Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Saturday 26 April 2014

73.67% வாக்குப்பதிவு.

தமிழகத்தில் 73.67% வாக்குப்பதிவு: இறுதி புள்ளி விவரத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம் தமிழகத்தில் கடந்த வியாழக்கிழமை நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 73.67 சதவீத வாக்குகள் பதிவாகியதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தமிழக தேர்தல் ஆணையம் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் குறித்த இறுதி நிலவரத்தை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 73.67 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் இத்தகவலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாக்குப்பதிவு அமைதியான முறையிலேயே நடந்து முடிந்தது. ஒரு சில இடங்களில் மட்டுமே வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இந்நிலையில், 39 தொகுதிவாரியாக பதிவான வாக்குகளின் இறுதி பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக தர்மபுரியில் 81.07% வாக்குகளும், குறைந்தபட்சமாக தென் சென்னையில் 60.4% வாக்குகளும் பதிவாகின. தருமபுரியில் அதிகபட்சமாக 81.58% ஆண் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். மொத்தம் பதிவான 73.67 சதவீத வாக்குகளில், ஆண்கள் 73.49%, பெண்கள் 73.85%, மூன்றாம் பாலினத்தவர் 12.72% என்ற அளவில் வாக்களித்துள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இம்முறை ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 73.67% வாக்குகள் என்பது, கடந்த 2009-ம் மக்களவைத் தேர்தலை காட்டிலும் 0.69% உயர்ந்துள்ளது என்பது கவனிக்கதக்கது.

+2 தேர்வு மறு கூட்டல்

பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டல் மே 9 முதல் 14 வரை விண்ணப்பிக்கலாம்

+2 results

மே 5ல் பிளஸ் 1 ரிசல்ட்

Friday 25 April 2014

விடுதலையில் திடீர்திருப்பம்

7 பேர் விடுதலையில் திடீர் திருப்பம்: வழக்கு விசாரணை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்! Posted Date : 10:44 (25/04/2014)Last updated : 11:02 (25/04/2014) புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலைக்கு எதிராக வழக்கின் விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்து உச்ச நீதிமன்றம் திடீரென உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை பிப்ரவரி 18 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த 3 பேர் உள்பட ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்பட 4 பேரையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு தனது அதிகாரத்திற்குட்பட்டு முடிவெடுக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இதையடுத்து இந்த 7 பேரையும் விடுக்க முடிவு செய்து தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த முடிவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதியன்று முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் விடுதலைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த மனுமீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் முன்பு நடைபெற்றது. இதில், அனைத்துத்தரப்பு வாதங்களும் கடந்த மார்ச் 27 ஆம் தேதியன்று முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கில் விரிவான விசாரணை தேவைப்படுகிறது என்றும், 5 அல்லது 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்றும் தலைமை நீதிபதி சதாசிவம் கொண்ட இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கில் 7 விதமான விஷயங்களை ஆராய வேண்டியுள்ளது என்று கூறியுள்ள நீதிபதிகள், இதுபோன்ற வழக்கை முதல்முறையாக எதிர்கொள்வதாகவும், 3 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க அரசியல் சாசன அமர்வுக்கு உத்தரவிட்டுள்ளதோடு, 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவு மீதான தடை தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

பள்ளிக்கல்வித் துறை ஆசிரியர்கள் மாறுதல் விண்ணப்பம்.

Trs counselling will be held on july 2nd week.more details.

Tuesday 22 April 2014

புகார் /atm/ bank

மிக மிக முக்கியமான செய்தி ATM /BANK சம்பந்தப்பட்டது மறக்காமல் படிக்கவும் இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சிய போக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்கள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண்டே வரும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை. அதன் முதல் அங்கம், இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை. அப்படியொரு சுவாரசியமான செய்தி தான் நேற்று சென்னையில் நடந்தது. xxxxxxxxxxx(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாடிக்கையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 3000/- பணம் எடுபதற்கு ATM சென்று உள்ளார். அப்போது பணம் வராமல் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்ற குறுந்தகவல் (SMS ) வந்துள்ளது. உடனே அந்த வாடிக்கையாளர் மிகுந்த ஏமாற்றத்துடன் வங்கியை அணுகி உள்ளார். வங்கியில் ஒரு கடிதம் எழுதி கொடுங்கள் பணம் வந்தால் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட்டை இதோடு இணைத்து தாருங்கள் என்று கூறியுள்ளனர். இவரும் கடிதம் கொடுத்து காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து பலமுறை வங்கியை முறையிட்டும் எந்த பலனும் இல்லை. சம்பவம் நடந்த நாள் ஏப்ரல் 10 ம் தேதி,மே 10ம் தேதி வரை காத்திருந்து பலன் இல்லாமல் கடைசியாக மே 28ம் தேதி இறுதியாக வங்கியை தொடர்பு கொண்டார். அப்போதும் எந்தபலனும் இல்லை, பொறுமை இழந்த XXXXXXX தனது நண்பர் திரு YYYYYYY (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் வங்கியில் வேலை செய்பவரும் ஆன அவரிடம் தனக்கு நடந்த இந்த அவல நிலையை சொல்லி உள்ளார். அவர் தான் முதன் முதலில் "ஒபட்சு மேன்" { Ombudsman } பற்றி சொல்லி உள்ளார். அதை கேள்வி பட்ட அதே நாளில் தனது அவலத்தை பின்வரும் இணையம் வாயிலாக https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html ஆதங்கமாக தெரிவித்துள்ளார். மே 29 அன்று ரூபாய் 3000/- வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது. பின்னர் ஜூன் 18ம் தேதி அவருக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 525/-ம் செலுத்தி உள்ளனர். அந்த சம்பந்த பட்ட வங்கி பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் அழைத்து கைப்பட கடிதமும் வாங்கி உள்ளனர். மேலும் சகல மரியாதையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது . இனி உங்கள் வங்கியும் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் யோசிக்காமல் "ஒபட்சுமேன் { Ombudsman } "https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html சொடுக்கி உங்கள் குற்றங்களை பதிவு செயுங்கள். நீங்கள் கூறும் குற்றம் உண்மை என்று நிருபணம் செய்யபட்டால் சமந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபடும் அளவிற்கு "ஒபட்சு மேன்" க்கு { Ombudsman } அதிகாரம் உள்ளது. மேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சமந்தப்பட்ட வங்கி கிளை மூடப்படும் அளவிற்கு "ஒபட்சு மேன்" அதிகாரம் உள்ளது. இதை பார்கையில் எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே என்ற பாடல் வரி ஞாபகம் வருகிறது. எல்லாதிற்கும் ஒரு முடிவு வரும் இனி வரும் காலங்களின் ஒவ்வொரு துறைளும் இதுபோன்ற வாடிக்கையாளர் ஆதரவு நிலையம் இயங்கும் காலம் தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மை PL CLICK THIS LINK TO LOG YOUR COMPLAINTS https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html Reserve Bank of India

ATM பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்

மிக மிக முக்கியமான செய்தி ATM /BANK சம்பந்தப்பட்டது மறக்காமல் படிக்கவும் இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சிய போக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்கள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண்டே வரும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை. அதன் முதல் அங்கம், இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை. அப்படியொரு சுவாரசியமான செய்தி தான் நேற்று சென்னையில் நடந்தது. xxxxxxxxxxx(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாடிக்கையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 3000/- பணம் எடுபதற்கு ATM சென்று உள்ளார். அப்போது பணம் வராமல் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்ற குறுந்தகவல் (SMS ) வந்துள்ளது. உடனே அந்த வாடிக்கையாளர் மிகுந்த ஏமாற்றத்துடன் வங்கியை அணுகி உள்ளார். வங்கியில் ஒரு கடிதம் எழுதி கொடுங்கள் பணம் வந்தால் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட்டை இதோடு இணைத்து தாருங்கள் என்று கூறியுள்ளனர். இவரும் கடிதம் கொடுத்து காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து பலமுறை வங்கியை முறையிட்டும் எந்த பலனும் இல்லை. சம்பவம் நடந்த நாள் ஏப்ரல் 10 ம் தேதி,மே 10ம் தேதி வரை காத்திருந்து பலன் இல்லாமல் கடைசியாக மே 28ம் தேதி இறுதியாக வங்கியை தொடர்பு கொண்டார். அப்போதும் எந்தபலனும் இல்லை, பொறுமை இழந்த XXXXXXX தனது நண்பர் திரு YYYYYYY (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் வங்கியில் வேலை செய்பவரும் ஆன அவரிடம் தனக்கு நடந்த இந்த அவல நிலையை சொல்லி உள்ளார். அவர் தான் முதன் முதலில் "ஒபட்சு மேன்" { Ombudsman } பற்றி சொல்லி உள்ளார். அதை கேள்வி பட்ட அதே நாளில் தனது அவலத்தை பின்வரும் இணையம் வாயிலாக https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html ஆதங்கமாக தெரிவித்துள்ளார். மே 29 அன்று ரூபாய் 3000/- வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது. பின்னர் ஜூன் 18ம் தேதி அவருக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 525/-ம் செலுத்தி உள்ளனர். அந்த சம்பந்த பட்ட வங்கி பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் அழைத்து கைப்பட கடிதமும் வாங்கி உள்ளனர். மேலும் சகல மரியாதையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது . இனி உங்கள் வங்கியும் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் யோசிக்காமல் "ஒபட்சுமேன் { Ombudsman } "https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html சொடுக்கி உங்கள் குற்றங்களை பதிவு செயுங்கள். நீங்கள் கூறும் குற்றம் உண்மை என்று நிருபணம் செய்யபட்டால் சமந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபடும் அளவிற்கு "ஒபட்சு மேன்" க்கு { Ombudsman } அதிகாரம் உள்ளது. மேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சமந்தப்பட்ட வங்கி கிளை மூடப்படும் அளவிற்கு "ஒபட்சு மேன்" அதிகாரம் உள்ளது. இதை பார்கையில் எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே என்ற பாடல் வரி ஞாபகம் வருகிறது. எல்லாதிற்கும் ஒரு முடிவு வரும் இனி வரும் காலங்களின் ஒவ்வொரு துறைளும் இதுபோன்ற வாடிக்கையாளர் ஆதரவு நிலையம் இயங்கும் காலம் தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மை PL CLICK THIS LINK TO LOG YOUR COMPLAINTS https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html Reserve Bank of India

Monday 21 April 2014

TET 2nd paper CV datails

நோக்கியா போன் பெயர் மாற்றம்.

சுறுசுறுப்பாக இருக்க தோப்பக்கரணம் போடுங்கள்

தினமும் போடுங்க தோப்புக்கரணம்... தோப்புக்கரணம் போடுவது உடலுக்கு நல்ல யோகப் பயிற்சி. மூளை சுறுசுறுப்படைந்து மனமும் உற்சாகத்தில் மிதக்கும். 100 கலோரிகளை எரிக்க... * 10 நிமிடங்கள் தோப்புக்கரணம் போடுங்கள். * நான்கு மாடிக் கொண்ட மாடிப்படிகளில் ஒருமுறை ஏறி இறங்குங்கள். * 45 நிமிடங்கள் வீட்டு வேலை செய்யுங்கள்.

தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் கவனத்திற்கு

தபால் வாக்கை உரிய தேதிக்கு முன் போட்டு விடுங்கள். தபால் ஓட்டு சம்மந்தமான படிவங்கள் கடைசி தேர்தல் வகுப்பில் வழங்கப்படும். முதல் முறையாக தேர்தல் பணிக்குச் செல்பவர் என்றால் அஞ்சல் வாக்கைப் பதிவு செய்யும் முறை, உள்ளுறை, வெளியுறை, படிவம் நிரப்புதல் அத்தாட்சிக் கையொப்பம் பெறுதல் போன்ற விஷயங்களை மற்றவரிடம் கேட்டோ விதிமுறைகளை நன்றாகப் படித்துவிட்டோ செய்யுங்கள். அவசரப்பட்டு தவறு செய்துவிட்டால் மாற்றிக்கொள்ள முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் வாக்கை தவறாமல் செலுத்திவிடுங்கள். 2. உங்கள் தேர்தல் பணி உத்தரவைப் பத்திரமாக எடுத்து வையுங்கள். நகல் எடுத்து வையுங்கள். தபால் வாக்கு விண்ணப்பிக்கவும் தேர்தல் பணிக்காகச் செல்லும்போதும் திரும்பி வீடு வரை வரும்போதும் அதுதான் நம் பாதுகாப்புக் கவசம். 3. உங்களுக்குரிய வாக்குச்சாவடியை உறுதி செய்து கொள்ளுங்கள். வாக்குச்சாவடி அமைந்துள்ள ஊரின் பெயரைத் தெளிவாக அடையாளம் கண்டு கொள்ளுங்கள். ஒரே பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட ஊர்கள் ஒரே மாவட்டத்தில் உள்ளன. சான்றாக, சின்னியம்பாளையம் என்ற ஊர் ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் உள்ளன. உங்களுக்குரிய ஊர் எது என்பதில் தெளிவாக இருங்கள். 4. உங்கள் சாவடியில் நீங்கள் எந்தவகைப் பணியில் இருந்தாலும் மற்ற எல்லோரிடமும் அனுசரித்துப் பேசுங்கள். அவர்களைப் பார்க்கும் போதும் ஃபோனில் பேசும்போதும் வணக்கம் சொல்லியும் நலம் விசாரித்தும் பேச்சைத் தொடங்குங்கள். 5. டூத்பேஸ்ட், பிரஷ், சோப்பு, ஷாம்பூ, சீப்பு, பர்ஸ், ATM அட்டை, அடையாள அட்டை, பணி ஆணை, மாற்றுத் துணிகள், துண்டு, பெட்ஷீட், காற்றுத் தலையணை, முகம் பார்க்கும் கண்ணாடி, முகப்பவுடர், மூக்குக்கண்ணாடி வைக்கும் பெட்டி, செல்ஃபோன் சார்ஜர், டார்ச் விளக்கு, கொசுவர்த்திச் சுருள், தீப்பெட்டி போன்றவற்றை முதல் நாளே தயாராகப் பைக்குள் எடுத்து வையுங்கள். 6. ஸ்கெட்ச், பேனா, பென்சில், கத்தரிக்கோல், பிளேடு, ரப்பர், பசை, செல்லோடேப், அளவுகோல் போன்ற ஸ்டேஷனரி பொருட்களை ஒரு டப்பாவில் எடுத்துக் கொள்ளுங்கள். (சாவடியில் வழங்கப்படும் பொருட்கள் பற்றாக்குறையாகவோ பழுதாகவோ இருந்தால் பயன்படுத்த) 7. புளிசாதம் / தக்காளி சாதம்/ தயிர்சாதம்/ எலுமிச்சை சாதம் ஓரிரு வேளைக்கு பார்சல் எடுத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் ஃப்ளாஸ்க் எடுத்துக் கொள்ளவும். 8. அதிகமான பணம் கொண்டு செல்வதை அறவே தவிர்க்கவும். 9. சாவடி ஏஜண்ட்களிடமோ உள்ளூர்வாசிகளிடமோ உங்கள் தொடர்பு எண்ணையோ முகவரியையோ தனிப்பட்ட விவரங்களையோ தெரிவிக்காதீர்கள். 10. தலைவலி, காய்ச்சல், ஒவ்வாமை, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்றவற்றுக்கான மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

Friday 18 April 2014

பெண் ஊழியருக்கு 730 விடுப்பு.

Central Government women employees can get 730 days leave for child care: Supreme Court Central Government women employees can get 730 days leave for child care: Supreme Court.Central Government women employees can get 730 days leave for child care: Supreme Court The Supreme Court on Tuesday held that a woman employee of central government can get uninterrupted ..........click here to read more........ http://www.sstaweb.com/2014/04/central-government-women-employees-can.html?m=1

மின் கட்டணம்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம். பள்ளி மின் கட்டணத்தை நேரடியாக அரசே செலுத்தும் .

Thursday 17 April 2014

Indian bank news.

INDIAN BANK does not call for ATM Card number, PIN, CVV etc. Do not disclose these data to anybody even if requested in the name of Indian Bank.

Friday 11 April 2014

எழை குழந்தைகளுக்கும் தனியார் க

தற்போது உயர்கல்வியில் இருக்கும் கலந்தாய்வு முறைதான் இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு. ஒவ்வொரு நகரத்திலும் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அனைத்துக்குமான கலந்தாய்வை பள்ளிக் கல்வித்துறை அந்தந்த ஊரில் பொது இடத்தில் நடத்த வேண்டும். பெற்றோரின் வருவாய்ச் சான்று, இருப்பிடச் சான்று, குழந்தையின் உடன்பிறப்புகள் படிக்கும் பள்ளி ஆகிய மூன்றின் அடிப்படையில், அந்த குழந்தை எந்தப் பள்ளிகளில் சேர முடியும் என்பதை தரவரிசைப்படுத்தலாம். கலந்தாய்வின்போது எந்தெந்த பள்ளிகளில் இடம் இருக்கிறதோ அதில் தங்கள் குழந்தைகளை பெற்றோர் சேர்த்துவிட முடியும். பள்ளிப்படிப்புக்கு கலந்தாய்வா என்று சிலர் புருவம் உயர்த்தலாம். ஆனால் 25% ஒதுக்கீடு உண்மையாக தமிழ்நாட்டில் நடைபெற வேண்டும் என்றால், கலந்தாய்வும், சிறுபான்மையினர் பள்ளிகளையும் இத்திட்டத்திற்கு உட்படுத்துவதும் தவிர்க்கவியலாதவை. அனைத்துப் பகுதியினருக்கும், பிரிவினருக்கும் பொதுவான சமச்சீர் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதுதான் மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படை நோக்கம். அது கல்வியால் மட்டுமே சாத்தியப்படும். அதனால், குறைந்த வருவாய் பிரிவினருக்கான 25% ஒதுக்கீட்டை உறுதி செய்வது அரசின் கடமை!

change ur online passwords

CHANGE YOUR ONLINE PASSWORDS Your online passwords, user names, banking information and other private data could be at risk with the discovery of a security flaw called the Heartbleed bug http://ow.ly/vHOHo Heartbleed bug means you should change your passwords: Expert Your online passwords, user names, banking information and other private data could be at risk with the discovery of a security flaw called the Heartbleed bug.

ஒய்வூதிய விபரத்தை அறிய

இணையதளத்தில் ஓய்வூதிய விபரங்களை அறியும் வசதி http://t.co/eHQ6vIVUy8 இணையதளத்தில் ஓய்வூதிய விபரங்களை அறியும் வசதி மதுரை: ஓய்வூதிய விபரங்களை இணையதளத்தில் அறியும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஓய்வூதியர்கள், www.tn.gov.in/karuvoolam என்ற முகவரியில் விபரம் பெறலாம். கம்ப்யூட்டரில் மேற்கண்ட முகவரியை டைப் செய்தவுடன், பென்ஷனர் 'ஹோம் பேஜ்' என்ற விபரம் திரையில் தெரியும். அதை 'கிளிக்' செய்தால், 'செக் யுவர் இ.சி.எஸ்., ஸ்டேட

அரசே மின் கட்டணத்தை செலுத்தும்.

அரசு பள்ளி மின் கட்டணத்தை நேரடியாக செலுத்த இயக்குனரகம் முடிவு அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை செலுத்துவதில், குளறுபடி ஏற்பட்டு உள்ளது. இதை சரி செய்ய, இயக்குனரகம் மூலம் நேரடியாக கட்டணத்தை செலுத்த, முடிவு .

வரலாறு -வினா விடை

வரலாறு கூறும் முகநூல் Mmschool Perichipalayam பொது அறிவு வினா-விடை – வரலாறு திசெம்பர் 11, 2009 1. இரண்டாம் கர்நாடக போரின் முடிவில் கீழ்க்கண்ட ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. அ. அய்-லா-சாப்பேல் உடன்படிக்கை ஆ. பாண்டிச்சேரி உடன்படிக்கை இ. பாரிசு உடன்படிக்கை ஈ. வட சர்க்கார் உடன்படிக்கை 2. கனிஷ்கரின் தலைநகர் அ. காஷ்கர் ஆ. யார்கண்டு இ. பெஷாவர் ஈ. எதுவுமில்லை 3. பொருத்துக: I. கன்வ வம்சம் – 1. காட்பீசஸ் II. சுங்க வம்சம் – 2. காரவேலர் III. கலிங்க வம்சம் – 3. வசுதேவர் IV. குஷான வம்சம் – 4. புஷ்ய மித்ரம் அ. I-3 II-4 III-1 IV-2 ஆ. I-4 II-3 III-1 IV-2 இ. I-3 II-4 III-2 IV-1 ஈ. I-4 II-3 III-2 IV-1 4. பாண்டியர்களின் ஓவியக்கலை வளர்ச்சியை பறைசாற்றுவது அ. மதுரை ஆ. தொண்டி இ. சித்தன்னவாசல் ஈ. மானமாமலை 5. நாலந்தா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர் அ. ஹரிதத்தர் ஆ. ஜெயசேனர் இ. தர்மபாலர் ஈ. எவருமில்லை 6. குஷானர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் அ. கிரேக்கம் ஆ. பாரசீகம் இ. இந்தியா ஈ. சீனா 7. தக்கர்களை ஒடுக்கிய ஆங்கிலேய ஆளுநர்? அ. வில்லியம் பெண்டிங் ஆ. காரன் வாலிஸ் இ. வாரன் ஹேஸ்டிங்ஸ் ஈ. டல்கௌசி 8. ‘புத்த தத்தர்’ யாருடைய காலத்தில் வாழ்ந்தார் அ. கரிகாலன் ஆ. இளஞ்சேரலாதன் இ. அச்சுத களப்பாளன் ஈ. தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் 9. சோழர்களைப் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ள வெனிசு வரலாற்று ஆசிரியர் அ. அல்பருனி ஆ. மார்க்கோ போலோ இ. டாக்டர் ஜோன்ஸ் வில்லியம் ஈ. இபன்படூடா 10. சமுத்திர குப்தனால் சிறை பிடிக்கப்பட்ட பல்லவ அரசன் அ. பரமேஸ்வரவர்மன் ஆ. விஷ்ணுகோபன் இ. சிம்ம விஷ்ணு ஈ. எவருமில்லை விடை: 1. ஆ 2. இ 3. இ 4. இ 5. இ 6. ஈ 7. அ 8. இ 9. ஆ 10. ஆ 11. சாதவாகனா வம்சத்தின் சிறந்த அரசர் யார்? அ. ஸ்ரீ சதகர்னி ஆ. கௌதமிபுத்திர சதகர்னி இ. வஷிஷ்டபுத்திர புலுமயி ஈ. யஜ்னாஸ்ரீ சதகர்னி 12. மாவீரன் சிவாஜியின் தலைநகரம் எது? அ. புனே ஆ. கார்வார் இ. புரந்தர் ஈ. ராய்கார் 13. பண்டைய காலத்தில் கலிங்கத்தை ஆண்டவர்களில் யார் மிகப்பெரிய அரசராக கருதப்படுகிறார்? அ. அஜாதசத்ரு ஆ. பிந்துசாரர் இ. காரவேலர் ஈ. மயூரசரோனர் 14. பண்டைய இந்தியாவின் மிகச் சிறந்த மருத்துவராகக் கருதப்படும் தன்வந்திரி யாருடைய அரசவையில் ஆலோசனைகளை தந்து வந்தார்? அ. சமுத்திரகுப்தர் ஆ. அசோகர் இ. சந்திரகுப்த விக்கிரமாதித்தியா ஈ. கனிஷ்கர் 15. இரண்டாவது தரைன் யுத்தத்தில் பிருத்விராஜை தோற்கடித்தது யார்? அ. கஜினி முகமது ஆ. குத்புதீன் ஐபெக் இ. கோரி முகமது ஈ. அலாவுதீன் கில்ஜி 16. புத்தர் பிறந்த இடம் தற்போது உள்ள நாடு அ. நேபாளம் ஆ. திபெத் இ. இந்தியா ஈ. பர்மா 17. டெல்லியின் பழங்காலப் பெயர் அ. தேவகிரி ஆ. தட்ச சீலம் இ. இந்திர பிரஸ்தம் ஈ. சித்துபரம் 18. கீதகோவிந்தம் என்னும் நூலை எழுதியவர் அ. ஜெயசந்திரன் ஆ. ஜெயசேனர் இ. ஹரிசேனர் ஈ. எவருமில்லை 19. நாலந்த பல்கலைக்கழகத்தை தொடங்கியவர் அ. குமார குப்தர் ஆ. ஸ்கந்த குப்தர் இ. ஹர்ஷர் ஈ. யுவான் சுவாங் 20. ‘பரிவாதினி’ என்பது கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது அ. பல்லவர் ஓவியம் ஆ. வீணை இ. பல்லவர் கால நாடகம் ஈ. மாமல்லபுரம் சிற்பம் விடை: 11. ஆ 12. ஈ 13. இ 14. இ 15. இ 16. அ 17. இ 18. ஆ 19. அ 20. ஆ 31. மிகப்பெரிய கோயில்களை சாணக்கியர் கட்டிய இடங்கள் அ. அய்ஹோலி ஆ. ஹம்பி இ. காஞ்சி ஈ. வாதாபி 32. மாவீரர் அலெக்ஸாண்டரின் சம காலத்தவர் யார்? அ. பிம்பிசாரர் ஆ. சந்திரகுப்த மவுரியர் இ. அசோகர் ஈ. புஷ்யமித்ர சுங்கர் 33. சௌசா போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது? அ. பகதூர் ஷா மற்றும் ஹுமாயூன் ஆ. ஹுமாயூன் மற்றும் ஷெர்கான் இ. அக்பர் மற்றும் ராணா பிரதாப் ஈ. ஜஹாங்கீர் மற்றும் ராணா அமர் சிங் 34. அமெரிக்க சுதந்திர பிரகடனத்தை வடிவமைத்தவர் யார்? அ. வாஷிங்டன் ஆ. பெஞ்சமின் பிராங்க்ளின் இ. தாமஸ் ஜெபர்சன் ஈ. கால்வின் கூலிட்ஜ் 35. புத்த மத இலக்கியங்கள் எந்த மத மொழியில் எழுதப்பட்டன? அ. ஒரியா ஆ. சமஸ்கிருதம் இ. உருது ஈ. பாலி 36 ஹொய்சால மன்னரை மதம் மாற்றிய இந்து மத தத்துவவாதி யார்? அ. ராமானுஜர் ஆ. ஆதிசங்கரர் இ. சங்கராச்சாரியார் ஈ. சுவாமி விவேகானந்தர் 37. மகாபலிபுரத்தில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட ரதங்கள் எத்தனை உள்ளன? அ. 2 ஆ. 3 இ. 5 ஈ. 19 38. பண்டைய இந்திய வரலாற்று புவியியலில் ரத்னாகரா என வழங்கப்பட்டது எது? அ. இமயமலை ஆ. அரபிக் கடல் இ. இந்தியப் பெருங்கடல் ஈ. இவை எதுவும் இல்லை 39. ரத்னாவளியை இயற்றியவர் அ. கனிஷ்கர் ஆ. வால்மீகி இ. ஹர்ஷர் ஈ. ஹரிஹரபுக்கர் 40. ரஸியா சுல்தானைப் பற்றிய பின்வரும் தகவல்களில் எது சரி? அ. தில்லியை ஆண்ட ஒரே முஸ்லிம் பெண்மணி ஆ. சதியால் கொல்லப்பட்டவர் இ. 1240ல் கைதாள் என்னும் இடத்தில் கொல்லப்பட்டார் ஈ. இவை அனைத்தும் சரி விடை: 31. அ 32. ஆ 33. ஆ 34. இ 35. ஈ 36. அ 37. இ 38. ஆ 39. இ 40. ஈ 41. ரக்திகா என்பது அ. பண்டைய இந்தியாவின் கலைப் பிரிவு ஆ. பண்டைய இந்தியாவின் ஓவியப் பிரிவு இ. பண்டைய இந்தியாவின் எடை முறை ஈ. இவை எதுவும் சரியல்ல 42. கல்ஹானா என்பவர் எழுதிய ராஜதரங்கிணி என்னும் புத்தகம் எதைப் பற்றியது? அ. மாவீரர் சிவாஜி பற்றியது ஆ. காஷ்மீரின் வரலாற்றைப் பற்றியது இ. நமது வேதங்களைப் பற்றியது ஈ. இவை அனைத்துமே சரி 43. களப்பிறர் காலத்தில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மொழி அ. சமஸ்கிருதம் ஆ. பிராக்கிருதம் இ. தெலுங்கு ஈ. இவை அனைத்தும் 44. கஜுராகோ விஷ்ணு கோயிலைக் கட்டியவர் அ. தாங்கர் ஆ. கீர்த்திவர்மன் இ. யசோதவர்மன் ஈ. உபேந்திரர் 45. கற்கால மனிதன் முதலில் கற்றுக் கொண்டதாக கருதப்படுவது அ. தீயினை உருவாக்க ஆ. விலங்குகளை வளர்க்க இ. சக்கரங்களை செய்ய ஈ. தானியங்களை வளர்க்க 46. புத்த சமயத்தின் அடிப்படை கொள்கை அ. தியானம் ஆ. அறியாமை அகற்றுதல் இ. நோம்பு ஈ. திருடாமை 47. மௌரியர் காலத்தின் மிக உயர்ந்த நீதிமன்றமான அரசமன்றத்தின் அமைவிடம் அ. கபில வஸ்து ஆ. சாரநாத் இ. கோசலம் ஈ. பாடலிபுத்திரம் 48. ஹர்ஷ சரிதம் எழுதியவர் அ. ஹர்ஷர் ஆ. பாணர் இ. ஹரிசேனர் ஈ. தர்மபாலர் 49. சரக சமிதம் என்பது அ. வானவியல் நூல் ஆ. புத்த இலக்கியம் இ. மருத்துவ நூல் ஈ. கணித நூல் 50. நான்காம் புத்த சமய மாநாடு கூட்டப்பட்ட இடம் அ. குந்தல்வனம் ஆ. பெஷாவர் இ. கனிஷ்கபுரம் ஈ. கோட்டான் விடை: 41. இ 42. ஆ 43. ஆ 44. இ 45. அ 46. ஆ 47. ஈ 48. ஆ 49. இ 50. அ 51. போரில் உயிர்நீத்த வீரர்கள் நினைவாக நடப்பட்ட வீரகற்கள் அ. பெருங்கல் ஆ. நடுகல் இ. வீரக்கல் ஈ. கல்பாடிவீடு 52. முறையான எழுத்து முறை எதில் உருவானது? அ. ஆரியர் காலம் ஆ. சுமேரிய நாகரீகம் இ. சிந்து சமவெளி நாகரீகம் ஈ. எகிப்து நாகரீகம் 53. அலாவுதீன் கில்ஜியின் தந்தை அ. கியாசுதீன் ஆ. குத்புதீன் இ. ஜலாலுதீன் ஈ. நசுருதீன் 54. தோடர்மால் யாருடைய அவையிலிருந்த வருவாய் அமைச்சர்? அ. ஜஹாங்கீர் ஆ. அவுரங்கசீப் இ. அக்பர் ஈ. ஷாஜகான் 55. கீழ்க்கண்ட மன்னர்களை சரியான வரிசையில் எழுதுக 1. பெரோஷ் துக்ளக் 2. ஜலாலுதீன் கில்ஜி 3. பகலால் லோடி 4. சிக்கந்தர் லோடி அ. 1, 2, 3, 4 ஆ. 2, 1, 3, 4 இ. 1, 2, 4, 3 ஈ. 2, 1, 4, 3 56. திரிபீடகங்கள் என்பது யாருடைய புனித நூல்? அ. சமண மதம் ஆ. புத்த மதம் இ. இந்து மதம் ஈ. கிறிஸ்தவ மதம் 57. கி.பி. 505 முதல் 587 வரையிலான காலத்தில் வாழ்ந்த மற்றும் விக்கிரமாதித்யன் அவையிலிருந்த வராகமித்திரர் ஒரு அ. வானியல் நிபுணர் ஆ. கணித மேதை இ. தத்துவஞானி ஈ. இவை அனைத்துமே 58. முகமது பின் துக்ளக் தலைநகரை தில்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றிய ஆண்டு அ. 1319 ஆ. 1327 இ. 1339 ஈ. 1345 59. வேத காலம் என்பது அ. கி.மு. 1500 முதல் கி.மு. 1000 வரை ஆ. கி.மு. 1000 முதல் 500 வரை இ. கி.மு. 500 முதல் 100 ஆண்டுகள் ஈ. இவை எதுவும் இல்லை 60. முஸ்லிம் அல்லாதவரிடம் விதிக்கப்பட்ட ஜஸியா வரியை அறிமுகப்படுத்தியவர் யார்? அ. அக்பர் ஆ. ஜஹாங்கீர் இ. அவுரங்கசீப் ஈ. அலாவுதீன் கில்ஜி விடை: 51. ஆ 52. ஆ 53. இ 54. இ 55. ஆ 56. ஆ 57. ஈ 58. ஆ 59. அ 60. ஈ 61. அங்கோர்வாட் கலைக்கோவில்கள் எங்குள்ளன? அ. பிலிப்பைன்ஸ் ஆ. தாய்லாந்து இ. கம்போடியா ஈ. வியட்னாம் 62. தயானந்த சரஸ்வதியால் உருவாக்கப்பட்ட ஆரிய சமாஜம் பற்றி எது சரி? அ. உருவ வழிபாட்டை ஏற்றுக் கொண்டது ஆ. இந்து மதத்திற்கு மதமாற்றம் செய்து கொள்வதை ஆதரித்தது இ. ஜாதி முறையை கண்டித்தது ஈ. அவை அனைத்துமே சரி 63. இல்டுட் மிஷ் காலத்தில் எல்லை அபாயங்களை ஏற்படுத்தியவர் அ. தைமூர் ஆ. செங்கிஸ்கான் இ. பெரோஷ் துக்ளக் ஈ. அனைவரும் 64. முகமதுகோரி கஜினியைக் கைப்பற்றிய ஆண்டு அ. 1173 ஆ. 1174 இ. 1175 ஈ. 1176 65. பின்வருவனவற்றில் ஆரியர்களைப் பற்றி எது சரியான தகவல்? அ. இவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் ஆ. மாடு மேய்ப்பது இவர்களின் முக்கியத் தொழில் இ. இவர்களுக்கு பசு புனிதமான வடிவம் ஈ. இவை அனைத்துமே சரி 66. அசோக சக்கரவர்த்தியைப் பற்றி எது சரியான கூற்று? அ. கி.மு. 269 முதல் 232 வரை ஆட்சி புரிந்தார் ஆ. கலிங்கப் போருக்குப் பின் போரை வெறுத்து புத்த மதத்தைத் தழுவினார் இ. இவரது மறைவுக்குப் பின் மௌரியப் பேரரசு வீழ்ச்சி அடையத் தொடங்கியது ஈ. இவை அனைத்தும் சரி 67. அஷ்ட பிரதானிகள் யாருடைய அவையில் இருந்த அறிஞர்கள்? அ. அசோகர் ஆ. சிவாஜி இ. கனிஷ்கர் ஈ. சந்திரகுப்தர் 68. சாக்கிய முனி என அழைக்கப்பட்டவர் யார்? அ. ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆ. மகாவீரர் இ. கௌதம புத்தர் ஈ. விவேகானந்தர் 69. சுஸ்ருதா என்னும் நூல் எதோடு தொடர்புடையது? அ. நிலவரி ஆ. அரசின் வருமான வரி இ. வானியல் ஈ. மருத்துவம் 70. சோழர்கள் ஆட்சியின் சிறப்பு என்ன? அ. தஞ்சாவூர் கோயிலை கட்டிய சோழர் கால கலை ஆ. கிராம சுயாட்சி இ. சிறப்பான உள்ளாட்சி முறை ஈ. இவை அனைத்துமே விடை: 61. இ 62. ஈ 63. ஆ 64. அ 65. ஈ 66. ஈ 67. ஆ 68. இ 69. ஈ 70. ஈ 71. ஆர்ய சத்யா என்னும் உபதேசங்களில் புத்தர் எதைப் பற்றிக் கூறுகிறார்? அ. துன்பம் ஆ. துன்பத்திற்கான காரணம் இ. துன்பத்தை களைவது ஈ. இவை அனைத்தையும் 72. அலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுத்தது எப்போது? அ. கி.மு. 310 ஆ. கி.மு. 342 இ. கி.மு. 362 ஈ. கி.மு. 326 73. அமிர்தசரஸ் நகரத்திற்கான இடம் யாரால் குரு ராம் தாசுக்குத் தரப்பட்டது? அ. ஹர்ஷர் ஆ. பாபர் இ. அக்பர் ஈ. ஹுமாயூன் 74. கவுடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரம் எத்தனை பகுதிகளைக் கொண்டது? அ. 10 ஆ. 2 இ. 5 ஈ. 15 75. விக்ரம சீவப் பல்கலைகழகத்தை நிறுவியவர் அ. ஹர்ஷர் ஆ. தர்மபாலன் இ. தேவபாலன் ஈ. எவருமில்லை 76. அசோகரது கல்வெட்டுக்களில் அவரது அண்டை பகுதியினர் என யாரை குறிப்பிடுகிறார்? அ. பாண்டியர்கள் ஆ. கேரளாபுத்திரர்கள் இ. சத்யபுத்திரர்கள் ஈ. இவர்கள் அனைவரையும் 77. சித்தாந்த சிரோமணி என்னும் நூலை எழுதியவர் யார்? அ. பாஸ்கரவர்மன் ஆ. பாஸ்கராச்சாரியர் இ. பத்ரபாகு ஈ. பில்கானா 78. புத்த மதத்திற்கும் சமண மதத்திற்குமான பொதுவான அம்சம் யாது? அ. வேதங்களின் கருத்துக்களை மறுத்தது ஆ. சடங்குகளை மறுத்தது இ. விலங்குகள் கொல்லப்படுவதை எதிர்த்தது ஈ. இவை அனைத்துமே 79. முதல் உலகப் போரின் முக்கிய காரணம் என்ன? அ. லாயிட் ஜார்ஜின் திடீர் மரணம் ஆ. லெனின் சிறை வைப்பு இ. ஆஸ்திரியாவின் பிரான்சிஸ் பெர்டினான்ட் படுகொலை செய்யப்பட்டது ஈ. உலகை ஆள அமெரிக்கா விரும்பியது 80. பின்வரும் எந்த அரசு பீகாரில் ஆட்சி புரிந்தது? அ. வஜ்ஜி ஆ. வத்சா இ. சுராசேனா ஈ. அவந்தி விடை: 71. ஈ 72. ஈ 73. இ 74. ஈ 75. இ 76. ஈ 77. ஆ 78. ஈ 79. இ 80. அ 81. பல்லவ மன்னர்களின் தலை நகரமாக எது விளங்கியது? அ. சென்னப்பட்டினம் ஆ. காஞ்சிபுரம் இ. மதுரை ஈ. மகாபலிபுரம் 82. களப்பிரர்களின் காலம் எது? அ. ஒன்று முதல் 3ம் நூற்றாண்டு ஆ. 3 – 6ம் நூற்றாண்டு இ. 5 – 8ம் நூற்றாண்டு ஈ. இவை எதுவுமில்லை 83. யாருடைய ஆட்சியில் வர்த்தமான மகாவீரர் மற்றும் கௌதம புத்தர் ஆகியோர் தங்களது உபதேசங்களை மேற்கொண்டனர்? அ. அஜாத சத்ரு ஆ. பிம்பிசாரர் இ. நந்திவர்த்தனர் ஈ. அசோகர் 84. யாருடைய காலத்தில் கிராம சமூகம் அதிக அதிகாரங்களைப் பெற்றிருந்தது? அ. பல்லவர்கள் ஆ. சோழர்கள் இ. குப்தர்கள் ஈ. முகலாயர்கள் 85. சுதந்திரப் போரின் போது அமெரிக்காவில் எத்தனை காலனிகள் இருந்தன? அ. 14 ஆ. 13 இ. 15 ஈ. 12 86. கி.பி. 1451 வரை இந்தியாவை ஆண்ட அரசர்கள் எந்த இனத்தை சார்ந்தவர்கள்? அ. துருக்கியர் ஆ. அரேபியர் இ. பதானியர் ஈ. ஆப்கானியர் 87. தைமூர் இந்தியாவிற்குள் படையெடுத்த ஆண்டு அ. 1326 ஆ. 1349 இ. 1372 ஈ. 1398 88. ‘அல்பரூனி’ யாருடன் இந்தியா வந்தார் அ. முகமது கஜினி ஆ. முகமது கோரி இ. முகமது பின் காசிம் ஈ. தைமூர் 89. கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொறுத்தப்படவில்லை அ. கன்னோசி – பிரதிகாரர்கள் ஆ. ஆஜ்மீர் – சவுக்கான்கள் இ. சந்தேளர்கள் – பந்தல்கண்ட் ஈ. பாளர்கள் – டெல்லி 90. சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைக்கப்படுபவர் அ. முதலாம் ராஜராஜன் ஆ. முதலாம் குலோத்துங்கன் இ. முதலாம் ராஜேந்திரன் ஈ. இரண்டாம் ராஜராஜன் விடை: 81. ஆ 82. ஆ 83. ஆ 84. ஆ 85. ஆ 86. அ 87. ஈ 88. அ 89. ஈ 90. ஆ 91. மயில் சிம்மாசனம் எந்த அரசருக்காக உருவாக்கப்பட்டது? அ. ஹுமாயூன் ஆ. ஷாஜகான் இ. அக்பர் ஈ. நாதிர் ஷா 92. ஆரிய சமாஜ இயக்கத்தை தொடங்கியது யார்? அ. ரவீந்திர நாத் தாகூர் ஆ. ராஜாராம் மோகன் ராய் இ. சுவாமி தயானந்தர் ஈ. கேசாப் சந்திர சென் 93. ஔரங்கசீப்பால் தூக்கிலிடப்பட்ட சீக்கிய குரு யார்? அ. குரு அர்ஜுன் தேவ் ஆ. குரு ஹர்கோவிந்த் இ. குரு ஹர்கிஷன் ஈ. குர் தேஜ் பகதூர் 94. மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? அ. அலாவுதீன் கில்ஜி ஆ. ஷெர்ஷா சூரி இ. பாபர் ஈ. அக்பர் 95. அக்பரின் அவையிலிருந்த நவரத்தினங்களில் இந்தி கவிஞர் யார்? அ. அபுல் பாசல் ஆ. பைசி இ. அப்பாஸ் கான் ஷெர்வானி ஈ. பீர்பால் 96. பதவிக்கு வரும் போது அக்பரின் வயது என்ன? அ. 11 வயது ஆ. 14 வயது இ. 12 வயது ஈ. 17 வயது 97. அக்பருக்கு குழந்தை பாக்கியத்தை அருளியவர் என நம்பப்படுகிற, பதேபூர் சிக்ரியில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் சூபி துறவி யார்? அ. ஷேக் பக்ரித் ஆ. நிஜாமுதீன் அவுலியா இ. சலிம் சிஸ்டி ஈ. ஷேக் பக்டியார் காக்கி 98. தற்போது ஹம்பி என அழைக்கப்படும் விஜயநகரம் எந்த நதிக்கரையில் அமைந்திருக்கிறது? அ. கிருஷ்ணா ஆ. காவேரி இ. துங்கபத்ரா ஈ. கோதாவரி 99. விஜயநகரப் பேரரசை நிறுவியவர் யார்? அ. இரண்டாம் ஹரிஹரர் ஆ. விஜய ராயர் இ. இரண்டாம் புக்கர் ஈ. ஹரிஹரர், புக்கர் 100. தன்னை காலிப் என அழைத்துக் கொண்ட ஒரே சுல்தான் யார்? அ. அலாவுதீன் கில்ஜி ஆ. முபாரக் ஷா கில்ஜி இ. குஸ்ரு ஷா ஈ. முகமது பின் துக்ளக் விடை: 91. ஆ 92. இ 93. ஈ 94. ஈ 95. ஆ 96. ஆ 97. இ 98. இ 99. ஈ 100. ஆ