Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Monday 27 June 2016

SRல் இருக்கவேண்டிய பதிவுகள்

ஒரு பணியாளரின் பணிப் பதிவேட்டில் இருக்க வேண்டிய பதிவுகள்

1. முதல் பக்கத்தில் உங்களைப் பற்றிய முழு விபரம் இருக்க வேண்டும்.,பெயர், தந்தை பெயர், முழுவிலாசம், கல்வித் தகுதி, மதம், இனம், தாய்மொழி போன்ற விபரங்கள். அத்துடன் மருத்துவத் தகுதிச் சான்றிதழும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
2. பணி நியமன முழு விபரம்.
3. பணி வரன்முறை படுத்தப்பட்ட விபரம்.

4. தகுதி காண் பருவம் முடிக்கப்பட்ட விபரம்.
5. GPF/TPF/CPS எண் விபரம்.
6. NHIS / SPF 1/SPF2 பிடித்தம் தொடங்கப்பட்ட / முடிக்கப்பட்ட விபரம்.
7. ஒவ்வொரு ஆண்டும் பணி சரிபார்ப்பு செய்யப்பட்ட விபரம் (ServiceVerification).
8. ஆண்டு ஊதிய உயர்வு அளிக்கப்பட்ட விபரம் .
9. மருத்துவ விடுப்பு / ஈட்டிய விடுப்பு / அரைச்சம்பள விடுப்பு / ஊதியமில்லா விடுப்பு போன்ற விடுப்புகள் எடுக்கப்பட்ட விபரம்.
10. ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யப்பட்டவிபரம் (15 /30 நாட்கள்).
11. உயர்கல்வி படிக்க முனு அனுமதி / பின் ஏற்பு அளிக்கப்பட்ட விபரம்.
12. உயர்கல்வி தேர்ச்சி பெற்ற விபரம்.
13. சான்றிதழ்கள் உண்மைத் தன்மை பெறப்பட்ட விபரம்.
14. ஊக்க ஊதியம் வழங்கப்பட்டதற்கான முழுமையான ஆணை விபரம் ஊதிய நிர்ணய விபரத்துடன்.
15. தேர்வுநிலை / சிறப்பு நிலை வழங்கப்பட்ட விபரம் ஊதிய நிர்ணய விபரத்துடன்
16. ஊதியத்தில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும் அது பற்றிய முழு விபரம். எடுத்துக்காட்டாக தர ஊதியம் ரூ.2800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தனி ஊதியம் ரூ.750மற்றும் 4300 தரஊதியம் பெறுவோருக்கு சிறப்பு படி ரூ.500 வழங்கப்படும் விபரம்.
17. பதவி உயர்வு பெறும்போது தொடர்புடைய ஆணை பதிவு, புதிய பதவி பணிவரன் முறை செய்யப்பட்ட விபரம், 22B சான்று பெறப்பட்ட விபரம், பதவி உயர்வு ஊதிய நிர்ணய விபரம்.
18. பதவி உயர்வு பெறும் போது ஊதிய நிர்ணயம் செய்யப்படும் தேதி குறித்து தனியரின் விருப்பம் ஏதேனும் இருந்தால் அது பற்றிய பதிவு.
19. ஊதியக்குழு ஊதிய நிர்ணயம் முழு விபரம் மற்றும் தனியரின் விருப்பம் (option)குறித்த பதிவு.
20. வாரிசுதாரராக யாரை நியமனம் செய்திருக்கிறோம் என்பது பற்றிய விபரம்.
21. பொது மாறுதல்களில் வந்த விபரம்.

Tuesday 21 June 2016

உலகில் உள்ள 18 மிகப்பெரிய இந்து கோவில்களில் 12 கோவில்கள் தமிழ் நாட்டில் உள்ளன :

உலகில் உள்ள 18 மிகப்பெரிய இந்து கோவில்களில் 12 கோவில்கள் தமிழ் நாட்டில் உள்ளன :
எவ்வளவு சந்தோசமான விஷயம்,பார்த்து விட்டு ஷேர் செய்யுங்கள் :
1.அங்கோர் வாட்,கம்போடியா,ஆசியா
2.ஸ்ரீ ரங்காநாதசுவாமி கோவில்,ஸ்ரீரங்கம்,திருச்சி, தமிழ்நாடு
3.அக்ஷர்தம் கோவில்,டெல்லி
4.பேலூர் மடம்ராமகிருஷ்ண கோவில்,மேற்கு வங்காளம்.
5.தில்லை நடராஜர் கோவில், சிதம்பரம்,தமிழ்நாடு
6.பிரம்பணன், திருமூர்த்தி கோவில்,இந்தோனேசியா.
7.பிரஹதீஸ்வரர் கோவில்,தஞ்சாவூர்,தமிழ்நாடு
8.அண்ணாமலையார் கோவில்,திருவண்ணாமலை, தமிழ்நாடு
9.ராஜகோபால சுவாமி,கோவில்,மன்னார்குடி, தமிழ்நாடு
10.ஏகாம்பரேஸ்வரர் கோவில்,காஞ்சிபுரம்,தமிழ்நாடு
11. ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில்,காஞ்சிபுரம், தமிழ்நாடு
12.தியாகராஜேஸ்வரர் கோவில்,திருவாரூர்,தமிழ்நாடு
13.ஜம்புகேஸ்வரர் கோவில், திருவானைக்காவல், திருச்சி,தமிழ்நாடு
14.நெல்லையப்பர் கோவில்,திருநெல்வேலி,தமிழ்நாடு
15.மீனாக்ஷி அம்மன் கோவில்,மதுரை ,தமிழ்நாடு
16.வைத்தீஸ்வரன் கோவில்,தமிழ்நாடு
17.ஜகன்னாதர் கோவில்,பூரி,ஓடிஷா
18.பிர்லா மந்திர் லக்ஷ்மிநாராயண் கோவில்,நியூ டெல்லி
மூலம் : விக்கிப்பீடியா இணையதளம்.
Among the World Largest 18 Hindu Temples, 12 Temples are in our Tamilnadu.See all and share it.
1. Angkor Wat Temple ,Angkor, Cambodia
2. Sri Ranganathaswamy Temple, Srirangam,Tirchy,Tamil Nadu.
3. Akshardham Swaminarayan Temple,Akshardham,New Delhi
4. Ramakrishna temple,Belur Math,Belur, West Bengal
5. Thillai Nataraja Temple,Chidambaram ,Tamil Nadu
6. Prambanan,Trimurti temple, Yogyakarta, Indonesia
7. Brihadeeswarar Temple,Thanjavur,Tamil Nadu
8. Annamalaiyar Temple,Tiruvannamalai,Tamil Nadu
9. Rajagopalaswamy temple,Mannargudi, Tamilnadu
10. Ekambareswarar Temple,Kanchipuram, Tamil Nadu
11. Varadharaja Perumal Temple,Kanchipuram,Tamil Nadu
12. Thyagarajaswamy Temple,Tiruvarur, Tamil Nadu
13. Jambukeswarar Temple,Thiruvanaikaval,Trichy, Tamil Nadu,
14. Nellaiappar Temple,Tirunelveli, Tamil Nadu
15. Meenakshi Amman Temple,Madurai,Tamil Nadu
16. Vaitheeswaran Koil,Vaitheeswaran Koil,Tamil Nadu
17. Jagannath Temple,Puri,Odisha.
18. Birla Mandir Laxminarayan Temple,New Delhi

ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்று மாணவர்கள் சொன்னவை இவை.

ஆசிரியர்  எப்படி இருக்க வேண்டும் என்று மாணவர்கள் சொன்னவை இவை.

1. எங்களை அடிக்க கூடாது

2. எங்களுக்கு பாடம் நன்றாக சொல்லித்தர வேண்டும்

3. வகுப்பை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும்

4. நல்லவராக இருக்க வேண்டும்

5. எங்கள் வகுப்பறையிலேயே இருக்க வேண்டும்

6. புது புது கதைகள் சொல்ல வேண்டும்

7. புது புது பாட்டுகள் சொல்லி தர வேண்டும்

8.அன்பாக இருக்க வேண்டும்

9. நண்பர்களோடு விளையாட விடவேண்டும்

10. எங்கள் ஆசிரியர் எந்த தப்பும் பண்ணக்கூடாது

11. மற்ற ஆசிரியர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

12. எங்களோடு மகிழ்ச்சியாக கலந்துரையாடவேண்டும்

13. வகுப்பறையில் தொலை பேசியில் பேசக் கூடாது.

14. எங்களை சுற்றுலாவுக்கு கூட்டிச் செல்ல வேண்டும்.

15. எங்கள் ஆசிரியர் எல்லாரிடமும் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்

16. எங்களுக்கு நல்ல பழக்க வழக்கங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும்

17. எங்களை தூய்மையாக இருக்க பழக்கப்படுத்த வேண்டும்.

18. எங்கள் மேல் அக்கரையுடன் இருக்க வேண்டும்

19. எங்களை புரிந்து கொள்ள வேண்டும்

20. எங்களை பாதுகாக்க வேண்டும்

21 எங்கள் ஆசிரியர் எங்களை போல (குழந்தையை போல) இருக்க வேண்டும்.

22. எங்களை திட்ட கூடாது

23. எங்களை அமைதிப்படுத்தனும்

24. எங்கள் அம்மாக்களிடம் அன்பாக பேச வேண்டும்.

25. பள்ளியில் விளையாடும் ஆசிரியராக இருக்க வேண்டும்.

26.எங்கள் ஆசிரியருக்கு கெட்ட பழக்கம் இருக்க கூடாது.

27. பாடம் நடத்தும் போது செல்லை பேசிக்கொண்டே வெளியே போக கூடாது.

28.அவர் நல்ல ஆசிரியர் என்ற பட்டம் வாங்க வேண்டும்

29. அவர் சிறந்தவராக இருக்க வேண்டும்.

30. அவருக்கு நாங்க கேட்கிற கேள்விக்கெல்லாம் பதில் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

மாணவர்கள் விரும்பும் ஆசிரியராக நாம் இருப்போம்.

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது.

🌺💐💐💐💐💐🌺  🌷தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது... 🌷
🌺💐💐💐💐💐🌺
தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.
🌺💐💐💐💐💐🌺
தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.
🌺💐💐💐💐💐🌺
இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.
🌺💐💐💐💐💐🌺
சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண்
இதன் விளக்கம் :-
🌺💐💐💐💐💐🌺
இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்] சோர்வு,
பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.
🌺💐💐💐💐💐🌺
எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.
🌺💐💐💐💐💐🌺
உத்தமம் கிழக்கு
ஓங்குயிர் தெற்கு
மத்திமம் மேற்கு
மரணம் வடக்கு
கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.
🌺💐💐💐💐💐🌺  தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.
🌺💐💐💐💐💐🌺  மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.
🌺💐💐💐💐💐🌺  வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.
🌺💐💐💐💐💐🌺
இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி
தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன்,
இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். 🌺💐💐💐💐💐🌺  மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும்
அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன்
(பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். 🌺💐💐💐💐💐🌺 குப்புறப் படுக்கக் கூடாது,
தூங்கவும் கூடாது. 🌺💐💐💐💐💐🌺 இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை
நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும்.
இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம்
வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான
🌺💐💐💐💐💐🌺
வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.
🌺💐💐💐💐💐🌺
இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.
🌺💐💐💐💐💐🌺
வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும்.
🌺💐💐💐💐💐🌺
இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.
🌺💐💐💐💐💐🌺
இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்
🌺💐💐💐💐💐🌺
சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை நாமும் பின்பற்றி பயன் பெருவோம்.
🌺💐💐💐💐💐🌺

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 ஒரு சிறப்புப்பார்வை.

*தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005*
                   -ஒரு சிறப்பு பார்வை.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் *(Right to Information Act)* என்பது குடிமக்கள் தாங்கள் தெரிந்துகொள்ள விரும்பும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களின் நிலைத்தகவல்களை உரிமையுடன் கேட்டுப்பெற வழிவகுக்கும் முக்கியமான சட்டமாகும்.

2005-ம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டத்தின் மூலம் அதற்கு விண்ணப்பிப்பது எப்படி?, அது சம்பந்தப்பட்ட புகாரை எங்கு அளிக்க வேண்டும்? என்பது பற்றி இப்போது காண்போம்...

*மனுவை எப்படி எழுத வேண்டும்?*

💎`ஆமாம்’, `இல்லை’ என்பது போன்ற கேள்வி – பதில் உரையாடலாக இல்லாமல், நமக்குத் தேவையான தகவல் என்ன என்பதை தெளிவாகவும், விரிவாகவும் கேட்க வேண்டும்.

💎உதாரணமாக, ‘நான் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தேன். உரிய நாட்கள் கடந்தும் அது இன்னும் எனக்குக் கிடைக்கவில்லை. என் விண்ணப்பத்துக்கான ரசீதை இதனுடன் இணைக்கிறேன். என் விண்ணப்பத்தின் நிலைத்தகவல் என்ன? இன்னும் எத்தனை நாட்களில் வாக்காளர் அடையாள அட்டை என் கைகளில் கிடைக்கும்? நான் செய்யவேண்டிய அலுவல் எதுவும் இருக்கிறதா?’ என விளக்கமாக எழுதி, தாசில்தார் அலுவலகத்தில் *"ஆர்டிஐ"* மனுவை அளிக்க வேண்டும் (இந்தச் செயல் முறை, புது குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்துக் கிடைக்கவில்லை என்றாலும் பொருந்தும்).

நினைவில்கொள்க… போதிய விவரங்கள் இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்படும்.

*மனுவை யாருக்கு அனுப்ப வேண்டும்?*

💎எந்த அரசு அலுவலகத்தில் தகவல் கோரப்படுகிறதோ, அந்த அலுவலகத்தின் *"பொதுத் தகவல் அதிகாரி*க்கு *"PIO"*  *(Public Information Officer)* அனுப்ப வேண்டும். "பொதுத் தகவல் அதிகாரி" என்பவர், ஒவ்வொரு அரசு சார் நிறுவனங்களின் செய்தித் தொடர்பு ஒருங்கிணைப்பாளர்.

💎 *"பெறுநர்"* முகவரியில், ‘பொதுத் தகவல் அதிகாரி’ எனக் குறிப்பிட்டு, எந்த அலுவலகமோ, அதன் பெயரையும் முகவரியையும் குறிப்பிட்டு, அந்த தபாலில்
10 ரூபாய்க்கான நீதிமன்ற கட்டண முத்திரை வில்லை *(Court Fee Stamp)* ஒட்டி அனுப்ப வேண்டும்.

தமிழ்நாட்டில் இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களிடம் தமிழிலேயே மனு அனுப்பி, தமிழிலேயே பதில் தரச் சொல்லிக் கோரலாம்.

*"மனுவுக்கு பதில் வரவில்லை என்றால்?*

💎பொதுத் தகவல் அதிகாரியிடம் இருந்து பதில் கடிதம் வரவில்லை என்றால், அவருக்கு மேலே உள்ள *"மேல்முறையீட்டுக்கான அதிகாரி"*க்கு *(Appellate Authority)* மனு அனுப்பலாம்.

💎மனுவில் ‘பொருள்’ என்பதன் கீழ், பொது தகவல் அதிகாரி இந்நாள் வரை தகவல் தராததன் காரணமாக, *"ஆர்டிஐ"* சட்டத்தின் படி அவர் பணிபுரியவில்லை எனத் தெளிவாக குறிப்பிட்டு, முதலில் அனுப்பிய மனுவின் நகலையும் தவறாமல் இணைத்து அனுப்ப வேண்டும்.

*அதிகாரிகள் எத்தனை நாட்களுக்குள் நமக்கு பதில் தர வேண்டும்?*

💎பொதுத் தகவல் அதிகாரி, 30 முழு வேலை நாட்களுக்குள் பதில் அனுப்ப வேண்டும். அதே போல, மேல்முறையீடு செய்த அதிகாரியும் 30 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்.

*இரண்டு அதிகாரிகளிடம் இருந்தும் பதில் வரவில்லை என்றால்?*

💎அடுத்ததாக *"ஆர்டிஐ"*யின் தலைமையான மாநில தகவல் ஆணையத்துக்கு…

*"மாநிலத் தகவல் ஆணையம்",* நம்பர் – 2, ஆலையம்மன் கோயில் தெரு, தி.நகர், சென்னை-18’ என்ற முகவரிக்கு மனு அனுப்பலாம். மிகப்பெரும்பாலும், முதல் இரண்டு மனுக்களுக்கே பதில் கிடைத்துவிடும்.

*மனுவுக்கு பதில் வரும் போது கவனிக்க வேண்டிய அம்சம் என்ன?*

💎தபால் வந்தவுடன், அதைப் படித்துப் பார்க்காமல் கையெழுத்திட்டு வாங்கும்பட்சத்தில்,
*"உள்ளே உள்ளவற்றை படித்துப் பார்க்காமல் பெற்றுக் கொள்கிறேன்"* என்று ரசீதில் எழுதி, கையெழுத்திட்டுக் கொடுக்கலாம். போதிய தகவல்கள் இல்லை என்று நாம் மேல்முறையீடு செய்யும்போது அது நமக்கு உதவும்.

யாரெல்லாம் வீட்டு கடன் பெறலாம்?:

யாரெல்லாம் வீட்டு கடன் பெறலாம்?:

சம்பள ஏற்ற முறையில் ( Scale of Pay) முறையான அரசுப் பணியில் ஆறு ஆண்டு காலம் நிறைவுசெய்த அரசுப் பணியாளர், ஆசிரியர், கல்லூரி விரிவுரையாளர் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

கடனின் பல்வேறு பிரிவுகள்:

1) தனது பெயரில் வீட்டு மனை உள்ள பணியாளர் வீடு கட்டுவதற்குக் கடன் கோரலாம். கூரை மட்டம்வரை முதல் தவணையும், அதற்கு மேல் வீட்டைக் கட்டி முடிக்க இரண்டாவது தவணையும் கிடைக்கும்.

2) வீட்டு மனை இல்லாதோர் மனை வாங்கவும், வாங்கிய மனையில் வீடு கட்டவுமாக இரண்டுக்கும் ஒருசேர கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். மனைக்கு 20%முதல் தவணை; பின்னர் வீட்டைக் கட்டி முடிக்க இரு தவணை என மொத்தம் மூன்று தவணைகளில் கடன் விடுவிக்கப்படும்.

3) தனிநபர், தனியார் நிறுவனங்கள் கட்டித்தரும் ஆயத்த வீட்டை வாங்க ஒரே தவணையில் கடன் பெறலாம். பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் தரும் சான்றின் அடிப்படையில் வீட்டின் மதிப்பு கணக்கிடப்பட்டு, வரம்புக்கு உட்பட்டு கடன் தரப்படும்.

4) தனியார் விற்பனை செய்யும் அடுக்ககம் வாங்கவும் கடன் உண்டு. தவணை மொத்தம் மூன்று.

5) தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கட்டி விற்பனை செய்யும் வீடு வாங்கவும், ஒரே தவணையில் கடன் பெறலாம்.

6) தற்போது சொந்தமாக உள்ள வீட்டை விரிவுபடுத்தவும், சீரமைக்கவும் கடன் உண்டு.

7) தன் பெயரிலான மனையில், தனது சொந்த சேமிப்பைக் கொண்டு வீட்டைக் கட்ட ஆரம்பித்த ஒரு பணியாளர், ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் வீடு கட்ட பணவசதி இல்லாத நேர்வில், எஞ்சியுள்ள வேலைக்கான மதிப்பீட்டின்படி கடன் பெறலாம்.

8) தனது பெயரில் மனை இல்லாத பணியாளர், மனைவி பெயரிலான மனை மீது வீடு கட்டக் கடன் விண்ணப்பிக்கலாம். மனைவியிடமிருந்து ஒரு இருபது ரூபாய் முத்திரைத் தாளில் இசைவுக் கடிதம் பெற்று சமர்ப் பித்தால் போதும். இதற்குத் தனியே துறைத் தலைமை அனுமதி பெறவேண்டியதில்லை.

9) வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்த ஒருவர் அது ஏற்கப்படாத நிலையில், அவசரம் கருதி தனிநபரிடம்/வங்கி மூலம் கடன் பெற்று வீட்டு வேலையத் தொடங்கலாம்; தக்க உறுதிமொழியைத் தந்து, அரசுக் கடன் வரப்பெற்றதும் மேற்படி கடனை அடைக்கலாம்.

10) கூட்டுக்குடும்ப வீட்டில் பாத்தியதை உள்ள பணியாளர் தனக்கென வீடு கட்டிக்கொள்ளக் கடன்கோரி விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம்:

வீட்டு மனை எந்த மாவட்டத்தில் உள்ளதோ, அந்த மாவட்ட ஆட்சி யருக்குத்தான் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். வீடுமனை பத்திரம், மனை ஆகியன மனைவி பெயரில் இருப்பின் இசைவுக் கடிதம், வில்லங்கச் சான்று இவற்றுடன் கீழ்க்காணும் ஆவணங்களையும் இரட்டைப் பிரதிகளில் இணைத்துச் சமர்ப்பிக்கவேண்டும்.

* மனை வரைபடம்

* வீட்டு வரைபடம் ( உள்ளாட்சி அனுமதியுடன் )

* கட்டுமானச் செலவு பற்றிய விரிவான மதிப்பீடு மற்றும் சுருக்க மதிப்பீடு

* மனை உரிமையைக் காட்டும் சிட்டா/ அடங்கல் உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்/வட்டாட்சியர் சான்று

* அரசு வழக்கறிஞரின் சட்ட ஒப்புதல் (Legal opinion )

* அலுவலகத்திலிருந்து பெற்ற சம்பளச் சான்று

* உத்தேசப் பணிக்கொடை கணக்கீட்டுப் படிவம்

கடன் ஏற்பளிப்பு:

மேற்கண்ட ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பம் சரியாக இருப்பின் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும் முன்னுரிமை வரிசைப்படி கடன் ஏற்பளிப்பு ஆணை வழங்கப்படும். படிவம் 5-ல் ஒப்பந்தப் பத்திரம் எழுதித்தந்த பின் முதல் தவணை வழங்கப்படும்.

முதல் தவணை பணத்தைக் கொண்டு கூரை மட்டம் வரை வீட்டை கட்டியபின் பெறலாம.

*அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம் பற்றி அறியுங்கள்!

பொதுவாக அரசு ஊழியர்களுக்குக் சலுகைகள் அதிகம்தான். அவற்றுள் முதன்மையானது “அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம். காரணம், மிகக் குறைந்த வட்டி வீதம்; வட்டி கணக்கிடும் முறை; இன்னும் சில சிறப்பம்சங்கள்.

ஒரு சில நலத்திட்டங்கள் பயனாளியை முழுமையாகச் சென்றடையாமைக்கு இரு காரணங்கள்:
1) பயனாளி திட்டத்தை முழுமையாகப்
புரிந்துகொள்ளாமல் திட்டம் பற்றிய சந்தேகத்துக்குத் தாமே விடையைக் கற்பித்துக்கொள்வது. 2) இத்தனை பயனுள்ள திட்டம் நமக்குக் கிட்டுமா என்ற எதிர்மறை எண்ணம். அதைத் தீர்க்கவே இக்கட்டுரை.

வட்டி வீதம்:

கடன் தொகையில்

முதல் 50,000 ரூபாய் வரை : 5.5 %
50,001 முதல் 1,50,000 வரை : 7%
1,50,001 முதல் 5,00,000 வரை: 9%
5,00,000க்கு மேல் : 10%

இது இன்றைய தேதியில் உள்ள வட்டி வீதம். இது ஒரு சதம் குறைந்ததும் உண்டு; கூடியதும் உண்டு. என்றாலும் நாம் கடன் பெறும்போது என்ன வட்டி வீதமோ அதன்படிதான் கடன் முடிவில் வட்டிக் கணக்கீடு இருக்கும். மேலும் மாத இறுதியில் நிலுவையாயுள்ள கடனுக்கு மட்டுமே தனி வட்டி.

கடன் வரம்பு:

அரசுப் பணியாளரின் அடிப்படை ஊதியம், தர ஊதியம், தனி ஊதியம், சிறப்பு ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றின் எழுபத்தைந்து மாத ஊதியத்தின் கூடுதல் தொகையே கடன் வரம்பு. இதற்கான உச்சவரம்பு ரூ. 25,00,000. கணவன் - மனைவி இருவருமே அரசுப் பணியாளர் எனில், இருவரது எழுபத்தைந்து மாத ஊதியத்தின் கூடுதல் தொகையைக் கடனாகப் பெறலாம். அப்போதும் உச்சவரம்பு ரூ. 25,00,000/-க்கு உட்பட்டே இருக்கும். கடன் தொகை யாரேனும் ஒருவர் பெயரில் வழங்கப்படும். ஒருவரிடமே கடன் பிடித்தமும் செய்யக்கூடும்.

யாரெல்லாம் கடன் பெறலாம்?:

சம்பள ஏற்ற முறையில் ( Scale of Pay) முறையான அரசுப் பணியில் ஆறு ஆண்டு காலம் நிறைவுசெய்த அரசுப் பணியாளர், ஆசிரியர், கல்லூரி விரிவுரையாளர் என அனைவரும் பெறலாம்

‬: காப்பீடு:

வீட்டைக் கட்டி முடித்ததும் கடன் தொகை மற்றும் வட்டித் தொகை ஆகியவற்றின் கூடுதல் மதிப்புக்கு வீட்டைக் காப்பீடு செய்து காப்பீட்டை கடன் முடியும் வரை புதுப்பித்தல் வேண்டும். காப்பீடு செய்யத் தகுதியான ஐந்து நிறுவனங்கள் அரசுப் பட்டியலில் உள்ளன. அவற்றில் மட்டுமே காப்பீடு செய்ய வேண்டும். கடனும் வட்டியும் பிடித்தம் செய்யப்படும்வரை ஆவணங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும். கடன் தொகையை வட்டியுடன் கட்டி முடித்தபின் அடமானப் பத்திரத்தை ரத்து செய்துவிட்டு வந்து ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

சிறப்பு குடும்ப நலத்திட்டம்:

வீடு கட்டும் கடன் பெற்றோருக்கெனக் குடும்ப பாதுகாப்புத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன்படி, தவணைத் தொகையில் ஒரு சதவீதத் தொகையை மாதச் சந்தாவாகச் செலுத்திவர வேண்டும். கடன்பெற்ற பணியாளர் இறக்கும் பட்சத்தில் கடனும் வட்டியும் இத்திட்டத்தின் மூலம் தள்ளுபடி செய்யப்படும்.

1) தனது பெயரில் வீட்டு மனை உள்ள பணியாளர் வீடு கட்டுவதற்குக் கடன் கோரலாம். கூரை மட்டம்வரை முதல் தவணையும், அதற்கு மேல் வீட்டைக் கட்டி முடிக்க இரண்டாவது தவணையும் கிடைக்கும். 2) வீட்டு மனை இல்லாதோர் மனை வாங்கவும், வாங்கிய மனையில் வீடு கட்டவுமாக இரண்டுக்கும் ஒருசேர கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். மனைக்கு 20%முதல் தவணை; பின்னர் வீட்டைக் கட்டி முடிக்க இரு தவணை என மொத்தம் மூன்று தவணைகளில் கடன் விடுவிக்கப்படும். 3) தனிநபர், தனியார் நிறுவனங்கள் கட்டித்தரும் ஆயத்த வீட்டை வாங்க ஒரே தவணையில் கடன் பெறலாம். பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் தரும் சான்றின் அடிப்படையில் வீட்டின் மதிப்பு கணக்கிடப்பட்டு, வரம்புக்கு உட்பட்டு கடன் தரப்படும்.
[6/21, 7:19 PM] ‪+91 90955 32486‬: முதல் தவணை பணத்தைக் கொண்டு கூரை மட்டம் வரை வீட்டை கட்டியபின் பொறியாளரிடமிருந்து பெற்ற பயன்பாட்டு (Utilization Certificate) சான்றுடன், படிவம் 3-ல் பெற்ற கடனுக்கு வீட்டை அரசுக்கு அடமானம் எழுதித்தர வேண்டும்.

இந்த அடமானப் பத்திரத்தை சார் பதிவகத்தில் பதிவுசெய்துவிட்டு வந்து ஒப்படைத்த பின் மாவட்ட ஆட்சியர்/ நேர்முக உதவியாளர் / கோட்ட ஆட்சியர் வீட்டை ஆய்வு செய்வார். வரைபடத்தின்படி வீடு கட்டப்பட்டுள்ளதை உறுதிசெய்து சான்றளித்த பின் இரண்டாவது தவணை கிடைக்கும்.

ஆயத்த வீடு வாங்குவோருக்குக் கடனை திருப்பிச் செலுத்த ஒப்பந்தப் பத்திரம் எழுதித் தந்ததும் ஒரே தவணையில் கடன் தரப்படும். இரண்டு மாதத்தில் வீட்டை வாங்கிப் பத்திரப் பதிவு செய்ய வேண்டும். ஆறு மாத காலத்துக்குள் வாங்கிய வீட்டை அரசுக்கு அடமானம் எழுதிப் பதிவு செய்ய வேண்டும்.

கடன் பிடித்தம்:

ஆயத்த வீட்டுக்குக் கடன் பெற்றவர் களுக்குக் கடன் வழங்கப்பட்ட மறு மாதமே பிடித்தம் தொடங்கும், புதிய வீடு கட்ட/வீட்டை விரிவுபடுத்த கடன் பெற்றவர்களுக்குப் புதிய வீட்டில் குடியேறிய மாதம் அல்லது முதல் தவணை பெற்ற தேதியிலிருந்து பதினெட்டாவது மாதத்தில் கடன் தவணை பிடித்தம் செய்யப்படும். இதற்கு அதிகபட்சம் 180 மாதத் தவணைகள்; பின்னர் வட்டி, இதற்கான அதிகபட்ச தவணை 60 மாதங்கள். ஆக, இருபது ஆண்டுகளுக்கு மிகாமல் கடனும் வட்டியும் பிடித்தம் செய்யப்படும்.

இருபது ஆண்டுகளுக்குக் குறை வாகப் பணிக்காலம் உள்ள அரசுப் பணியாளரும் விண்ணப்பிக்கலாம். எஞ்சியுள்ள பணிக்காலத்துக்கு ஏற்றாற்போல் கடன் தொகையும், தவணைக் காலமும் நிர்ணயிக்கப்பட்டு கடன் வழங்கப்படும். சில நேர்வுகளில் வட்டித்தொகையைப் பணிக்கொடையில் பிடித்தம் செய்யவும் கூடும்.