Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Wednesday 18 June 2014

மாவட்டம் மாறுதல தேதி தள்ளிவைப்பு.

தொடக்கக் கல்வி - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் இணையதள வழியாக நடத்தவும், மாறுதல் கோரும் விண்ணப்பங்களை, இணையதள பதிவு செய்ய இயக்குனர் உத்தரவு.   இ.நி.ஆ மாவட்ட மாறுதல் கலந்தாய்வு 28.6.2014 பதிலாக  30.6.14 & 01.07.14 ஆகிய இரு நாட்களும், ப.ஆ  கலந்தாய்வு 21.6.14 பதிலாக 02.7.14 அன்று  நடைபெறவுள்ளது. DEE - 2014-15 CONDUCT OF ONLINE COUNSELING FOR SG / BT DISTRICT TRANSFER REG PROC CLICK HERE... DEE - DISTRICT TRANSFER APPLICATION CLICK HERE... DEE - ZONE LIST - 1 CLICK HERE... DEE - ZONE LIST - 2 CLICK HERE...

Monday 16 June 2014

தமிழ்பபல்கலைகழகம் ்b,ed

தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சை -2014-2015 பி.எட் சேர்க்கைகான விண்ணப்படிவம்

விதவை/திருமணமாகாத மகளுக்கு ஒய்வூதியம்

ஓய்வூதியம் - அரசு ஊழியர்களின் திருமணமாகாத/ விவாகரத்தான/விதவை மகள்களுக்கு வாழ்நாள் முழுவதற்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்குவது குறித்து தெளிவுரை வழங்குவது- தொடர்பாக click here to download the Govt. Letter No. 43105 Dt: December 02, 2013 - Pensions - Government Employees' Unmarried / Divorced / Widowed Daughters to Provide Clarity with regard to Providing a Lifetime of Family Pension

Wednesday 11 June 2014

பழமொழியின் உண்மை பொருள் .

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... 1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு... தப்புங்க தப்பு,,, ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு... இதாங்க சரி...

2.படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்.... இதுவும் தப்பு சரியானது என்னன்னா ........... படிச்சவன் பாட்டை கொடுத்தான் , எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் ...

3.ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்... இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை ) ஆயிரம் வேரை கொன்றவன் அரை வைத்தியன்.......

4.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு .... சூடு அல்ல சுவடு... சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது... ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும்....

5.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான்.... அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்.... வள்ளல் ஆனவரை கஞ்சனாக மாற்றி விட்டோம் ... காலப்போக்கில்....நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்... மாறுவோம்...பிறரை மாற்றுவோம் .

Tuesday 10 June 2014

வழக்கு அவமதிப்பு.

ஆசிரியர் இடமாற்ற வழக்கு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை மதிப்பது இல்லை நீதிமன்றத்தை அதிகாரிகள் மதிக்காதது வேதனை அளிக்கிறது என்று உயர் நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பதி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ஆசிரியர் தேர்வு வாரி யம் மூலம் நான் உள்பட சுமார் 100 பேர், ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டோம். 2006ல் தேர்வு செய்யப்பட்ட எங்களுக்கு மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.இந்த 3 மாவட்டங்களில் சுமார் 280 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகள் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சிறுபான்மையினர் துறையின் கீழ் இயங்கி வருகிறது. இந்த துறையின் கீழ் இயங்கும் பள்ளியில் பணியாற்றும் எங்களை, மற்ற மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிக்கு மாற்ற வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம். இந்த மனுவை நீதிபதி கிருபாகரன் விசாரித்து, எங்களை வேறு மாவட்ட அரசு பள்ளிக்கு மாற்ற பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை அமல்படுத்தாததால் அதிகாரிகள் மீது அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்து எங்களுக்கு இடமாற்றம் வழங்க உத்தரவிட்டது. அதன்பிறகும் அதிகாரிகள் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கவில்லை. எனவே உயர் நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நீதிபதி கிருபாகரன் விசாரித்து நேற்று பிறப்பித்த உத்தரவு:‘‘உயர் நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் மதிக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இப்படி அதிகாரிகள் உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால், மக்களிடம் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விடும். நீதி நிர்வாகத்தில் குறுக்கீடு செய்வது போலாகிவிடும். அதிகாரிகள் கோர்ட் உத்தரவை மதிப்பது இல்லை. இதை தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நீதி பரிபாலனம் சரியாக செய்ய முடியாது. அதிகாரிகள் செயல் நீதித்துறைக்கு ஆபத்தாகவிடும். எனவே வரும் 23ம் தேதி பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வரன் முருகன், பிற்பட்டோர் நலத்துறை ஆணை யர் அசோக் டோங்க்ரே ஐ.ஏ.எஸ் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை.

மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை புதுடில்லி: மத்திய அரசு ஊழியர் ஒருவருக்கு, மாற்றுத்திறனாளி குழந்தை இருந்தால், அந்தக் குழந்தைக்காக அவர், அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அவரை இடமாற்றம் செய்தால், குழந்தையின் மறுவாழ்வு நடவடிக்கைகள் பாதிக்கும். மாற்றுத்திறனாளி குழந்தைகளை கவனிக்க, அதிக செலவாகும். அத்தகைய ஊழியர்களுக்கு, வழக்கமான இடமாற்றத்தில் இருந்து விதி விலக்கு அளிக்கலாம். அவர்கள் இடமாற்றத்தை ஏற்க மறுத்தால், அவர்களிடம் தானாக முன்வந்து பதவி விலகி விடும்படி கேட்பதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, மத்திய பணியாளர் நலத்துறை தெரிவித்துள்ளது. suresh v

M.b.b.s/b.d.s randam numbee

Know Your Random Number-M.B.B.S. / B.D.S. Courses 2014-15 Session CLICK HERE-Know Your Random Number

Transfer application

Transfer application.

தொடக்கக்கல்வி துறை ஆசிரியருக்கான பதவியுயரவு/ பணிமாறுதல்

அரசாணை 137/ப.க/நாள்:9.6.14 இன் படி தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு விவரம்: ஜூன் 18 காலை BT பணிநிரவல் மாலை மாறுதல், பதவி உயர்வு மாறுதல் பதவிஉயர்வு கலந்தாய்வு: (அரசாணை 137/ப.க/நாள்:9.6.14) விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.14-13.6.14 ஜூன் 16 காலை AEEOs மாறுதல் ஜூன் 16 மாலை MHM to AEEO ஜூன் 17 காலை MHM மாறுதல் மாலை பதவிஉயர்வு ஜூன் 18 காலை BT பணிநிரவல் மாலை மாறுதல், பதவி உயர்வு ஜூன் 19 BT ஒன்றியம் விட்டு மாறுதல் ஜூன் 21 BT மாவட்ட மாறுதல் ஜூன் 23 காலை PHM மாறுதல் மாலை பதவி உயர்வு ஜூன் 24 இநிஆ பணிநிரவல் ஜூன் 25 இநிஆ மாறுதல் ஜூன் 26 SGT ஒன்றிய மாறுதல் ஜூன் 28 SGT மாவட்ட மாறுதல்

Sunday 8 June 2014

தமிழ்நாடு திறந்தநிலைப்பல்கலைகழகம் பி.எட்படிப்பு விண்ணப்பம்

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை பி.எட். படிப்பு நாளை முதல் விண்ணப்பம்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், பி

மத்திய அரசு ஊழியர்களுக்குஆறு நாட்கள் வேலையாட்கள

June 8, 2014 மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் ஆறு நாட்கள் வேலை: விரைவில் அமல்? › வாரத்தில், ஐந்து நாட்கள் மட்டுமே வேலைபார்த்து வந்த, மத்திய அமைச்சகங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர் களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையி...

Saturday 7 June 2014

எம்.எஸ.சி்இண்டஸ்டிரியல் கெமிஸ்ட்ரி க்கு பட்டதாரி பணி.

எம்.எஸ்.சி இண்டஸ்டிரியல் கெமிஸ்ட்ரி படித்தவர்களுக்கு வேதியியல் பாடப்பிரிவு பட்டதாரி ஆசிரியர் பணி உயர் நீதிமன்றத்தில் இண்டஸ்டிரியல் கெமிஸ்ட்ரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் படிப்பை முடித்த திருவருட்செல்வன், மதிவாணன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் பாடப்பிரிவில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி யிடத்துக்கு நாங்கள் விண்ணப்பம் செய்தோம். நாங்கள் இண்டஸ்டிரியல் கெமிஸ்ட்ரி பாடப்பிரிவில் எம்எஸ்சி படித்துள்ளோம். எம்எஸ்சி வேதியியல் படித்தவர்களுக்கு மட்டும்தான் வேதியியல் பாடப்பிரிவில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி வழங்கப்படும் என்று கூறி எங்களுக்கு பணி வழங்கவில்லை. கடந்த 20102011ல் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில் எங்களின் பாடப்பிரிவைக் காட்டி எங்களுக்கு பணி வழங்கவில்லை. எனவே, எங்களுக்கு பணி வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் பால்வசந்தகுமார், சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார் பில் ஆஜரான கே.வெங்கடரமணி வாதிடும்போது, பாரதியார்பல்கலைக்கழகத்தில் உள்ள எம்எஸ்சி இண்டஸ்டிரியல் கெமிஸ்ட்ரி பாடப்பிரிவும் எம்எஸ்சி வேதியியல் பாடப்பிரிவும் சமமானது தான் என்று உயர் நீதிமன்றம் ஏற்கனவே பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் மனுதாரர்கள் இருவரும் அதே பிரச்னையில்தான் உள்ளனர் என்றார். இதையடுத்து, நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு: மனுதாரர்கள் இருவரும் படித்த எம்எஸ்சி இண்டஸ்டிரியல் கெமிஸ்ட்ரி படிப்பும், எம்எஸ்சி வேதியியல் படிப்பும் சமமானதுதான் என்றும் இரு பிரிவுகளில் படித்தவர் களுக்கான கல்வித் தகுதியும் ஒன்று தான் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு தீர்ப்பளித்துள்ளது. எனவே, இந்த வழக்கில் மனுதாரர்கள் மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் பாடப்பிரிவில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்ற தகுதியுள்ளவர்கள்தான். எனவே, அவர்களுக்கு பணி வழங்குவது குறித்து 8 வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உத்தரவிட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆலயத்தில கடைப்பிடிக்க வேண்டியவை.

திருக்கோயிலில் செய்த்தகாதவை எவை? 01. குளிக்காமல் ஆலயத்திற்குச் செல்வது. 02. உலராத ஈர உடையுடன் செல்வது. 03. தலையில் தொப்பி, தலைப்பாகையுடன் செல்வது. 04. சுவாமிக்குக் காலை நீட்டி உட்காருதல். 05. சுவாமிகளைத் தொட்டு வணங்குதல். 06. லௌகீக சம்பந்தமான உரையாடல்கள், வீண் பேச்சுக்கள். 07. கோயிலின் உள்ளும் புறமும் அசுத்தம் செய்தல். 08. தீபாராதனை நிகழும் போது எதிர் மறைத்தல். 09. தீபாராதனை நிகழும் போது விழுந்து வணங்குதல். 10. அபிஷேகம் நடக்கும் போது வரம் கேட்டல். 11. சுவாமிகள் எண்ணைக்காப்பு அணிந்து இருக்கும் போது வரம் கேட்டல். 12. வீபூதி மற்றும் பிரசாதங்களை பூமியில் சிந்துதல். 13. மற்ற பக்தர்களுக்கு இடையூறு செய்தல். 14.மனத்தை ஒருமுகப்படுத்தாமல் அலையவிடுதல்.

கல்வித்துறையில் சீர்திருத்தம். தேவை

கல்வித்துறையில் தேவைப்படும் சீர்திருத்தம் – 1 பள்ளிக் கல்வியில் 1 முதல் 5 வகுப்புகளைக் கொண்ட தொடக்கப் பள்ளிகள், 1 முதல் 8 வகுப்புகளைக் கொண்ட நடுநிலைப் பள்ளிகள், 6 முதல் 10 வகுப்புகளைக் கொண்ட உயர்நிலைப் பள்ளிகள், 6 முதல் 12 வகுப்புகளைக் கொண்ட மேல்நிலைப் பள்ளிகள் என நான்கு வகையான பள்ளிகள் உள்ளன. அவற்றை 1. 1 முதல் 5 வகுப்புகளைக் கொண்ட தொடக்கப் பள்ளிகள் 2. 6 முதல் 10 வகுப்புகளைக் கொண்ட உயர்நிலைப் பள்ளிகள் 3. 11 முதல் 12 வகுப்புகளைக் கொண்ட மேல்நிலைப் பள்ளிகள் என மூன்று வகையான பள்ளிகள் மட்டுமே உள்ளவாறு மாற்றியமைக்கப்பட வேண்டும். தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களும், உயர்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களும், மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களும் பணியாற்றும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். ஒன்றிய அளவில் தொடக்கப் பள்ளிகள் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் [AEEO - Elementary] அவர்களாலும், மாவட்ட அளவில் தொடக்கப் பள்ளிகள் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் [DEEO - Elementary] அவர்களாலும், மாவட்ட அளவில் உயர்நிலைப் பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலர் (உயர்நிலை) [DEO - Secondary] அவர்களாலும், மாவட்ட அளவில் மேல்நிலைப் பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலர் (மேல்நிலை) [DEO - Higher Secondary] அவர்களாலும் நிர்வகிக்கப்பட வேண்டும். சுமார் 75 பள்ளிகளுக்கு ஒரு மாவட்டக் கல்வி அலுவலர் என்ற வகையில் கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். இது பள்ளிகளைத் திறம்பட நிர்வகி்க்கவும், பள்ளிகளின் தரத்தைப் பார்வையிடவும், மாணவர்கள்களின் கற்றல் அடைவினை மேம்படுத்தவும், மாணவ, மாணவியரின் கல்வித் தரத்தினை உயர்தவும் உதவியாக இருக்கும். மாவட்ட அளவில் அனைத்து வகைப் பள்ளிகளும் முதன்மைக் கல்வி அலுவலர் [CEO] அவர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும். மாநில அளவில் தொடக்கப் பள்ளிகள் தொடக்கக் கல்வி இயக்குநர் [Director - Elementary] அவர்களாலும், மாநில அளவில் உயர்நிலைப் பள்ளிகள் உயர்நிலைக் கல்வி இயக்குநர் [Director - Secondary] அவர்களாலும், மாநில அளவில் மேல்நிலைப் பள்ளிகள் மேல்நிலைக் கல்வி இயக்குநர் [Director - Higher Secondary] அவர்களாலும் நிர்வகிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு தொடக்கப் பள்ளியும் [மாணவர்கள் எண்ணிக்கைக்குத் தக்கவாறு] குறைந்தது மூன்று இடைநிலை ஆசிரியர், ஒரு தமிழாசிரியர் பணியிடங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளியும் [மாணவர்கள் எண்ணிக்கைக்குத் தக்கவாறு] குறைந்தது ஐந்து பட்டதாரி ஆசிரியர், ஒரு தமிழாசிரியர், ஒரு உடற்கல்வி ஆசிரியர், ஒரு இளநிலை உதவியாளர், ஒரு அலுவலக உதவியாளர், ஒரு இரவுக்காவலர் பணியிடங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளியும் [மாணவர்கள் எண்ணிக்கைக்குத் தக்கவாறு] குறைந்தது ஆறு முதுகலை பட்டதாரி ஆசிரியர், ஒரு உடற்கல்வி இயக்குநர், ஒரு உதவியாளர், ஒரு ஆய்வக உதவியாளர், ஒரு அலுவலக உதவியாளர், ஒரு இரவுக்காவலர் பணியிடங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

பெயரில் தமிழில் தலையெழுத்து.

DEE.14109/j2/2014 dt.06.06.2014 Dir ordered Govt Staffs and Teachers - Initial of their names must be written in Tamil- reg

தலைமை ஆசிரியர் கூட்டம்.

மழை நீர சேகரிப்பு வாரம். கொண்டாடுவது தொடர்பாக தமிழகத்தில் அனைத்து ஒன்றியங்களிலும தலைமையாசிரியர் கூட்டம்  இந்த வாரம் நடைபெறும்
மழை நீர் சேகரிப்புக்குறித்து தலைமையாசிரியர் கூட்டத்தில். வலியுறுத்தப்படும்.

தலைமையாசிரியர்க்கு நோட்டிஸ்

இலவச நோட்டு, புத்தகம் வினியோகம்: தலைமை ஆசிரியருக்கு 'நோட்டீஸ்' சிவகங்கையில், இலவச நோட்டு, புத்தகம் வினியோகம் தொடர்பாக, அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு 'நோட்டீஸ்' அனுப்ப பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் உத்தரவிட்டார். நடப்பு கல்வியாண்டு கோடை விடு முறைக்கு பின், ஜூன் 2ந்தேதி பள்ளிகள் திறக்கும் போது, மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகம் வழங்க வேண்டுமென பள்ளிக் கல்வித்துறைக்கு அரசு உத்தரவிட்டது. இதன்படி, நோட்டு, புத்தகம், காலணி, பை உள்ளிட்ட நலத்திட்டங்கள் மாணவர்கள் வழங்கப்பட்டுள்ளதா என, ஆய்வு செய்ய இரு மாவட்டத்திற்கு ஒரு இணை இயக்குனர் வீதம் பள்ளிக்கல்வித்துறை நியமித்தது. ஜூன் 2ல் குறிப்பிட்ட சில பள்ளிகளில் காலை முதலே இணை இயக்குனர்கள் ஆய்வு செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில், திருப்புவனம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் இடைநிலைக்கல்வி இணை இயக்குனர் முத்து பழனிச்சாமி ஆய்வு செய்தார். அப்போது, இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்கியது குறித்து, உறுதி செய்வதற்கான மாணவர்களின் கையெழுத்து பெறவில்லை என்பது தெரிய வந்தது. இந்நிலையில் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கருதி, அப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப, இணை இயக்குனர் உத்தரவிட்டார். முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் அவருக்கு விளக்க 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளனர். அவரது பதிலை பொறுத்து, அவர் மீதான நடவடிக்கை தெரிய வரும் என, சிவகங்கை கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.

மழை நீர் சேகரிப்பு.வாரம்

பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு வாரம்: பள்ளி கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை பள்ளி கல்வித்துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 'அனைத்து வகை பள்ளிகளிலும், மழைநீர் சேகரிப்பு வாரம் கொண்டாட வேண்டும்' என, முதல்வர், உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஜூன் 9 முதல், 13 வரை, 6 முதல், 9ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியரிடையே, மழைநீர் சேகரிப்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டும். வரும், 9ம் தேதி, பள்ளி அளவில், மழைநீர் சேகரிப்பு, விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும். பள்ளியை சுற்றியுள்ள பகுதியில், பேரணி நடத்த வேண்டும். ஜூன் 10 ல், 'மழைநீர் சேகரிப்பு, வளமான எதிர்காலம்' என்ற தலைப்பில், கட்டுரை போட்டியும், ஜூன் 11 ல், ஓவிய போட்டியும், ஜூன்13 ல் மாணவர்களை, 'புராஜக்ட்' செய்யவும், அறிவுறுத்த வேண்டும். மாவட்ட அளவில், 13ம் தேதி, கண்காட்சி நடத்த வேண்டும். சிறந்த படைப்புகளுக்கு, பரிசு வழங்க வேண்டும், என்றார்.

தமிழில் தலையெழுத்து( initial in tamil) போட உத்மரவ

அனைத்து அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பெயரின் தலைப்பெழுத்துக்களை (Initial) தமிழில் மட்டுமே எழுத தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு.

Wednesday 4 June 2014

இலங்கை பிரதமரின் தற்போதைய பரிதாபநிலை.

கழுகார் பதில்கள்! ராஜபக்ஷேவின் டெல்லி வருகையை எதிர்த்து, டெல்லி சென்று வைகோ போராட்டம் நடத்தினாரே... அதன் பயன் என்ன? 'ராஜபக்ஷே இந்தியாவுக்கு எப்போது வந்தாலும் கறுப்புக் கொடி காட்டப்படும்’ என்று வைகோ அறிவித்து இருந்தார். அதன்படி இந்தப் போராட்டமும் நடத்தப்பட்டு இருக்கிறது. 'சார்க் நாடுகளின் அனைத்து தலைவர்களையும் அழைக்கிறோம்’ என்று மத்திய அரசு அதிகாரிகள் இதற்குக் காரணம் சொன்னார்கள். இந்த எதிர்ப்புகள் காரணமாக ராஜபக்ஷேவின் வருகையைத் தடுக்க முடியவில்லை என்பது உண்மைதான். ஆனால், மோடியின் பதவியேற்பு விழாவுக்கு மறுதினம் ராஜபக்ஷே உள்பட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு விருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதனை கடைசி நேரத்தில் பிரதமர் மோடி, ரத்து செய்துவிட்டார். 'செக்யூரிட்டி காரணங்களுக்காக இந்த விருந்து கேன்சல் செய்யப்படுகிறது’ என்று சொல்லப்பட்டது. உண்மையான காரணம், 'இப்படி ஒரு விருந்து நடப்பது விமர்சனங்களை இன்னும் அதிகமாக்கும்’ என்று அவர் நினைத்ததாக டெல்லி அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு இருக்கிறது. வைகோ, பழ.நெடுமாறன், சீமான், வேல்முருகன், ம.க.இ.க மற்றும் பல்வேறு இயக்கத்தினர் நடத்திய எதிர்ப்புப் போராட்டங்கள், முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை, கருணாநிதி வெளியிட்ட கருத்து... 'ஈழப்பிரச்னையை பக்குவமாகக் கையாள வேண்டும்’ என்பதை மத்திய அரசுக்கு உணர்த்தியிருக்கிறது.

ஆசிரியர் பயிற்சி குஜராத் பின்பற்ற மத்திய அரசு முடிவு.

ஆசிரியர் பயிற்சி முறையில் குஜராத் மாடல் அமலாகிறது நாடு முழுவதும், ஆசிரியர் பயிற்சி முறையில், குஜராத் மாதிரியைப் பின்பற்ற, மத்திய மனித வளத்துறை முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பயிற்சி முறை, மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. பொதுவாக, குறிப்பிட்ட, ஓராண்டோ அல்லது இரண்டு ஆண்டுகளோ பயிற்சி பெறும் மாணவர்கள், ஆசிரியர்களாக தேர்ச்சி பெற்று, பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்கின்றனர். ஆசிரியராக வேலைக்கு சேர்ந்த பிறகு அவர்கள், பெரிய அளவில் ஆசிரியர் பயிற்சி பெறுவதில்லை. இந்த முறை குஜராத்தில் கிடையாது. ஆசிரியராக இருப்ப வர்கள், மாதம் ஒருமுறை அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் பயிற்சிகளை நிறைவு செய்து கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக, தகவல், தொழில்நுட்பம், அறிவியல், சட்டம் போன்ற பாடப் பிரிவுகளில் தொடர்ந்து பயிற்சி பெற்று வர வேண்டும். குஜராத்தில் பின்பற்றப்படும் இந்த முறையை, நாடு முழுவதும் அமல்படுத்த, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி முடிவு செய்துள்ளார். இது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் முறை.

புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் முறை இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் முறை தொடர்பாக அரசாணையை தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே இருந்த முறையுடன் ஒப்பிடும்போது இந்தப் புதிய முறையில் ஒவ்வொரு மதிப்பெண் சதவீதத்துக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் கிடைக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அடுத்த 2 வாரங்களில் இந்த ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று 29 ஆயிரம் பேரும், 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப் பிறகு 45 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்றனர். இவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவடைந்த நிலையில், பழைய வெயிட்டேஜ் மதிப்பெண் முறை ரத்து செய்யப்பட்டதால் தேர்வுப் பட்டியல் வெளியிடுவது தாமதமாகி வந்தது. இப்போது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் முறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 74 ஆயிரம் பேரில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் 15 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள வெயிட்டேஜ் மதிப்பெண் விவரம்: இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 25 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக வழங்கப்படுகிறது. இதில் மொத்தம் 100 வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்கு தேர்வர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். அதேபோல், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 10 மதிப்பெண்ணும், பட்டப் படிப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், பி.எட். தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு 60 மதிப்பெண்ணும் வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக வழங்கப்படும். இதில் மொத்தம் 100 வெயிட்டேஜ் மதிப்பெண்ணுக்கு தேர்வர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனம் இருக்கும். முந்தைய முறையில் குறிப்பிட்ட சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் அனைவருக்கும் ஒரே வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்பட்டது. இந்தப் புதிய முறையில் ஒவ்வொரு சதவீத மதிப்பெண்ணுக்கும் ஒரு வெயிட்டேஜ் மதிப்பெண் கிடைக்கும் வகையில் மதிப்பிடும் முறை மாற்றப்பட்டுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வர்கள் ஒரே வெயிட்டேஜ் மதிப்பெண் பெற்றிருந்தால் அவர்களின் பிறந்த தேதி தேதி அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். வயதில் மூத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றம் என்ன? ஏற்கெனவே இருந்த வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையில் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண் வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக இருந்தது. இதில் பிளஸ் 2 தேர்வில் 90 சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற அனைவருக்கும் 15 மதிப்பெண் வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய முறையில் 91 சதவீத மதிப்பெண் பெற்றவருக்கு 13.65 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 92 சதவீத மதிப்பெண் பெற்றவருக்கு 13.80 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும், 93 சதவீத மதிப்பெண் பெற்றவருக்கு 13.95 வெயிட்டேஜ் மதிப்பெண்ணும் கிடைக்கும். அதேபோல், பழைய வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் பிளஸ் 2 தேர்வில் 50 சதவீதத்துக்குக் கீழ் மதிப்பெண் பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படவில்லை. இந்தப் புதிய முறையில் அவர்களுக்கு 7.5 வெயிட்டேஜ் மதிப்பெண் கிடைக்கும்.