்.

நன்செய்நிலம் =
அதிக பாசன வசதி கொண்டநிலம்.

புன்செய்நிலம் =
பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.

*குத்தகை*
(Lease)

ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.

சொத்து விற்பனை, அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம், உள்ளிட்ட 23 வகையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.

பதிவுதுறையின் www.tnreginet.net என்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி, சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.
              

மருத்துவ விடுப்ப

ABL வகுப்பறையில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் விபரம். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல

ABL வகுப்பறையில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் விபரம். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்.

Tuesday 20 September 2016

இது ஒருவகை விலங்கினம். இதன் பெயர் ஹைக்கூ. பொதுவாக இந்த விலங்கு தனியாக தான் வலம் வரும். இது கைலாச பர்வதம் மற்றும் நேபாள எல்லையில் காணப்படுவது. இந்த ஹைக்கூ பார்வதி தேவி விளையாடுவதற்காக சிவபெருமான் செய்தது எனக் கூறப்படுகிறது.. இது வசந்த காலங்களில் மட்டும் மானிடர்களுக்கு புலப்படும் மற்ற காலங்களில் பனிப்பொழியும் இடங்களில் தஞ்சம் அடைந்து விடும் என கூறப்படுகிறது.

இது ஒருவகை விலங்கினம்.  இதன் பெயர் ஹைக்கூ.  பொதுவாக இந்த விலங்கு தனியாக தான் வலம் வரும். இது கைலாச பர்வதம் மற்றும் நேபாள எல்லையில் காணப்படுவது.  இந்த ஹைக்கூ பார்வதி தேவி விளையாடுவதற்காக சிவபெருமான் செய்தது எனக் கூறப்படுகிறது..  இது வசந்த காலங்களில் மட்டும் மானிடர்களுக்கு  புலப்படும் மற்ற காலங்களில் பனிப்பொழியும் இடங்களில் தஞ்சம் அடைந்து விடும் என கூறப்படுகிறது.

Sunday 18 September 2016

ஓணம் பண்டிகை. குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் :

இன்று (13-09-16) ஓணம் பண்டிகை. குருவாயூர் ஸ்தலம் பற்றிய பத்து சிறப்பு தகவல்கள் :

🌺 குருவாயூரில் உள்ள உன்னி கிருஷ்ணன் எனும் மூலவர் கல்லிலோ வேறு உலோகம் கொண்டோ செய்யப்படவில்லை. பாதாள அஞ்சனம் எனும் கலவையால் செய்யப்பட்டது இச்சிலை.

🌺 இந்த திருக்கோவிலில் கண்ணன் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். உருவத்தில் தான் குழந்தை ஆனால் உலகத்தையே தன் வாயில் அடக்கியவன். சித்திரை விஷு,ஓணம் பண்டிகை மற்றும் ஏகாதசி இங்கு முக்கியமான பண்டிகைகள்.

🌺 குழந்தைக்குப் முதல் முதலாக சோறு ஊட்டும் வைபவம் இங்கு மிகவும் சிறப்பு. இந்த திருக்கோவிலில் இதை செய்தால் அந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் கண்ணன் திருவருளால் உடல் ஆரோக்கியம் கொண்டு வளரும் என்பது நம்பிக்கை.

🌺 இந்த திருக்கோவிலில் பக்தர்களால் வழங்கப்பட்ட யானைகள் மிகவும் விஷேசம். அந்த வகையில் பத்மநாபன், கஜ ராஜன், கேசவன் என்று பெயர் கொண்ட யானைகள் வரலாற்றில் இன்றும் சிறப்பு பெற்றவை ஆகும்.

🌺 இந்த திருக்கோவில் நடை திறப்பின் பொழுது யானைகள் இடம் பெறுகின்றன. திருவிழா காலங்களில் யானைகள் தான் சுவாமியை சுமந்து வரும். அதற்காக யானைகளுக்கு ஓட்ட பந்தயம் நடத்தப்படும். வெற்றி பெரும் யானை தான் சுவாமியை சுமக்கும் பாக்கியம் பெறும்.

🌺 இந்த திருக்கோவிலில் ஸ்வாமி சன்னதி காலை 3 மணிக்கு திறக்கப்படும். முதல் நாள் அணிந்த மாலைகளுடன் மற்றும் அலங்காரத்துடன் பூஜை நடத்தப்படும். இதனை நிர்மால்ய பூஜை என்பார்கள். பின்னர் திருமஞ்சனம் கண்டு மகிழ்வார் கண்ணன்.

🌺 நாராயண பட்டத்திரி சமஸ்கிருதத்தில் எழுதிய நூல் மற்றும் பூந்தானம் என்ற மஹான் எழுதிய ஞானப்பானை என்ற மலையாள நூல் இந்த ஸ்தல சிறப்பினை விளக்குகிறது.

🌺 இந்த ஸ்தலத்தில் உள்ள துலாபாரம் சிறப்பு எண்ணில் அடங்கா. பக்தர்கள் கண்ணனை பிரார்த்தனை செய்து அது நிறைவு பெற்றவுடன் துலாபாரத்திக்ல் பழங்கள் , பொருள், காசுகள் என்று எடைக்கு எடை காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

🌺 குரு பகவானும், வாயு பகவானும் சேர்ந்து உருவாக்கிய ஊர் தான் இந்த சிறப்பு பெற்ற குருவாயூர். கண்ணன் இவர்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் கண்ணன் இந்த ஊருக்கு தனது பெயரை சூட்டி கொள்ளாமல், குரு+ வாயு சேர்த்து குருவாயூர் என பெயர் பெற்றது. இந்த புகழ் பெற்ற திருஸ்தலம் கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

🌺 கிருஷ்ணாட்டம் இங்கு மிகவும் சிறப்பு பெற்றவை. இரவு ஸ்வாமி சன்னதி நடை அடைத்த பிறகு தொடங்கி, காலையில் நடை திறப்பிற்கு முன்பும் ஆடி முடிக்கும் ஆட்டமே கிருஷ்ணாட்டம். மயில் பீலியை கொண்டு கிரீடம் செய்து ஆடுவார்கள். இது கண்ணனுக்கு மிகவும் பிடித்த ஆட்டம் ஆகும்.

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா...

Thursday 15 September 2016

வெற்றுயடைய 21பாடங்கள்.

மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய 21 பாடங்கள் ..!
சிங்கத்திடம் இருந்து ஒன்றையும்,
கொக்கிடம் இருந்து இரண்டையும்,
கழுதையிடம் இருந்து மூன்றையும்,
கோழியிடம் இருந்து நான்கையும்,
காக்கையிடம் இருந்து ஐந்தையும்,
நாயிடம் இருந்து ஆறையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.
1 - சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது,
நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.
2 - கொக்கு ஓடு மீன் ஓட, உறு மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.
3 - கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையை தொடர்ந்து செய்யும்,
வெயில், மழை என்று பாராமல் உழைக்கும்,
தன் முதலாளிக்கு கட்டுப்பட்டிருக்கும் குணம் ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
4 - விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவரவர்க்கு தேவையானவற்றை பிரித்துக் கொடுத்தல்,
தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
5 - இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல்,
தேவையான பொருள்களை சேமித்து வைத்தல்,
யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல்,
தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
6 - கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல்,
உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல்,
நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல்,
தன்னைவிடவும் உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.
யார் ஒருவர் மேலே சொன்ன இந்த இருபத்தியொரு விஷயங்களை கடைபிடிக்கிறாறோ அவர் எதிலும் வெற்றி அடைவார். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.

தேசிய திறனாய்வு தேர்வு தேதி மாற்றம்!!!

தேசிய திறனாய்வு தேர்வு தேதி மாற்றம்!!!

பத்தாம் வகுப்பு மாணவர்கள் எதிர்கொள்ளவிருக்கும், தேசிய திறனாய்வு தேர்வு தேதி திடீரென மாற்றப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களில் திறன்மிக்கவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு மத்திய அரசு, பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை, மாதந்தோறும், கல்வி உதவி தொகை வழங்கி வருகிறது. மாநில, தேசிய அளவில் இரண்டு கட்டங்களாக நடக்கும், நடப்பு ஆண்டுக்கான மாநில தேர்வு, நவ., 6ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வரும் நவ., 6 ல் தமிழகத்தில் நடக்க இருந்த தேசிய திறனாய்வு தேர்வு தேதி மட்டும் ஒரு நாள் முன்கூட்டியே, நவ., 5ல் நடத்தப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்வி அதிகாரிகளிடம் விசாரித்த போது, தமிழக அரசு சார்பில் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் 4 தேர்வு, நவ., 6ல் நடக்கிறது; தேசிய திறனாய்வு தேர்வுக்கான தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது, என்றனர்.

வாகனம் எண்களை அறியும் முறை..

வாகனம் எண்களை  அறியும் முறை..
🚗*Vehicle Identification SMS system :Very Good initiative by Modi government*🚌🚚🏍

*_Any vehicle on the road, if you want to know the name of the owner, it is very simple. Just type VAHAN space Vehicle No and send to 7738299899 , you can get the owner of the vehicle in return SMS, thanx to "DIGITAL INDIA" it will be easy to complain on vehicles who do not follow traffic rules, and commit Road Accidents_*

Eg.
*VAHAN MH12GFXXXX*

*_A very good message please save the number,
100% Tried and tested Successfully 👍_*

try ur vehicle number too..

Monday 12 September 2016

இன்றைய செய்திகள்

🙏🏼மன்றம்🙏🏼*
*🙏🏼மு.மோகன்🙏🏼*
  *9842732480*

*🎽13/9/16🎽*
*செவ்வாய் இன்றைய செய்திகள்* 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
*பொய் சொல்லி நேசிப்பது தவறல்ல! ஆனால்.... பொய்யாக நேசிப்பதுதான் தவறு. காலை வணக்கம்.*
.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 *🎽🎽 ஒரு நல்ல தந்தை ஆயிரம் ஆசிரியர்களுக்கு சமமாக இருப்பார் !*

*🎽🎽 புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட முரண்பாடுகளை நீக்க வேண்டும் !*

*🎽🎽 பள்ளி மாணவர்களுக்கான திறனறித் தேர்வு: 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் !(மறுபதிவு)*

*🎽🎽பிஎஸ்என்எல் : 75 பைசாவிற்கு 1ஜிபி டேட்டா பெறுவது எப்படி..?*

*🎽🎽 புதிய கல்வி கொள்கையில் முடிவெடுக்க ஆசிரியர் சங்கத்திடம் அரசு கருத்து கேட்பு !*

*🎽🎽 சாலை விபத்துகளைத் தடுக்க புதிய திட்டம்!*

*🎽🎽 தேர்ச்சி குறைந்த பள்ளிகளில் திடீர் ஆய்வு !*

*🎽🎽 76 அரசு கலைக்கல்லூரிகளில் உடற்கல்வி இயக்குநராக இல்லை !*
*🎽🎽வேலைவாய்uப்பைக் கொட்டிக் குவிக்கும் நிதித்துறை படிப்பு*

*☔இருதினங்களுக கு மழைக்கு வாய்ப்பு

Sunday 11 September 2016

காலாண்டு தேர்வு தேதி மாற்றம் !

காலாண்டு தேர்வு தேதி மாற்றம் !

தமிழகம் முழுவதும், கடந்த, 8ம் தேதி பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புகளுக்கு, காலாண்டு தேர்வு துவங்கியது. இந்நிலையில், ஓணம் பண்டிகைக்காக, 14ம் தேதி, சில மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது;

 அதனால், காலாண்டு தேர்வு அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. பிளஸ் 2 வகுப்புக்கு, செப்., 12ல் நடக்கவிருந்த ஆங்கிலம் இரண்டாம் தாள், செப்., 20க்கும், 14ம் தேதி நடக்கவிருந்த வணிகவியல், மனை அறிவியல் மற்றும் புவியியல் தேர்வுகள், 22ம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளன.பத்தாம் வகுப்புக்கு, செப்., 15ல் ஆங்கிலம் முதல் தாள்; 16ல் ஆங்கிலம் இரண்டாம் தாள்; 19ல் கணிதம்; 21ல் அறிவியல்; 22ல் விருப்ப மொழி பாடத் தேர்வுகள் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பாடத் தேர்வுகள், வழக்கமான தேதிகளில் நடத்தப்படுகின்றன.

நில அளவைகள் பல்வேறு அளவுகளில் குறிப்பிடப்படுக ின்றன. அது பற்றிய விவரம்:-


நில அளவைகள் பல்வேறு அளவுகளில் குறிப்பிடப்படுக
ின்றன. அது பற்றிய விவரம்:-
1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட்
1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்டர்
1 ஏக்கர் – 0.405 ஹெக்டேர்
1 ஏக்கர் – 4046.82 சதுர மீட்டர்
1 ஏக்கர் – 43,560 சதுர அடிகள்
1 ஏக்கர் – 100 சென்ட்
1 சென்ட் – 435.6 சதுர அடிகள்
1 சென்ட் – 40.5 சதுர மீட்டர்
1 கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர்
1 கிரவுண்ட் – 2400 சதுர அடிகள்
1 மீட்டர் – 3.281 அடி
1 குழி – 44 சென்ட்
1 மா – 100 குழி
1 காணி – 132 சென்ட் (3 குழி)
1 காணி – 1.32 ஏக்கர்
1 காணி – 57,499 சதுர அடி
1 டிசிமல் – 1 1/2 சென்ட்
1 அடி – 12 இன்ச் (30.38 செ.மீ)
1 மைல் – 1.61 கிலோ மீட்டர் (1610 மீட்டர்)
1 மைல் – 5280 அடி (8 பர்லாங்கு)
1 கிலோ மீட்டர் – 1000 மீட்டர் (0.62 மைல்)
1 கிலோ மீட்டர் – 3280 அடி
1 கிலோ மீட்டர் – 5 பர்லாங்கு
1.61 கிலோ மீட்டர் – 1 மைல்
1 பர்லாங்கு – 660 அடி (220 கெஜம்)
1 செயின் – 66 அடி (100 லிங்க்)
1 லிங்க் – 0.66 அடி
1 கெஜம் – 3 அடி
8 பர்லாங்கு – 1 மைல் (201.16 மீட்டர்)
1 ஏர்ஸ் – 1076 சதுர அடி (2.47 சென்ட்)
22 கெஜம் – 1 செயின் (66 அடி)
10 செயின் – 1 பர்லாங்கு
1 இன்ச் – 2.54 செ.மீ
1 செ.மீ – 0.3937 செ.மீ
1 கெஜம் – 0.9144 மீட்டர்
1 மீட்டர் – 1.093613 கெஜம் (3.28 அடி)
1 சதுர மீட்டர் – 10.76391 சதுர அடிகள்
1 சதுர அடி – 0.0929 சதுர மீட்டர்
30 சதுர மைல் – 1 டவுன்சிப்
640 ஏக்கர் – 1 சதுர மைல்...