பெட்ரோல் - டீசல் விலை உயர்வு
Labels
- 112.
- 7 வது ஊதியக் குழு பரிந்துரைகளில் திருத்தம்:
- B
- ed கற்பித்தல் பயிறசி அதே பள்ளியில் எடுக்கலாம.
- http://www.agae.tn..nic.in/onlinegpf/
- Mandram news
- www.mandramtn.blogspot.com
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்..
- நீதி மன்ற வழக்கு
- போலியோ சொட்டு மருந்து முகாம்
- ஜேக்டோ மனித சங்கி போராட்டம்.நாளேடுகளில் வந்த் செய்திகள்
Blog Archive
-
▼
2016
(482)
-
▼
August
(31)
- பெட்ரோல் - டீசல் விலை உயர்வு...மக்கள் அதிருப்தி...
- எச்சரிக்கை
- உலகின் சிறந்த 10 தத்துவ ஞானிகள் என்ன சொல்கிறார்கள்..?
- தேசியக்கொடியை பறக்க விடுதல் சார்ந்த அறிவுரைகள்
- Retirement Gratuity and Death Gratuity to the empl...
- தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் தமிழ்,ஆங...
- நல்லாசிரியர் விருதுக்கான பரிசுத் தொகை ரூ.10 ஆயிரமா...
- இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் என்று புதிய கல்...
- உங்கள் சம்பளச் சான்றை ஆன் லைனில் பார்க்க கீழ்கண்ட ...
- தஞ்சை பெரிய கோவில்
- விவசாய சங்க போராட்டத்திற்கு ஆசிரியர் மன்றம் ஆதரவு
- பிறந்தநாள் சூளுரை..
- Pavalar birthday
- ஒரே கல்வியாண்டில் இரு வெவ்வேறு பட்டப்படிப்புகள் வெ...
- பாவலர் பிறந்த நாள்
- பிறப்பு,இறப்பு தீட்டு விஷயங்கள் (தீட்டு விஷயங்கள...
- கவிஞர் நா.முத்துக்குமார் மறைவு.
- ஆசிரியர்கள் கவுன்சிலிங் : போலீஸ் பாதுகாப்புக்கு ஏற...
- கணினி பற்றி அறிவோம..
- *VEC Account ஐ SMC Account ஆக மாற்ற என்ன செய்ய வேண...
- உயர் கல்வி நிறுவனங்களில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்...
- Today news.
- இளைய ஆசிரியர்களுக்கு கட்டாய இடமாற்றம் இடைநிலை ஆசி...
- தொடக்கக்கல்வி - மாவட்ட மாறுதல் கலந்தாய்வு குறித்து...
- லஞ்சம் தராமல் உதவி பெறவேண்டுமா?
- பாஸ்போர்ட் பெறும் வழிமுறைகள்
- NHIS - 2016 Spouse Option Certificate
- Brte உயர்கல்விக்கான பின்னேற்பு...
- New Motor Vehicle Bill (INDIA) approved and the pe...
- பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் தொடர்பான தகவல்:
- *பொதுமக்கள் இலவச சட்ட உதவி கோர 044-25342441 ...
-
▼
August
(31)
Wednesday 31 August 2016
Saturday 27 August 2016
எச்சரிக்கை
#தெரியுமா?
இனி வாட்ஸ்அப் தகவல்கள் அனைத்தும் ஃபேஸ்புக்கோடு இணைக்கப்படும்: தவிர்ப்பது எப்படி?
கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனத்தை கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிய போது பலரும் ப்ரைவசி குறித்த தங்களது கவலைகளை வெளிப்படுத்தினர். அதற்கு பதிலாக வாட்ஸ்அப் தரப்பு பயனலார்களின் தகவல்கள் ஒரு போதும் விளம்பர தேவைகளுக்காக பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் எப்போதும் போலவே அவர்களின் பிரைவசிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று கூறியிருந்தது.
தற்போது இதற்கு நேர் மாற்றமாக வாட்ஸ்அப் தகவல்கள் அனைத்தும் ஃபேஸ்புக்கோடு இணைக்கப்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவிப்பு செய்துள்ளது. இதில் ஒருவரது வாட்ஸ்அப் அலைபேசி எண், அவரது நண்பர்கள் மற்றும் அவரது தகவல்கள் அனைத்தும் ஃபேஸ்புக்குடன் பகிரப்படும். பின்னர் ஃபேஸ்புக் இந்த தகவல்களை பயன்படுத்தி தனது பக்கத்தில் ஒருவருக்கான விளம்பரங்கள், நட்புப் பட்டியல் ஆகியவற்றைக் காட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இருந்து விடுபட நினைப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பாக ஃபேஸ்புக் பிரவசி பாலிசியின் மாற்றத்தை பயனாளர்களிடம் காட்டி ஒப்புதல் வாங்குகிறது வாட்ஸ்அப். இதில் தங்களது வாட்சைப் தகவல்களை ஃபேஸ்புக்கோடு பகிர விருப்பமில்லை என்று தேர்வு செய்தவர்களுக்கு இப்போது பிரச்சனை இல்லை. எபோதும் போல எதையும் படிக்காமல் “I Agree” என்று தேர்வு செய்தவர்களுக்கு 30 நாள் கேடு கொடுத்துள்ளது ஃபேஸ்புக்.
இதற்குள் தங்களது தேர்வை மாற்றிக்கொள்ளலாம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨
உங்களது தெரிவை மாற்ற வேண்டுமென்றால்:
Whatsapp > Settings > Account > சென்று “Share My Account Info” தேர்வு செய்யப்பட்டிருந்தால் அதனை நீக்கிவிடுங்கள்.
#படித்தது
உலகின் சிறந்த 10 தத்துவ ஞானிகள் என்ன சொல்கிறார்கள்..?
உலகின் சிறந்த 10 தத்துவ ஞானிகள் என்ன சொல்கிறார்கள்..?
உலகின் சிறந்த 10 தத்துவ ஞானிகள் சொன்ன புகழ்பெற்ற தத்துவங்கள் இங்கே...
சாக்ரடீஸ்
உலகத்தின் முதல் தத்துவஞானி என போற்றப்படுபவர் சாக்ரடீஸ். மதவாதிகளை நோக்கி “கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர். உலகில் எந்த மதமும் தோன்றாத காலக்கட்டத்திலேயே மனித அறிவின் தோற்றம், தர்க்க சாஸ்திரம் ஆகியவற்றில் திறன் பெற்று விளங்கியவர்.
''எனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்கு தெரியும், ஏனெனில் நான் ஒரு அறிவாளி'' என்பது சாக்ரடீஸின் புகழ்பெற்ற தத்துவம்.
பிளாட்டோ
க்ரீஸில் கி.மு 348-ம் ஆண்டுகளில் வாழ்ந்த தத்துவஞானி. பிளாட்டோவின் தத்துவங்கள்தான் 2400 ஆண்டுகளாக உலகத்தை ஆண்டு வருகிறது. சாக்ரடீஸின் மாணவரான பிளாட்டோ மேற்கத்திய அறிவியல், வாழ்வு மற்றும் கணித தத்துவத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர். கண்மூடித்தனமான மத நம்பிக்கைகளை உடைத்ததில் ப்ளாட்டோவின் தத்துவங்களுக்கு பெரும் பங்கு உண்டு.
'உள்ளடக்கத்துடன் வாழ்வதே மிகப்பெரிய செல்வம். நல்லவர்களுக்கு சட்டங்கள் தேவையில்லை, ஏனெனில் அவர்கள் பொறுப்புடன் வாழ்வார்கள். கெட்டவர்கள் தங்களுகே உரிய சட்டத்தை உருவாக்கிக்கொள்கிறார்கள்'' என்பது பிளாட்டோவின் புகழ் பெற்ற தத்துவம்.
அரிஸ்டாட்டில்
மனிதன், இறைவன், அரசியல், மூன்று பிரிவுகளையும் அலசி ஆராய்ந்து தமது தத்துவ தரிசனமாக உலக்கு வங்கியவர் அரிஸ்டாட்டில். இவர் பிளாட்டோவின் மாணவர். மாவீரனாகத் திகழ்ந்த அலெக்சாண்டருக்கு பன்னிரண்டு ஆண்டுகள் நண்பராகவும், ஆசிரியராகவும் இருந்தவர் அரிஸ்டாட்டில்.
“இந்த உலகம் இறைவனால் தோற்றுவிக்கப்படவில்லை. ஆனால் இந்த உலகை இயக்குபவன் இறைவனே!” “மனிதன் தனிமனிதச் சிந்தனை கொள்ளாமல், சமூகச்சிந்தனையோடு வாழ வேண்டும்'' என்கிறார் அரிஸ்டாட்டில்
கார்ல் மார்க்ஸ்
பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் முக்கியமானவர் கார்ல் மார்க்ஸ். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில், வரலாற்றை ஆராய்ந்து சொன்ன இவரது தத்துவங்கள், சமூக பொருளாதார அரசியல் அரங்கில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது.
''மூலதனம் இறந்த தொழிலாளரை போன்றது. இது உயிருள்ள தொழிலாளரின் உழைப்பை உறிஞ்சும் வாழ்கிறது'' என்பது மார்க்ஸ்சின் கருத்து.
டார்வின்
'மனிதன் எப்படித் தோன்றியிருப்பான்?' என்ற பன்னெடுங்காலமாக தொங்கி நின்ற கேள்விக்கு தெளிவான விடையை சொன்னவர். மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியை பல நூற்றாண்டுக்கு முன்பே தெளிவுபடுத்திய வகையில், பல ஆராய்ச்சிக்கான கதவுகளை அகல திறந்து வைத்த பெருமைக்குரியவர்.
''மனிதன் ஒரு மணி நேரத்தை வீணாக்கிறான் என்றால், அவன் வாழ்கையில் மதிப்பை உணரவில்லை என்று அர்த்தம்'' என்கிறார் டார்வின்
விவேகானந்தர்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவராக திகழ்ந்தவர் விவேகானந்தர். இவரின் கருத்துக்கள் இளைஞர்களிடையே மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.
'' நீங்கள் யாருக்கும் உதவி செய்ய முடியாது. சேவை மட்டுமே செய்ய முடியும்'' என்பது விவேகானந்தரின் புகழ் பெற்ற கருத்து.
வள்ளலார்
வள்ளலார் என்ற இராமலிங்க அடிகளார் ஓர் சிறந்த தத்துவ ஞானி. சாதி சமய வேறுபாட்டுக்கு எதிரான தமது நிலைப்பாடு காரணமாக ஆன்மீகவாதிகளாலே விமர்சனத்திற்கு உள்ளானவர். ''அறியாமை என்னும் மாயத்திரைகள் நம்மை விட்டு விலகினால் அருட்பெருஞ்சோதியான ஆண்டவரை நாம் தரிசிக்கலாம்'' என்பது வள்ளலாரின் வாதம்.
ஓஷோ
சிறு வயதிலிருந்தே தியானத்தில் ஈடுபட்ட ஓஷோ, தன்னுடைய இருபத்தொன்றாவது வயதில் ஞானம் அடைந்தார். ஞானமடைதல் என்பது, முழுமையான தன்னுணர்வு அல்லது விழிப்பு உணர்வு நிலை என்பதை குறிப்பதாகும். கெளதமபுத்தர், கபீர், ரமணர் மற்றும் பலர் இப்படி ஞானம் அடைந்தவர்கள்தான்.
''கடவுள் உன்னிடமிருந்து தன்னை எப்போதும் மறைத்துக் கொள்வதில்லை.நீ தான் உன்னுடைய கோப தாபங்களால் அவரைக் காணமுடியாதபடி கண்களை மூடி வைத்துக் கொள்கிறாய்'' என்கிறார் ஓஷோ.
புத்தர்
தத்துவ ஞானி கௌதம புத்தரை அடிப்படையாகக்கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. கௌதமருடைய வாழ்க்கையையும், வழிகாட்டல்களையும் புத்த மதம் ஏற்றுக்கொண்டுள்ளது.
''பிராத்தணைகளை விட மிக உயர்ந்தது பொறுமை தான்'' என்பது புத்தரின் புகழ்பெற்ற பொன்மொழி.
மகாவீரர்
சமண சமயத்தின் மையக் கருத்துக்களை நிறுவிய துறவி. மூன்று ரத்தினங்கள் என அழைக்கப்படும் ‘நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல்’ என்ற போதனையை போதித்தவர்.அவருடைய போதனைகளும், தத்துவங்களும் இன்றும் உலகம் முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு போற்றப்படுகிறது.
''கவனமுடன் செயலாற்றுங்கள்..நல்ல விஷயங்களில் மட்டும் மனதை திருப்புங்கள்.'' என்பது மகாவீரரின் அறிவுரை.
Friday 26 August 2016
Retirement Gratuity and Death Gratuity to the employees covered by New defined Cps
Retirement Gratuity and Death Gratuity to the employees covered by New defined Cps
தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் தமிழ்,ஆங்கிலம்,கணக்கு, அறிவியல்,மற்றும் சமுகவியல் பாடங்களில் உயர்கல்வி தகுதி பெற்றால் மட்டுமே ,ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும்-இயக்குநர் அறிவுரைகள்
தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் தமிழ்,ஆங்கிலம்,கணக்கு, அறிவியல்,மற்றும் சமுகவியல் பாடங்களில் உயர்கல்வி தகுதி பெற்றால் மட்டுமே ,ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும்-இயக்குநர் அறிவுரைகள்
Wednesday 24 August 2016
நல்லாசிரியர் விருதுக்கான பரிசுத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்வு: மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அறிவிப்பு
நல்லாசிரியர் விருதுக்கான பரிசுத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்வு: மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அறிவிப்பு
தமிழக அரசால் வழங்கப்படும் நல்லாசிரியர் விருது பெறுவோருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அவர் அறிவித்ததாவது,
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கு பரிசுத் தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.
நல்லாசிரியர் விருது பெற ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த தொகை உயர்த்தப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
Saturday 20 August 2016
இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் என்று புதிய கல்விக் கொள்கை சொல்கிறது. இப்பாடத்திட்டத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கல்லணை கட்டி தமிழன் ஆற்றுநீர்ப்பாசனம் மூலம் வேளாண்மை செய்தான் என்ற வரலாறு இடம்பெறுமா? மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டதே இந்தியத் துணைக்கண்டத்தில் வாழும் பல்வேறு தேசிய இன மக்களின் மொழி, பண்பாடு, கல்வி, அரசியல், பொருளாதார நடவடிக்கைகளில் தனித் தன்மைகளைப் பாதுகாப்பதற்கே. ஆனால் மத்தியில் கூட்டுக்கொள்ளை, மாநிலத்தில் தனிக்கொள்ளை என்ற நிலை உருவாகும் வகையில் பிழைப்புவாத அரசியல் வளர்ந்துவிட்டது. தேசிய இன உரிமைகளுக்கு புதிய கல்விக் கொள்கை முற்றிலும் எதிரானது என்ற நிலையில் இருந்து ஒவ்வொரு மாநில மக்களும் இதை எதிர்க்கவேண்டும். ஆனால் இந்திய தேசிய ஒற்றுமை என்ற மாயவலைக்குள் சிக்கியவர்களால் கல்விக் கொள்கையை மாநில மக்களின் அடிப்படை இறையாண்மை மீதான தலையீடாகப் பார்க்கமுடிவதில்லை. சில உள்ளீடுகள் தவறானவை. அவற்றை மாற்றவேண்டும் என்று மட்டுமே பார்க்க முடிகிறது. தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் சூழலில் ஒடிசா மாநில மக்களின் சமூக, பொருளாதார, கலாச்சாரத்திற்கேற்ற கல்விக் கொள்கையை ஒடிசா அரசு உருவாக்கும் முயற்சியில் கடந்த ஆண்டிலேயே மேற்கொண்டது. ஒடிசாவைப் பார்த்து அனைத்து மாநிலங்களும் பின்பற்றவேண்டும். அதுதான் மாநில மக்களின் இறையாண்மையைக் காப்பதாக அமையும்.
இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் என்று புதிய கல்விக் கொள்கை சொல்கிறது. இப்பாடத்திட்டத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கல்லணை கட்டி தமிழன் ஆற்றுநீர்ப்பாசனம் மூலம் வேளாண்மை செய்தான் என்ற வரலாறு இடம்பெறுமா? மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டதே இந்தியத் துணைக்கண்டத்தில் வாழும் பல்வேறு தேசிய இன மக்களின் மொழி, பண்பாடு, கல்வி, அரசியல், பொருளாதார நடவடிக்கைகளில் தனித் தன்மைகளைப் பாதுகாப்பதற்கே. ஆனால் மத்தியில் கூட்டுக்கொள்ளை, மாநிலத்தில் தனிக்கொள்ளை என்ற நிலை உருவாகும் வகையில் பிழைப்புவாத அரசியல் வளர்ந்துவிட்டது. தேசிய இன உரிமைகளுக்கு புதிய கல்விக் கொள்கை முற்றிலும் எதிரானது என்ற நிலையில் இருந்து ஒவ்வொரு மாநில மக்களும் இதை எதிர்க்கவேண்டும். ஆனால் இந்திய தேசிய ஒற்றுமை என்ற மாயவலைக்குள் சிக்கியவர்களால் கல்விக் கொள்கையை மாநில மக்களின் அடிப்படை இறையாண்மை மீதான தலையீடாகப் பார்க்கமுடிவதில்லை. சில உள்ளீடுகள் தவறானவை. அவற்றை மாற்றவேண்டும் என்று மட்டுமே பார்க்க முடிகிறது.
தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் சூழலில் ஒடிசா மாநில மக்களின் சமூக, பொருளாதார, கலாச்சாரத்திற்கேற்ற கல்விக் கொள்கையை ஒடிசா அரசு உருவாக்கும் முயற்சியில் கடந்த ஆண்டிலேயே மேற்கொண்டது. ஒடிசாவைப் பார்த்து அனைத்து மாநிலங்களும் பின்பற்றவேண்டும். அதுதான் மாநில மக்களின் இறையாண்மையைக் காப்பதாக அமையும்.
Friday 19 August 2016
உங்கள் சம்பளச் சான்றை ஆன் லைனில் பார்க்க கீழ்கண்ட முகவரியில்* 1. உங்கள் PF / CPS number ஐ பதிவிடவும் 2. SELECT SUFFIX : PTPF 3. உங்கள் பிறந்த தேதி இவற்றை பதிவிட்டு , பெறலாம். TN ePayslip - e-Payroll epayroll.tn.gov.in › epayslip
உங்கள் சம்பளச் சான்றை ஆன் லைனில் பார்க்க கீழ்கண்ட முகவரியில்*
1. உங்கள் PF / CPS number ஐ பதிவிடவும்
2. SELECT SUFFIX : PTPF
3. உங்கள் பிறந்த தேதி
இவற்றை பதிவிட்டு , பெறலாம்.
TN ePayslip - e-Payroll
epayroll.tn.gov.in › epayslip
Thursday 18 August 2016
தஞ்சை பெரிய கோவில்
பலகோடி நூறாண்டு நம் தஞ்சை கோயில் வாழ வேண்டும் ! ! !
இதை படிப்பதற்கே தலை சுற்றுகிறது ,
இது எப்படி சாத்தியமானது ? ? ! !
கோயில் எப்படி கட்டப்பட்டது ???? என்ற தகவல் உங்களுக்காக.
படிப்பதற்கு பெரியதாக உள்ளது என பாதியில் நிறுத்திவிட வேண்டாம்.. இதை ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ளவேண்டும் .
தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.
தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.
இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..
பெரிய கோயில் அளவுகோல்...
எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழமே இருவிரல் நீட்டித்து பதினாறு விரல் அகலத்து, ஆறுவிரல் உசரத்து பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.
தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.
இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. சுமார்
1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு
180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின் 13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.
அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தர் என்று தெரிகிறது.
சாரங்களின் அமைப்பு
கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் - ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் - சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.
இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.
இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் (நஇஅஊஊஞகஈ) அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் (யஉதபஐஇஅக டஞநப), நேர்ச்சட்டங்கள் (தமசசஉதந), குறுக்குச் சட்டங்கள் (ஆதஅஇஉந) அனைத்தும் முட்டுப் பொருத்துகள் (இஅதடஉசபதவ ஒஞஐசபந) மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள உதவின.
அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.
மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறிப்பிடத்தக்கதது. !!