Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Thursday 29 May 2014

Ignou term exam start from June 2nd.

இக்னோ பருவத்தேர்வுகள் ஜூன் 2-ல் துவக்கம் இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில்(இக்னோ) பருவத் தேர்வுகள் ஜூன் 2-ம் தேதி முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக, மதுரை மண்டல மைய இயக்குநர் எஸ்.மோகனன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பது: மதுரை மண்டலத்தில் 2,500 மாணவர்கள் இத்தேர்வை எழுதவுள்ளனர். ஜூன் 2014 பருவத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இக்னோ இணையதளத்தில்(www.ignou.ac.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்குச் செல்லும் மாணவர்கள், தங்களுக்குரிய நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான தேர்வு மையங்கள் மதுரை, கோவை, ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர், உத்தமபாளையம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், தங்களுக்கான இக்னோ அடையாள அட்டையுடன் தேர்வுக்கு செல்ல வேண்டும். தேர்வு அறைக்குள் கைபேசி கொண்டு செல்ல அனுமதி கிடையாது. பிசிஏ, எம்சிஏ படிக்கும் மாணவர்களுக்கு, செய்முறை தேர்விற்கான நுழைவுச்சீட்டு ஜூன் மாத இறுதியில் அனுப்பப்படும். தேர்வு மற்றும் நுழைவுச்சீட்டு சம்பந்தமான விளக்கங்களுக்கு மாணவர்கள் மதுரை மண்டல மையத்தினை 0452-2370733, 2380733 ஆகிய தொலைபேசி எண்களிலும்,remadurai@ignou.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

பிறந்த தேதி திருத்தம்.

பிறந்த தேதி திருத்தம் செய்வது எப்படி? ===================================================== பள்ளி / கல்லூரி சான்றிதழ்களில் பிறந்த தேதியோ, வருடமோ, மாதமோ தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்தந்தஎ ல்லைக்குட்பட்ட சிவில் (முன்சீஃப்) நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு » அனைத்திந்திய ஆசிரியர் பேரவை: பிறந்த தேதி திருத்தம் செய்வது எப்படி?

UPSC சலுகை.

இந்த ஆண்டு ஐஏஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வயது வரம்பு மற்றும் வாய்ப்புகளில் பொதுப்பிரிவினர் உள்பட அனைத்து வகுப்பினருக்கும் 2 ஆண்டுகள் சலுகை வழங்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்பட 24 விதமான அரசு உயர் அதிகாரிகளை நேரடியாகத் தேர்வு செய்வதற்காக ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) நடத்தும் இந்தத் தேர்வை எழுத ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். இதர பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கப் படுகிறது. பொதுப்பிரிவினர் 4 முறையும் (அட்டெம்ட்), ஓபிசி வகுப் பினர் 7 தடவையும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 வயது வரை எத்தனை தடவை வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம். வயது வரம்பு, வாய்ப்புகளில் சலுகை இந்நிலையில், நடப்பு ஆண்டு அறிவிக்கப்பட உள்ள சிவில் சர்வீசஸ் தேர்வில் அதிரடி மாற்றங் கள் கொண்டுவரப்பட உள்ளன. அதன்படி, பொதுப்பிரிவினர் உள்பட அனைத்து வகுப்பினருக்கும் கூடுதலாக 2 வாய்ப்புகளும், வயது வரம்பில் கூடுதலாக 2 ஆண்டுகளும் சலுகை வழங்க யூபிஎஸ்சி முடிவு செய்துள்ளது. இதன்மூலம், பொதுப்பிரிவினர் 32 வயதுவரை ஐஏஎஸ் தேர்வு எழுதலாம். அத்துடன் அவர்கள் 6 முறை முயற்சி செய்யலாம். அதேபோல், ஓபிசி வகுப்பினர் 35 வயதுவரை ஐஏஎஸ் தேர்வு எழுத முடிவதுடன் 9 முறை முயற்சிக்கலாம். எஸ்சி, எஸ்டி வகுப்பினர் 37 வயது வரை சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத முடியும். கூடுதலாக 2 வாய்ப்புகளும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மே 31-ல் தேர்வு அறிவிப்பு மேற்கண்ட மாற்றங்கள் இந்த ஆண்டு நடத்தப்பட உள்ள சிவில் சர்வீசஸ் தேர்வில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. தேர்வு தொடர்பான அறிவிப்பு மே 31-ம் தேதி வெளியிடப்படுகிறது. தேர்வு முறையிலோ, தேர்வுக்கான பாடத்திட்டத்திலோ எவ்வித மாற்றமும் இல்லை என்று யூபிஎஸ்சி அறிவித்துள்ளது. தற்போது முதல்நிலைத் தேர்வு தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் நடத்தப்பட்டு வருகிறது. கூடுதலாக கோவையிலும் முதல்நிலைத்தேர்வு மையம் அமைக்கப்படும் என்று முந்தைய காங்கிரஸ் அரசு அறிவித்திருந்தது. கோவை மையம் இடம்பெறுமா, இல்லையா என்பது மே 31-ம் தேதி வெளியிடப்படும் தேர்வு அறிவிக்கையில்தான் தெரியும். கிராமப்புற மாணவர்களுக்கு வரப்பிரசாதம் சிவில் சர்வீசஸ் தேர்வில் கூடுதலாக 2 வாய்ப்புகள் மற்றும் 2 ஆண்டு வயது வரம்பு சலுகை அளிக்கப்படுவது குறித்து தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மைய இணை பேராசிரியை பி.பிரேம்கலா ராணி கூறியதாவது: அனைத்து வகுப்பினருக்கும் கூடுதலாக 2 வாய்ப்புகளும், 2 ஆண்டு வயது வரம்பு சலுகைகளும் அளிக்கப்படுவதால் ஐஏஎஸ் தேர்வுக்கு படித்து வரும் மாணவ, மாணவிகள் குறிப்பாக விளம்பு நிலையில் இருப்பவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைவர். இன்னும் ஒரு வாய்ப்பு இருந்தால் தேர்வில் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்த வாய்ப்புகள் பெரும் வரப்பிரசாத மாக இருக்கும். அதேபோல், சிவில் சர்வீசஸ் தேர்வு குறித்து தாமதமாக விழிப்புணர்வு கிடைக்கப் பெற்று, தேர்வுக்கு படித்து வரும் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கும் இந்தச் சலுகைகள் பெரும் வாய்ப்பாக இருக்கும். இவ்வாறு பிரேம்கலா ராணி கூறினார். திடீர் மாற்றத்துக்கு காரணம் சென்னை ஷங்கர் ஐ.ஏ.எஸ். அகடமி இயக்குநர் டி.சங்கர் கூறியதாவது: கடந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தனர். 2 விருப்பப் பாடங்கள் என்பது ஒன்றாக குறைக்கப்பட்டு பொது அறிவுத்தாள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிக்கப்பட்டது. ஏற்கெனவே, தொடர்ந்து பல பழைய தேர்வுத் திட்டத்தில் படித்துவந்த மாணவர்களுக்கு மெயின் தேர்வில் செய்யப்பட்ட திடீர் மாற்றங்களை எதிர்கொள்ள சிரமமாக இருந்தது. இதைச் சமாளிக்கும் வகையில் தேர்வெழுத கூடுதல் வாய்ப்புகளை வழங்குவதுடன், வயது வரம்பையும் அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அந்தக் கோரிக்கையை ஏற்று அனைத்து வகுப்பினருக்கும் கூடுதலாக 2 வாய்ப்புகளும், 2 ஆண்டு வயது வரம்பு சலுகைகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதனால், தற்போது கடைசி வாய்ப்பு, வயது வரம்பில் கடைசி நிலையிலும் இருக்கும் மாணவர்கள் குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பயன்பெறுவர். கிராமப்புற இளைஞர்களுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய விழிப்புணர்வு தாமதமாக ஏற்படுவதால், தற்போது அளிக்கப்படும் சலுகைகள் அவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். இவ்வாறு சங்கர் கூறினார்.

2/6/2014 அனைத்து பள்ளிகளும் திறப்பு.

அனைத்து பள்ளிகளும் 2/6/2014 அன்று திறக்கப்படும் .அன்றே மாணவர்களுக்கு விலையில்லா பொருட்கள் வழங்கப்படும் என் பள்ளிகல்வித் துறை அறிவிப்பு.

no BT promotion for this yr

Tuesday 27 May 2014

பாடப் புத்தகம்

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள பாடப்புத்தகங்கள் பார்த்துப் பயன்பெற... http://www.textbooksonline.tn.nic.in/ Government of Tamil Nadu, India - Textbooks Online

Sunday 18 May 2014

usefull website for students.

May 18, 2014 மாணவர்களுக்கு பயன் தரும் இணையதளங்கள்..... 1. http://www.textbooksonline.tn.nic.in/ இதனை தமிழக அரசின் கல்வி அமைச்சகம் இதனை உருவாக்கியுள்ளது.இதிலே 12 ம் வகுப்பு வரை தமிழ்,அறிவியல்,கணக்கு என பாடப்புத்தகங்கள் சேமிக்கப்பட்டுள்ளன. 2. http://www.alfy.com/  இதில் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், மற்றும் நிறம்தீட்டுதல் வீடியோ கிளிப்ஸ் என விளையாட்டுடன் கற்றலை மேம்படுத்துகிறது இத்தளம். 3. http://www.coolmath4kids.com/ இத்தளம் குழந்தைகளின் கணித அறிவு ஆற்றலை விளையாட்டுடன் கற்றுத் தருகின்றது. 4. http://kids.yahoo.com/ இது குழந்தைகளுக்காக யாஹூ நிறுவனத்தின் படைப்பாகும். 5. http://kalvimalar.dinamalar.com/tamil/default.asp  இது தினமலர் நாளிதழின் கல்விக்கானப் படைப்பாகும் இதிலே மாணவர்களுக்கானத் தகவல்கள் குவிந்து இருக்கின்றன. 6. http://www.educationatlas.com/ படிக்கும் திறனைச் சிறப்பாக வளர்த்துக் கொள்ளல், படித்து புரிந்து கொள்ளும் திறனை அதிகப்படுத்திக் கொள்ளல்,உங்களுடைய தனிப்பட்டப் படிக்கும் திறன் குறித்து அறிந்து கொள்ளுதல் அவற்றினை மேம்படுத்துதல் போன்றவற்றினை இத்தளம் சிறப்பாகக் கூறுகின்றது. 7. http://www.learn-english-online.org/LessonA/LessonA.htm ஆங்கில அறிவினை ஆரம்பத்தில் இருந்தே வளர்த்துக் கொள்வதற்கானத் தளம். 8. http://www.tamilnotes.com/ தமிழ் இலக்கண அறிவை வளர்த்துக் கொள்வதற்கான இணையம் Admin Share ‹ › Home View web version Powered by Blogger

Thursday 15 May 2014

cps ,,,எண் பெற்றபின்னர் சம்பளம்.

புதிதாக சேர்ந்த அரசு ஊழியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல் தேனி: தமிழக அரசு ஊழியர்களுக்கு,பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், கடந்த 2003 ஏப்ரல் மாதம் முதல் அமலில் உள்ளது. இந்த ஆண்டிற்கு பிறகு, பணியில் சேர்ந்துள்ள அரசு ஊழியர்கள், மற்றும் பணி வரன் முறை பெறாத அரசு ஊழியர்கள், சென்னையில் உள்ள தகவல் தொகுப்பு மையத்தில், ஊழியர் பெயரில், பங்களிப்பு ஓய்வூதிய திட்ட எண், பெற்றிருக்க வேண்டும். இந்த எண் பெறவில்லை என்றால், புதிய பென்ஷன் திட்டத்திற்காக, அடிப்படை சம்பளத்தில் இருந்து, பணம் பிடித்தம் செய்ய முடியாது. எனவே, இந்த எண் பெறாத அரசு ஊழியர்களுக்கு, ஜூன் மாதம் முதல் சம்பளம், நிறுத்தி வைக்க வேண்டும், என நிதித் துறை பென்ஷன் பிரிவில் இருந்து, அனைத்து கருவூல அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் கருணை அடிப்படையில், பணிக்கு சேர்ந்தவர்கள் குறித்து, எந்த விதக் குறிப்புகளும் இல்லை. எனவே, பங்களிப்பு ஓய்வூதிய திட்ட எண் பெறாத, அரசு ஊழியர்களுக்கு ஜூன் மாதம் முதல் சம்பளம் கிடைக்காது.-

குடும்ப ஒயவூதியம்

குடும்ப ஓய்வூதியத்தில் 2-வது மனைவிக்கும் பங்கு உண்டு: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;; முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல், 2-வது திருமணம் செய்த பெண்ணுக்கு கணவரின் குடும்ப ஓய்வூதியத்தில் பாதியைப் பெறுவதற்கு உரிமை உண்டு என உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. கன்னியாகுமரி-கீழகல்குறிச் சியைச் சேர்ந்த விசாலாட்சியம்மாள், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: என் கணவர் ஸ்தானுத்தான் தம்பிக்கும் எனக்கும் 1958-ல் திருமணம் நடைபெற்றது. 2 மகள்கள் உள்ளனர். முதன்மைக் கல்வி அதிகாரியான எனது கணவர் என்னை விவாகரத்து செய்யாமலேயே 1965-ம் ஆண்டு வசந்தகுமாரி தங்கச்சி என்பவரை 2-வது திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். என் கணவர் 2012 செப். 13-ம் தேதி இறந்தார். அவரின் இறப்புக்குப் பிறகு வசந்தகுமாரிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டது. என்னை விவாகரத்து செய்யாத நிலையில் குடும்ப ஓய்வூதியம் பெற 2-வது மனைவிக்கு சட்டப்படி உரிமை கிடையாது. எனவே, எனக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன் பிறப்பித்த உத்தரவு: திருமணம் செய்யாமலும், வசந்தகுமாரியும், ஸ்தானுத்தான் தம்பியும் 47 ஆண்டுகளாக கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளனர். பாசம் காரணமாக வசந்தகுமாரியை வாரிசுதாரராக நியமித்துள்ளார். அவருக்கும் குடும்ப ஓய்வூதியம் பெற உரிமை உண்டு. இறந்தவரின் குடும்ப ஓய்வூதியத்தை அவர் மனைவிக்கும், அவருடன் சேர்ந்து வாழ்ந்த பெண்ணுக்கும் பிரித்து வழங்கலாம். கணவன் இறந்த பிறகு மனைவி சௌகரியமாக வாழவே குடும்ப ஓய்வூதியம் தரப்படுகிறது. இந்த வழக்கில் குடும்ப ஓய்வூதியத்தை மனுதாரருக்கும், வசந்தகுமாரி தங்கச்சிக்கும் சரிசமமாகப் பிரித்து வழங்க வேண்டும். யாராவது ஒருவர் இறந்துவிட்டால் உயிருடன் இருப்பவருக்கு முழு குடும்ப ஓய்வூதியத் தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

வீட்டுக்கடன். பெறுவது எப்படி

May 15, 2014 வீட்டுக்கடன் பெறுவதில் உள்ள பிரச்னைகளை களைவது எப்படி.? வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் செய்து பார்' என்பது அனைவரும்ஒருமுறையாவது உச்சரிக்கும் கிராமத்து பழமொழி. வீடுகட்டுவதற்கு அனைவருக்கும் வசதி இருப்பதில்லை. இதற்காககடன்களை பெற நினைக்கும் போது முதலில் மனதில் தோன்றுபவை வங்கியின் வீட்டுக்கடன்களே. அவற்றைப் பெறுவதில் வரும் சிக்கல்களைப் பற்றி இந்தகட்டுரையில் பார்ப்போம். வீட்டுக் கடன்களைப் பெறுவது விளம்பரங்களில் காண்பது போல்மிகவும் எளிதானதாக இருந்தாலும், அது மிகவும் கடினமான மற்றும் நீளமான செயல்பாடாகவே உள்ளது. வட்டி விகிதங்கள் நிலையற்றதாக இருப்பதால் இந்தியாவில் வீட்டுக் கடன்பெற்றவர்கள் பெரும்பாலோர் பாதிக்கப்படுகிறார்கள். பணத்தின் மதிப்பை பொறுத்த வரை மிகவும் பெரிய கடன்களாக இருக்கும் வீட்டுக் கடன்களால், கடன் பெறுபவர்கள் அடையும் பாதிப்புகள் எண்ணிலடங்காது. அது போன்று வீட்டுக் கடன் பெற்றவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பற்றி உங்களுக்கு கொடுத்துள்ளோம். இவற்றைப் படித்து பயன் பெறுவீர்கள் என்றுநம்புகிறோம்.. ஆரம்ப கட்டத்தில் நிராகரிக்கப்படுதல் இது சோகமான செய்தி தான் ஆனாலும் உண்மை.பெரும்பாலானவர்களின் கடன்களை பெற முன்நிற்கும் ஆரம்பகட்டங்களிலேயே நிராகரிக்கப் படுகிறார்கள். இதற்கு பலகாரணங்கள் இருந்தாலும், கடன் தரும் நிறுவனத்தின் தேவைகளுக்கும், கடன் பெறுபவரின் தகுதிக்கும் உள்ள முரண்பாடுகள் தான் காரணமாக உள்ளன. வயது, கள ஆய்வுகளில் தேர்ச்சியடையாமல் இருத்தல், முறையான ஆவணங்கள் தராமல் இருத்தல், வங்கிகள் முறையாக ஆவணங்களை பார்வையிடாமல் இருத்தல், வருமான வரம்பு மற்றும் பல்வேறு காரணங்களும் இந்தநிராகரிப்புகளின் பின் உள்ளன. தீர்வு: ஆரம்ப கட்டத்தில் நிராகரிக்கப்படாமல் இருக்க விரும்பினால்,வங்கிகளைப் பொறுத்து அவர்கள் விரும்பும் தகுதிகளைபரிசோதித்துப் பார்க்கவும். உங்களுடைய தகுதிக்கேற்ற வங்கிகளைதேர்ந்தெடுத்து விண்ணப்பம் கொடுங்கள். முறையானஆவணங்களையும், பரிசோதிக்கத்தக்க விபரங்களையும் கொடுப்பதுதான் ஆரம்ப கட்டத்தில உங்களுடைய வீட்டுக் கடன் விண்ணப்பம்நிராகரிக்கப்படாமல் இருக்க உதவும் வழிமுறைகளாகும். திரும்ப பெற இயலாத செயல்பாட்டு கட்டணம் திரும்ப பெற இயலாத செயல்பாட்டு கட்டணம் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறோம். நீங்கள் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது உங்களுடைய வங்கி, 0.25 சதவிகிதம் முதல்1 சதவிகிதம் வரையில் இந்த திரும்ப பெற இயலாத செயல்பாட்டு கட்டணம் கட்டணத்தை செலுத்தும் படி வங்கி உத்தரவிடம். வழக்கமாகவே இந்த செயல்பாட்டுக் கட்டணத்தை திரும்பப் பெறஇயலாது. உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் கூடுஇந்த செயல்பாட்டுக் கட்டணத்தை திரும்பப் பெற இயலாது. நீங்கள்தரக் கூடிய கட்டணங்கள், வீட்டுக் கடனுக்காக விண்ணப்பம் செலுத்துவதற்கான கட்டணமாக கருதப்படும். விரும்பிய அளவு கடன் அனுமதிக்கப்படுவதில்லை வீட்டுக் கடன் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.வங்கிகளைப் பொறுத்த வரையில், கடன் வாங்குபவர் அதை திரும்பசெலுத்தும் வல்லமை உள்ளவராக இருக்க வேண்டும் என்பது ஒருமுக்கியமான தகுதியாகும். மேலும், வங்கிகள் கடனுக்கானஅதிகபட்ச தொகையை நிர்ணயிக்கும் வேளகைளில், வேறு சிலதகுதிகளும் இடம் பெறுகின்றன. செலுத்தப்படாமல் இருக்கும் கடன்கள், நிதி வரலாறு, விண்ணப்பதாரரின் மாதாந்திர வருமானம், பழைய கடனை திரும்பசெலுத்திய விதம், கிரெடிட் கார்டின் பயன்பாடு, பவுன்ஸ் ஆனகாசோலைகள், வங்கிகளில் அவரின் சராசரி இருப்பு, தற்போதைய வேலையில் இருக்கும் கால அள, மொத்தமாக வேலை செய்த காலஅளவு மற்றும் செய்யும் வேலையின் தன்மை ஆகிய விஷயங்களும்இந்த தொகையின் அளவை நிர்ணயம் செய்வதில் பங்குபெறுகின்றன. இந்த தகவல்களை எல்லாம் ஒன்றாக திரட்டி, தன்னால் பணத்தைதிரும்ப பெற முடியும் தொகை எவ்வளவு என்று வங்கி தீர்மானித்து அதனையே கடனாக வழங்கும். வட்டி விகிதங்கள் தொடர்பான பிரச்னைகள் வீட்டுக் கடன்களைப் பொறுத்த வரையில் நிலையான வட்டி விகிதம்(Fixed Rate) சிறந்ததா அல்லது காலத்திற்கேற்ப மாறும் ப்ளோட்டிங்வட்டி விகிதம் (Floating Rate) சிறந்ததா? வீட்டுக் கடன் பெறும்ஒவ்வொரு நபரும் எதிர்கொள்ளும் குழப்பம் இதுவாகும். குறிப்பிட்ட வகை கடன் பெறுவது என்று பெருமளவு முடிவு செய்துவிட்டாலும், சில நேரங்களில் வீட்டுக் கடன்களின் விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் உங்களுடைய வட்டி விகிதங்களில் விளையாடி விடுகின்றன. எடுத்துக்காட்டாக, நீங்கள் நிலையான வட்டி விகிதம்வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தாலும், உங்களுக்கு தரப்படும்அச்சு ஆவணங்களில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த நிலையானவட்டி விகிதம் மாறும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதால்,உங்களுடைய நிலைமை மிகவும் மோசமாகி விடும். அதேபோல,ஃப்ளோட்டிங் வட்டி விகிதங்களின் போது, வட்டி குறையும் நேரங்களுக்கான பலன்களை வங்கிகள் நிராகரித்தாலும், உங்களுக்கு சிறிதளவே பலன் கிடைக்கும். இது போன்ற சூழல்களை தவிர்க்க, வீட்டுக் கடன்களுக்கான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மிகவும் கவனமாக நீங்கள் படித்துப பார்த்து,உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். சொத்து மதிப்பில் மாறுபாடுகள் நீங்கள் ஒரு சொத்தை வாங்க திட்டமிடுகிறீர்களா? ஆமாம் என்றால்,இந்த கருத்தை படிப்பது மிகவும் அவசியம். நீங்கள் ஒரு சொத்தைவாங்கும் போது அதன் மதிப்பாக குறிப்பிடும் அளவையே,உங்களுடைய வங்கியும் எடுத்துக் கொள்ளும் என்று கருதவேண்டாம். வங்கிகள் அவற்றிற்கான வழிமுறைகளில்சொத்துக்களை மதிப்பீடு செய்கின்றன. இதற்காக சட்டப்படியான,தொழில்நுட்பம் தெரிந்த மற்றும் நிதி மதிப்பீடு செய்பவர்கள்பயன்படுத்தப்படுவார்கள். டவுன் பேமண்ட் (Down Payment) நீங்கள் டவுண் பேமண்ட் கட்டாமல், உங்களுக்கான வீட்டுக் கடன் விநியோகிக்கப்பட மாட்டாது. டவுன் பேமண்ட் என்பது, உங்களுடைய வீட்டுக் கடனில் 10 முதல் 20 சதவிகிதத்தில் ஒரு சிறுதொகையை செலுத்துவது தான். இது ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். இந்த பணத்தை செலுத்துவது வீட்டுக் கடனை பெறுவதற்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, நீங்கள் 10 லட்சம்ரூபாய் வீட்டுக் கடன் பெறும் போது, அதில் 1 அல்லது 2 இலட்சம்ரூபாய் டவுன் பேமண்ட் ஆக இருக்கும். இந்த பணத்தை கடன்பெறுபவர் கடன் பெறும் போது வைத்திருக்க வேண்டும். மேலும், சந்தை விலையை விட குறைவாக வங்கி உங்களுடைய சொத்தை மதிப்பீடு செய்தால், கடன் பெறுபவர் மீதத் தொகையை செலுத்த வேண்டும். இதன் மூலம் உங்களுடைய டவுன் பேமண்ட் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து விடும். இந்த சிக்கலான சூழலைதிறனுடன் எதிர்கொள்ள நினைத்தால், சொத்தை முன்னதாகவே மதிப்பிட்டு விடுங்கள் மற்றும் டவுன் பேமண்டை உங்களிடம் தயாராக வைத்திருங்கள் பத்திரம் மற்றும் தடையில்லா சான்றுதல் நீங்கள் மிகவும் எதிர்பார்க்கும் வீட்டுக் கடன் நிராகரிக்கப்பட காரணமாக இருப்பவை டைட்டில் டீட் மற்றும் தடையில்லா சான்றுகள் ஆகியவையாகும். இவற்றை வங்கி கேட்கும்வடிவங்களில் கொடுக்க வேண்டியது அவசியமாகும். இது போன்ற ஆவணங்களை, சரியான வடிவங்களில் கொடுக்காமல் இருந்தால் நீங்கள் வீட்டுக் கடன் பெறுவது கனவு தான். இது போன்ற சிக்கலான சூழல்களை எதிர்கொள்வதை தவிர்க்க,வங்கிகள் எதிர்பார்க்கும் எல்லாவிதமான ஆவணங்களைப் பற்றியும்விசாரியுங்கள் மற்றும் அவற்றை குறிப்பிட்ட நேரத்தில் தயாராகவைத்திருக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்திடுங்கள். முடிவுரை ஒரு வீட்டையோ அல்லது சொத்தையோ வாங்குவது அனைவருக்கும் கனவாக இருந்தாலும், அது வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளில் ஒன்றாகவும் உள்ளது. ஒவ்வொரு தனிமனிதருனும் சொத்துக்களை தங்களுடைய சேமிப்புகள் அல்லதுவருமானத்தை கொண்டே வாங்க முடிவதில்லை. அவர்களுக்கு வங்கிகளின் வீட்டுக் கடன்கள் தேவைப்படுகின்றன. வீட்டுக் கடன்கள் மக்கள் விரும்பும் வழிமுறைகளில் ஒன்றாக இருந்தாலும், அவற்றைப் பெறுவது அவ்வளவு எளிதும் அல்ல. இந்த செயல்பாட்டில் பெரும்பாலானவர்கள் பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள் ஆனால் மேற்கண்ட தகவல்களை கொண்டு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். Admin Share ‹ › Home View web version Powered by Blogger

Wednesday 14 May 2014

டான்செடதேர்வு முடிவுகள்

டான்செட்' தேர்வு முடிவு வெளியீடு சென்னை: எம்.இ., - எம்.டெக்., - எம்.பி.ஏ., உள்ளிட்ட, முதுகலை படிப்புகளில் சேர்வதற்காக, அண்ணா பல்கலை நடத்திய, பொது நுழைவுத்தேர்வு (டான்செட்) முடிவு, பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில், முதுகலை படிப்புகளில், 8,000த்திற்கும் அதிகமான இடங்கள் உள்ள

வங்கி கடன் வட்டி உயர்வு.

வங்கி கல்விக் கடன் வட்டி விகிதம் திடீர் உயர்வு: வங்கி கல்விக் கடன் வட்டி விகிதம் திடீர் உயர்வு: அதிகரிக்கிறது பெற்றோரின் சுமைவங்கிகளில்கல்விக் கடனுக்கான வட்டிவிகிதம் உயர்த்தப்பட்டுள் ளதால் பெற்றோரின் சுமைஅதிகரித் துள்ளது.மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்குதேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும், தனியார் வங்கிகளும் கல்விக்கடன் வழங்கி வருகின்றன. கல்விக்கடனுக்கான வட்டியை பெற்றோர் மாதந்தோறும்செலுத்த வேண்டும். இக்கடனுக்கான அசல் தொகையை மாணவர்படித்து முடித்து வேலைக்குப் போன பிறகு செலுத்தினால்போதும். கல்விக்கடனைப் பொருத்தவரை மகனாக இருந்தால் படித்துமுடித்து வேலைக்குப் போய் கடனை அடைத்துவிடுவான்என்று நினைக்கும் பெற்றோர், மகளாக இருந்தால் படித்துமுடித்து வேலைக்குப் போனாலும் திருமணத்துக்குப் பிறகு கல்விக் கடனைஅடைக்காமல் போய்விடக் கூடும் என்பதால் மகளைகடன் வாங்கி படிக்க வைக்கஅவர்கள் விரும்புவதில்லை. இதுபோன்ற காரணத்தால் மாணவிகள் படிக்கா மல் இருந்துவிடக்கூடாதுஎன்பதால், மாணவிகளுக்கு அரை சதவீதம் குறைவானவட்டியில் வங்கிகள் கல்விக் கடன் அளிக்கின்றன. “ஆண்டுதோறும் சத்தமில்லாமல் கல்விக் கடனுக்கான வட்டிவிகிதத்தை வங்கிகள் அதிகரித்து விடுகின்றன” என்று பெற்றோர் புகார்கூறுகின்றனர். இந்தியன்வங்கியில் கல்விக் கடன் வட்டிமாணவனுக்கு 12.05 சதவீதமாகவும், மாணவிக்கு 12 சதவீதமாகவும் இருந்தது. இது, தற்போது மாணவனுக்கு0.50 சதவீதமும், மாணவிகளுக்கு 0.05 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அந்த வங்கியின்அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆண்டுக்குசராசரியாக ரூ.1 லட்சம் வரைகல்விக் கடன் வழங்கப்படுகிறது. இதுவரைவாங்கிய கடன் ரூ.3 லட்சம்என்று வைத்துக் கொண் டால் மேற்கண்டபுதிய வட்டி விகிதத்தின்படி மாணவனாகஇருந்தால் ஆண்டுக்கு ரூ.1500-ம், மாணவியாகஇருந்தால் ரூ.150-ம் அதிகமாகசெலுத்த வேண்டும். இந்தியன்ஓவர்சீஸ் வங்கியில் மாணவனுக்கான கல்விக் கடன் வட்டி12.25 சதவீதம், மாணவிக்கு 11.75 சதவீதம், கனரா வங்கியில் மாணவனுக்கு11.75 சதவீதம், மாணவிக்கு 11.25 சதவீதம், தனியார் வங்கியான தமிழ்நாடுமெர்கன்டைல் வங்கியில் மாணவ, மாணவி எனஇருபாலருக்கும் ஒரேமாதிரியாக 14.25 சதவீதம் கல்விக் கடன்வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்த வங்கிகளில் கடந்தஆண்டு வட்டி விகிதமே நீடிக்கிறதுஎன்றும் இந்தாண்டு இதுவரை வட்டி விகிதம்உயர்த்தப்படவில்லை என்றும் அந்த வங்கிகளின்அதிகாரிகள் தெரிவித்தனர். பாரத ஸ்டேட் வங்கியைப் பொருத்தவரைரூ.4 லட்சம் வரையிலான கல்விக்கடனுக்கு மாணவனிடம் 13.50 சதவீத வட்டியும், மாணவியிடம்13 சதவீத வட்டியும் தற்போது வசூலிக்கப்படுகிறது. கடந்தஆண்டு நவம்பர் 7-ம் தேதி 0.20 சதவீதம்கல்விக் கடன் வட்டி உயர்த்தப்பட்டதுஎன்று அவ்வங்கி அதிகாரி ஒருவர் கூறினார். இது தொடர்பாக அகில இந்திய வங்கிஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.ஹெச்.வெங்கடா சலம்கூறுகையில், “கல்விக் கடன் வட்டிவிகிதம் அதிகரிக்கப்பட் டிருப்பதற்கு தாராள மயமாக்கலின் தாக்கமேகாரணம். தாராளமயமாக் கலுக்கு முன்பு இதுபோலவட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை. கடன்அல்லது டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்தோஅல்லது அதிகரித்தோ அந்தந்த வங்கி நிர்வாகமேநிர்ணயித்துக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கிஅனுமதி அளித்திருப்பதும் ஒரு காரணம்தான்” என்றார். “ஆண்டுக்குஇத்தனை லட்சம் மாணவ, மாணவிகளுக்குகோடிக் கணக்கான பணம் கல்விக்கடனாக வழங்கப்பட்டுள்ளது என்று அரசியல் வாதிகள்மார்தட்டிக் கொள்கின்றனர். ஆனால், கல்விக் கடனுக்கானவட்டி விகித உயர்வால் பெற்றோரின்சுமை அதிகரித்திருப்பது பற்றி அவர்கள் கவலைப்படுவதேயில்லை. இதுவே பெரிய நிறுவனங் களுக்குபாதிப்பு என்றால் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி விடுவார்கள்” என்கின்றனர்விவரம் தெரிந்தவர்கள்.

சித்ரா பௌரணமி

கன்னியாகுமரியில் இன்று கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதிக்கும் அபூர்வகாட்சி. கன்னியாகுமரி : ஆண்டுதோறும் சித்ராபவுர்ணமியன்று, முக்கடலும் சங்கமிக்கும் திருவேணி சங்கமத்தில் சூரியன் மறையும் போது, சந்திரன் உதிக்கும் அபூர்வ காட்சியை காண முடிகிறது.அதன்படி சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் இன்று சித்ராபவுர்ணமி கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று மாலை அந்த அபூர்வ காட்சியை பார்க்க

தபால்ஓட்டு எண்ணுவது எப்படி.

May 14, 2014 தபால் ஓட்டு எண்ணுவது எப்படி: தேர்தல் கமிஷன் விளக்கம் தபால் ஓட்டுக்களை எண்ணுவது குறித்து தேர்தல் கமிஷன், புதிய நடைமுறைகளை அறிவித்துள்ளது. அதன் விபரம்:ஓட்டு எண்ணிக்கை நாளின் முந்தைய நாளில், தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர், பார்வையாளரை சந்தித்து எத்தனை தபால் ஓட்டுக்கள் பெறப்பட்டுள்ளன என்ற விபரங்களை தெரிவிக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கை நாளிலும், முந்தைய நாளில் இருந்து கடைசி வரை வந்த தபால் ஓட்டுக்கள் குறித்த விபரத்தையும் தெரிவிக்க வேண்டும். = ஒரு மேஜைக்கு 500 ஓட்டுக்களுக்கு மிகாமல் வழங்க வேண்டும். = ஓட்டு எண்ணும் ஊழியர்களுக்கு, தபால் ஓட்டுக்களை எப்படி பிரித்து எண்ணுவது என்பது குறித்து ஏற்கனவே தேர்தல் கமிஷன் தெரிவித்தபடி, பயிற்சி அளித்திருக்க வேண்டும். = ஓட்டுக்களை எண்ணுவதற்காக, மேஜைகளுக்கு வினியோகிக்கும் முன்பாக, அனைத்து மேற்பார்வையாளர், உதவியாளர்களுக்கு, ஓட்டு எண்ணிக்கை தொடர்பாக விளக்கம் அளித்திருக்க வேண்டும். = ஓட்டு எண்ணிக்கை தாமதமாகவில்லை என்பதை, தேர்தல் நடத்தும் அதிகாரி உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். = ஒவ்வொரு மேஜையிலும் ஒரு நுண் பார்வையாளர் (மைக்ரோ அப்சர்வர்) கூடுதலாக நியமிக்கப்படலாம். = ஓட்டுக்களை எண்ணும்போது, 'படிவம் 13ஏ'ல் காணும் குறைபாடால், தள்ளுபடி செய்யும் நிலை ஏற்பட்டால், அதை தேர்தல் நடத்தும் அதிகாரி மறுசரிபார்ப்பு செய்ய வேண்டும். = தபால் ஓட்டுக்களை எண்ணத் துவங்கி, அரை மணி நேரத்திற்கு பின்பே, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஓட்டுக்களை எண்ண வேண்டும். அதேசமயம் தபால் ஓட்டுக்களை முடிக்கும் முன், ஓட்டுப்பதிவு இயந்திர ஓட்டுக்களை முடித்துவிடக் கூடாது. தேவையானால் கடைசி இரு சுற்றுக்களை எண்ணாமல் நிறுத்தி வைத்து, தபால் ஓட்டுக்களை முழுமையாக எண்ணி முடித்த பின்பே, இயந்திர ஓட்டுக்களை எண்ண வேண்டும். செல்லாத ஓட்டுக்கள்:தபால் ஓட்டில் 'கவர் பி' என்பதை 'கட்' செய்தால், அதில் 2 பேப்பர்கள் இருக்கும். இதில் '13ஏ' உறுதிமொழி படிவம். 'கவர் ஏ' என்பதில் '13பி' என்ற ஓட்டுச் சீட்டு இருக்கும். '13ஏ' சரியாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்த பின்பே, ஓட்டுச்சீட்டை எண்ணுவதற்கு தனியாக வைப்பர். '13ஏ' கவரில் உறுதிமொழிப் படிவம் இல்லை என்றாலோ; உறுதிமொழிப் படிவத்தில் வாக்காளர், 'கெஜடட்' அதிகாரி கையெழுத்து இல்லை என்றாலோ; உறுதிமொழிப் படிவத்தில் ஓட்டுச் சீட்டின் வரிசை எண் சரியாக இல்லை என்றாலோ; '13ஏ' படிவமே இல்லை என்றாலோ தபால் ஓட்டு தள்ளுபடியாகிவிடும். இவ்விபரங்களை, தேர்தல் நடத்தும் அதிகாரி சரிபார்ப்பது அவசியம். இதுதவிர, '13ஏ' படிவம் சரியாக இருந்தாலும் மேலும் சில காரணங்களாலும், தபால் ஓட்டு செல்லாதது ஆகிவிடும். ஓட்டுச் சீட்டில், ஓட்டு பதிவாகாமல் இருந்தாலும், ஒன்றுக்கு மேல் பதிவு செய்திருந்தாலும்; தபால் ஓட்டு கிழிக்கப்பட்டு அல்லது நனைந்து இருந்தாலும்; தபால் ஓட்டு, அதற்குரிய கவரைத் தவிர வேறு எந்த கவருக்குள் இருந்தாலும்; எந்த வேட்பாளருக்கு ஓட்டளித்துள்ளார் என புரியாமல் இருந்தாலும், குறிப்பிட்டபடி இல்லாமல் வேறுவகையில் பதிவு செய்திருந்தாலும், தபால் ஓட்டு செல்லாதது ஆகிவிடும்.இத்துடன், வெற்றி பெற்றவருக்கும், தோல்வி அடைந்தவருக்கும் உள்ள வித்தியாசத்தைவிட, மொத்த தபால் ஓட்டுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அனைத்து தபால் ஓட்டுக்களையும், தேர்தல் நடத்தும் அதிகாரி, பார்வையாளர் உள்ளிட்ட அதிகாரிகள், மீண்டும் எண்ண வேண்டும். Admin Share ‹ › Home View web version Powered by Blogger

தாய்மொழிக்கும் தடை வந்துவிடுமோ?

தாய்மொழி வழிக் கல்விக்கு மரண தண்டனை அண்மையில் (மே, 2014) உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, தாய்மொழி வழியாகக் கல்வி வழங்கச் சட்டத்தின் துணையை நாடுவோருக்கு உச்சந்தலையில் விழுந்த அடி. அப்படிப்பட்ட சட்டம் இந்திய அரசியல் சட்டத்தை மீறியதாகும் என்பது இந்தத் தீர்ப்பின் சாராம்சம். தொடக்கக் கல்வியில் (வகுப்புகள் 1-4) கன்னடம் உள்ளிட்ட தாய்மொழிகள் கல்விமொழியாக இருக்கும் என்ற கர்நாடக அரசின் ஆணையை நிராகரித்து, அந்த மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது; அதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மேல்முறையீட்டைத் தள்ளுபடிசெய்து வழங்கிய தீர்ப்பு இது. அரசியல் சட்டம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழுவின் ஒருமித்த தீர்ப்பு. அரசியல் சட்டம் அரசியல் சட்டத்திலுள்ள ஷரத்துகளில் சில, குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பற்றியவை; சில, அரசின் பொறுப்புகள் பற்றியவை. அரசியல் சட்டத்தில் அரசின் பொறுப்புகள்பற்றிய பகுதியிலேயே ஒரே ஒருமுறை தாய்மொழி என்ற கருத்து வருகிறது. மொழிவழி மாநிலப் பிரிவினை ஆணையத்தின் பரிந்துரையின்மீது (1955) அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்ட ஒரு ஷரத்து, ஒரு மாநிலத்திலுள்ள மொழிச் சிறுபான்மையினருக்குத் தொடக்கக் கல்வியை முடிந்தவரை தாய்மொழியில் வழங்குவதை மாநில அரசுகளின் பொறுப்பு ஆக்கியது. மற்றவர்களின் கல்வியை அவர்கள் தாய்மொழியில் தருவது அரசின் பொறுப்பு என்று அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்படவில்லை. இது உச்ச நீதிமன்றத்தின் ஒரு முடிவு. ஆனால், 1949-ல் மாநிலக் கல்வி அமைச்சர்கள் மாநாட்டின் தீர்மானப்படி எல்லா மாணவர்களுக்கும் அவர்கள் தாய்மொழியில்தான் தொடக்கக் கல்வி தரப்பட வேண்டும்; இதைக் கல்விக் கொள்கையாக இந்திய அரசும் ஒப்புக்கொண்டது. கர்நாடக அரசுக்கும் அம்மாநில ஆங்கிலப் பயிற்றுமொழிப் பள்ளிகளுக்கும் இடையே நடந்த வேறொரு வழக்கில் உச்ச நீதிமன்றமும் இதை ஒப்புக்கொண்டு தீர்ப்பு வழங்கியது. ஆனால், புதிய வழக்கில் இந்தக் கல்விக் கொள்கையை அரசு எல்லா வகையான பள்ளிகளிலும் கட்டாயமாக அமல்படுத்தலாம் என்பது தன் பழைய தீர்ப்பின் அர்த்தம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. சிறுபான்மையினர் தங்கள் நோக்கின்படி பள்ளிகளை நிறுவி நடத்த அரசியல் சட்டம் உரிமை அளிக்கிறது; இந்த உரிமையில் பயிற்றுமொழியை அவர்களே முடிவு செய்வதும் அடங்கும்; அது அவர்களுடைய தாய்மொழி யாகத்தான் இருக்க வேண்டும் என்று அரசு கட்டாயப் படுத்த முடியாது என்பது உச்ச நீதிமன்றத்தின் கருத்து. இதைப் பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் சொல்லி யிருக்கிறது; இந்த வழக்கிலும் சொல்கிறது. சிறுபான்மை யினருக்குத் தரப்பட்டுள்ள இந்த உரிமைபற்றிய ஷரத்து, அவர்களுக்குத் தங்கள் மொழியையும் பண்பாட்டையும் பாதுகாக்கவும் வளர்க்கவும் தரப்பட்டுள்ள உரிமை பற்றிய ஷரத்துக்கு அடுத்துவருகிறது. இந்த இரண்டு உரிமைகளுக் கும் தொடர்பு உண்டு; பின்னது முன்னதற்கு ஒரு கருவி என்பதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. அரசின் அதிகார வரம்பு அரசிடம் பணம் வாங்காமல், மாணவர்களிடம் அதிமாகப் பணம் வசூலித்து நடத்தப்படும் தனியார் பள்ளி களின் பயிற்றுமொழிக் கொள்கைபற்றி அரசு ஆணை யிட முடியாது. ஏனென்றால், கல்வி தருவது அரசியல் சட்டத்தில் தொழில் என்று சொல்வதில் அடங்கும்; லாபத்துக்காகச் செய்தாலும், சேவையாகச் செய்தாலும் அது தொழில்; எந்தத் தொழிலையும் தடை இல்லாமல் செய்ய அரசியல் சட்டம் குடிமக்களுக்கு உரிமை அளிக் கிறது. பயிற்றுமொழி பற்றிய அரசின் ஆணை தொழில் சுதந்திரத்தில் தலையிடுவதாகும். இது உச்ச நீதிமன்றத்தின் வாதம். அரசுக்குத் தொழிலை நெறிப் படுத்தும் அதிகாரம் உண்டு என்று நீதிமன்றம் ஒப்புக் கொள்கிறது; தொழிலாளர் நலம், சுற்றுச்சூழல் நலம் முதலானவற்றைக் காக்க அரசுச் சட்டம் இயற்றி தொழில்செய்வதைக் கட்டுப்படுத்தலாம். அரசின் கட்டுப் படுத்தும் அதிகாரம் வரம்புக்கு மீறக் கூடாது. கல்வியைப் பொறுத்தவரை பள்ளிகளின் தரத்தை, கல்வியின் தரத்தை நிலைநாட்டுவது அரசின் பொறுப்பு. ஆனால், கல்வியின் தரத்தைப் பயிற்றுமொழி பாதிக்காது என்ற முடிவுக்கு நீதிமன்றம் வருகிறது. உயர்நிலைக் கல்வியில் ஆங்கிலம் தரத்தைக் கூட்டுகிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்; தொடக்கக் கல்வியில் தாய்மொழியோ ஆங்கி லமோ தரத்தைக் கூட்டுகிறது என்று சொல்ல முடியாது. அது எதுவாகவும் இருக்கலாம்; அதைத் தேர்ந்தெடுப்பது பெற்றோரின் உரிமை என்பது உச்ச நீதிமன்றத்தின் வாதம். இது ஆதாரமற்ற வாதம். தாய்மொழிவழிக் கல்வி யின் நன்மைகளைப் பற்றிக் கல்வியாளர்களிடம் ஒருமித்த கருத்து இருக்கிறது. இதை நீதிமன்றமும் ஏற்றுக்கொள் கிறது. ஆனாலும், இதை உச்ச நீதிமன்றம் உதாசீனப்படுத்து வது கல்வியைத் தொழிலாகப் பார்ப்பதால் என்றே சொல்ல வேண்டும். சமூக உணர்வில்லாத கல்வி பயிற்றுமொழியைப் பொறுத்தவரை தன்னிடம் நிதியுதவி பெறாத பள்ளிகள் அரசின் கொள்கையைப் பின்பற்றாதபோது அவற்றுக்கு அங்கீகாரம் அளிக்க மறுப்பது அதிகார வரம்பை மீறுவதாகும்; மக்களின் வரிப் பணத்தைக் கொடுக்கும்போதுதான் அரசு நிபந்தனைகள் போடலாம்; இல்லையென்றால் அரசுக்கு அதிகாரம் இல்லை; அரசுப் பள்ளிகளிலும் அரசிடம் நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் தாய்மொழி பயிற்றுமொழியாக இருக்கத் தடை இல்லை என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சொல்கிறது. இந்த வாதத்தை மேலெடுத்துச் சென்றால், தனியார் பள்ளிகள் மும்மொழித் திட்டத்தைக் கைவிடுவது அவற்றின் விருப்பம்; மாநிலத்தின் ஆட்சிமொழியைப் படிக் காமல், அரசின் செயல்பாடுகளில் பங்கேற்க முடியாமல், ஜனநாயகத்துக்கு ஊறு விளைந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை; இப்பள்ளிகள் மனிதநேய, சமூகவியல், வரலாற்றுப் பாடங்களே பள்ளி மாணவர்களுக்கு வேண்டாம் என்று முடிவுசெய்தாலும் ஏற்றுக்கொள்ளலாம் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். எது பேச்சுரிமை? பொதுநன்மையை விட தனிநபர் உரிமையே முக்கியம் என்று உச்ச நீதிமன்றம் அரசியல் சட்டத்தைக் காட்டி வாதிடுகிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் கல்வி பிறப் புரிமை என்னும்போது அந்தக் கல்வியை எந்த மொழியில் பெறுவது என்பதற்கும் உரிமை இருக்கிறது என்ற கர்நாடக உயர் நீதிமன்ற முடிவை உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், பேச்சுரிமையின் கீழ் பயிற்று மொழியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை வரும் என்கி றது உச்ச நீதிமன்றம். பேச்சுரிமையில் கருத்து வெளியி டும் உரிமையோடு கருத்து பெறும் உரிமையும் அடங்கியிருக் கிறது. எந்த மொழியிலும் ஒருவர் கருத்தை வெளியிடலாம்; கருத்தைப் பெறலாம். கல்வி, கருத்தைப் பெறவும் வெளியிடவும் ஒரு சாதனம். அது எந்த மொழியிலும் இருக்கலாம். இதுவே நீதிமன்றத்தின் வாதம். பேச்சுரிமையைச் சரிவரப் பயன்படுத்தக் கல்வி உதவும்; எனவே கல்விக்கூடங்கள் பேச்சுரிமையை வளர்க்கும் இடங்கள் என்பது உண்மைதான். ஆனால், தொடக்கப் பள்ளியில் தெரியாத மொழியில் கல்வி நடக்கும்போது மாணவர்கள் கருத்து விளக்கம் கேட்க முடியாமல், தங்கள் கருத்தைச் சொல்ல முடியாமல் வாயடைத்துப்போகிறார்கள். இது எப்படிப் பேச்சுரிமை ஆகும்? ஆட்சிமொழியைப் பொறுத்தவரை, எந்த மொழி பேசுபவரும் அரசோடு தொடர்புகொள்ள, அரசின் நன்மைகளைப் பெறத் தங்கள் மொழியில் பேச, எழுத வாய்ப்புக் கேட்பது பேச்சுரிமையின் கீழ், ஜனநாயக நியாயத்தின் கீழ், மனித உரிமையின் கீழ் வரும். கல்வியில் தன் மொழி அல்லாத, தனக்குத் தெரியாத மொழியில் கற்பேன் என்பது எப்படிப் பேச்சுரிமை ஆகும்? உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, சமூகத்தின் பொது நன்மையைக் காப்பதில் அரசுக்கு இருக்கும் கடமையைக் குறைத்து, வணிக நிறுவனங்கள் தரும் சாமான்களை வாங்குவதற்குப் பொதுமக்களுக்கு உள்ள உரிமை கல்வியைப் பெறுவதிலும் உண்டு என்று கல்வியைச் சந்தைப்படுத்தும் போக்குக்குத்தான் துணைசெய்கிறது. - இ. அண்ணாமலை, சிகாகோ பல்கலைக்கழகத்தில் தென்னாசிய மொழிகள், நாகரிகங்கள் துறையில் வருகைதரு பேராசிரியர் தொடர்புக்கு: annamalai38@yahoo.com

கடவுள் எங்கே?

கடவுள் எங்கே? ராஜேஷ் முடிவெட்டிக் கொள்ள வழக்கமாகச் செல்லும் கடைக்குச் சென்றான். முடிதிருத்துபவர் அவனுக்கு நெருக்கமான நண்பர். இருவரும் பல விஷயங்கள் பற்றி மகிழ்ச்சியாக உரையாடுவர். அன்றும் அப்படியே பலவிஷயங்கள் பற்றி பேசினர். இடையில் கடவுளைப் பற்றிப் பேச்சு வந்தது. முடிதிருத்துபவர், ""எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. கடவுள் இருக்கிறார் என்று நான் நம்ப மாட்டேன்!'' என்றார். ""ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?'' என்று கேட்டான் ராஜேஷ். ""காரணம் மிகச் சுலபமானது. தெருவில் போய்ப்பாருங்கள். கடவுள் இருந்தால் நோயால் வாடுபவர்கள் இருப்பார்களா? கடவுள் இருந்தால் கைவிடப்பட்ட குழந்தைகள் தெருவில் அலையுமா? கடவுள் இருந்தால் துன்பமும், வலியும் இராது. இதையெல்லாம் அனுமதிக்கும் கடவுள் நிச்சயம் இருப்பார் என்று நான் நம்பவில்லை,'' என்றார் முடிதிருத்துபவர். ராஜேஷ் அதற்கு மறுப்பு சொல்லவில்லை. வீணாக விவாதத்தை வளர்க்க வேண்டாம் என்று மவுனமானார். முடிதிருத்தும் வேலைமுடிந்து, ராஜேஷ் வெளியே போனார். அவர் போன சற்று நேரத்தில், வீதியில் நீண்ட தாடியும் அடர்ந்த முடியுமாய், ஒரு ஆள் நிற்பதை கடைக்காரர் பார்த்தார். அந்த ஆளைப் பார்த்தால், முடிதிருத்தும் கடையை மாதக் கணக்கில் எட்டிப் பார்க்காதவர் போலத் தோன்றியது. அவ்வளவு அடர்ந்தும், சடைபிடித்த முடியும் தாடியும் இருந்தன. அப்போது முன்னால் வந்து போன ராஜேஷ் மீண்டும் கடைக்கு வந்தார். ""என்ன?'' என்று கேட்டார் முடிதிருத்துபவர். ""ஒரு விஷயம்! முடிதிருத்துபவர் யாருமே இல்லை என்று சொல்லலாம்,'' என்று வந்தேன். ""என்ன உளறுகிறீர்? இதோ! நான் இருக்கிறேன். நானும் ஒரு முடிதிருத்துபவன் தானே? அப்படி இருக்க முடிதிருத்துபவரே இல்லை என்று எப்படி நீங்கள் சொல்லலாம்?'' என்று எரிச்சலாக கேட்டார் முடிதிருத்துபவர் . ""இல்லை! முடிதிருத்துபவர் இருப்பது உண்மை என்றால் அதோ தெருவில் நிற்கிற அந்த ஆசாமி இப்படி அலங்கோலமான தலைமுடி, சிக்குப்பிடித்த தாடியுடன் இருப்பானேன்?'' என்று கேட்டார் ராஜேஷ். ""ஓ! அதுவா? விஷயம் என்னவென்றால், அந்த ஆசாமி என்னிடம் வருவதில்லை!'' என்றார் முடிதிருத்துபவர். ""சரியாகச் சொன்னீர்கள். அதுதான் விஷயம். கடவுளும் இருக்கவே செய்கிறார். ஆனால், என்ன நடக்கிறது என்றால், மக்கள் அவரை அணுகுவதில்லை. அவரைத் தேடிப் போவதில்லை. அதனால்தான் எங்கும் நிறைய துன்பமும், வேதனையும் உலகில் நிறைந்துள்ளன!'' என்றார் ராஜேஷ். உண்மையை உணர்ந்தார் முடிதிருத்துபவர்.

ஓய்வூதியம் ்court order.

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம்: ஐகோர்ட் உத்தரவு: தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம்: ஐகோர்ட் உத்தரவு: தொழிற்கல்வி ஆசிரியர்களாக பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர்களுக்கு, பகுதிநேர பணிக்காலத்தின், 50 சதவீதத்தை, நிரந்தர பணிக்காலத்துடன் சேர்த்து, ஓய்வூதியப் பலன்கள் வழங்க வேண்டும்' என, அரசுக்கு, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.கடலாடி பூதகுடி ராமர், மதுரை ஐ?கோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: தொழிற்கல்வி பகுதிநேர ஆசிரியராக, 1980ல் பணியில் சேர்ந்தேன். 2013ல் ஓய்வு பெற்றேன். பகுதிநேர பணிக்காலத்தின், 50 சதவீதத்தை, நிரந்தர பணிக்காலத்துடன் சேர்க்கவேண்டும் இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்து, நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, மனு மீது, 12 வாரங்களுக்குள், பள்ளிக்கல்வித் துறை செயலர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

sslc last exam

10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு: நாளை முதல் விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு: நாளை முதல் விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் 26-ம் தேதி துவங்கியது. இந்தத் தேர்வுகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது.பத்தாம் வகுப்புத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை முதல் துவங்குகிறது. இதில் 50 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடவுள்ளனர். 10-ம் வகுப்பு தேர்வு முடிவ...

கோவில் உயரம்

கோவில் கோபுர உயரம்
1, ஸ்ரீரங்கம் – 236 அடி 2, திருவண்ணாமலை – 217 அடி ராஜகோபுரம் கிழக்கு. 3, தஞ்சாவூர் – 216 அடி பிரகதீஸ்வரர் கோபுரம் 4, ஆவுடையார் கோவில் – 200 அடி www.brahminsnet.com

TET CV

TN TET Paper2 certificate verification start: may 6-12 concern CEO office call letter model......

தொலைந்த சான்று மீண்டும் பெற

மதிப்பெண் சான்றிதழையோ அல்லது பள்ளி இறுதி வகுப்பு மாற்றுச் சான்றிதழையோ தொலைத்த மாணவர்-என்ன செய்ய வேண்டும் ? மதிப்பெண் சான்றிதழையோ அல்லது பள்ளி இறுதி வகுப்பு மாற்றுச் சான்றிதழையோ தொலைத்த மாணவர், டூப்ளிகேட் சான்றிதழுக்கு விண்ணப்பித்து அது கிடைக்கும்வரை, சி.சி.எம். எனப்படும் சான்றிட்ட மதிப்பெண் நகலை (சர்ட்டிபைடு காப்பி ஆஃப் மார்க்‌ஷீட்) அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெற்று உபயோகிக்கலாம். சான்றிட்ட மதிப்பெண் நகலைப் பெற, அதற்கென அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் கிடைக்கும் விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும். அத்துடன் கடைசியாகப் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடமிருந்து சான்றிதழ் பெற்று, கட்டணத் தொகையாக ரூ.305-ஐ அரசுக் கருவூலத்தில் செலுத்தியதற்கான ரசீதை இணைத்து அனுப்பவேண்டும். இத்துடன், சுயமுகவரியுடன் கூடிய உறையில் ரூ.30 மதிப்புள்ள தபால் தலையை ஒட்டி அனுப்பவேண்டும். சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கருவூலக் கிளையில் பணம் செலுத்த வேண்டும். மற்ற ஊரைச் சேர்ந்தவர்கள், அந்தந்த ஊரிலுள்ள ஸ்டேட் வங்கியின் கரூவூலக் கிளையில் பணம் செலுத்தி ரசீது பெற வேண்டும். சான்றிட்ட மதிப்பெண் சான்றிதழ், ஓரிரு நாட்களில் விண்ணப்பதாரரின் வீட்டு முகவரிக்கு அனுப்பப்படும். ஓர் ஆண்டு வரை இந்தச் சான்றிதழைப் பயன்படுத்தலாம். அதற்குள் டூப்ளிகேட் சான்றிதழுக்கு விண்ணப்பித்து புதிய சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

நினைவூட்டல்

உலகிலேயே தலைநகரமல்லாத மிகப்‌பெரிய நகரம்ஷாங்காய் * அன்னை இந்திராகாந்தி பிறந்த இடம்அலகாபாத் * சென்னை மெரீனா கடற்கரையின் நீளம்13 கீலோ மீட்டர் * தமி‌ழகத்தின் முதல் முதலமைச்சர்O.P. ராமசாமி செட்டியார் * “வாதாபி கொண்டான்" என்று அழைக்கப்படுபவர்நரசிம்ம வர்மன் * “தி பிக் ஆப்பிள் நகரம்” என்று அழைக்கப்படுவதுநியூயார்க் * ஆரிய சமாஜத்தை தோற்று வித்தவர் தயானந்த சரஸ்வதி * இந்தியாவின் கடற்கரையின் நீளம்7516 கி.மி. * இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் படம்ஆலம் ஆரா * ”ஏசு காவியம்” என்ற நூலின் ஆசிரியர்கண்ணதாசன் * “இந்திய நெப்போலியன்” என்று அழைக்கப்படுபவர் சமுத்திரகுப்தர் * மச்சாசே விருது பெற்ற முதல் இந்தியர்ஆச்சார்ய வினோ பாபாவே * இந்தியாவின் முதல் IAS அதிகாரி சத்யேந்திரநாத் தாகூர். * இந்தியாவின் முதல் பாராளுமன்ற சபாநாயகர்ஜி.வி.மாவ்லங்கர் (1952-1956) * இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல்சி.இராஜகோபாலாச்சாரி * இந்தியாவின் முதல் விண்வெளி வீரர்ஸ்குவாட்ரன் லீடர், ராகேஷ் சர்மா * இந்தியாவின் முதல் செயற்கைகோள்ஆர்யப்பட்டா (1975 ஏப்லர் 19) * இந்தியாவின் முதல் தொலைபேசி அலுவலகம்கொல்கத்தா 1881 * “தென்பாண்டி சிங்கம்” என்ற நூலை எழுமதியவர்கலைஞர் மு. கருணாநிதி * இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவர்W.C பானர்ஜி * ஆக்சிஜன் இல்லாமல் எவரஸ்ட் சிகரம் ஏறிய முதல் மனிதர்- திதோர்ஜி.

Tuesday 13 May 2014

MBBS seat details.

List of Colleges Teaching MBBS Total results found : 15 Total Seats : 1950 S.No. Course Name State Name and Address of Medical College / Medical Institution University Name Management of College Year of Inception of College Annual Intake (Seats) Status of MCI Recognition Date of LOP 1 M.B.B.S. Tamil Nadu Annapoorna Medical College & Hospital, Salem The Tamilnadu Dr. MGR Medical University,Chennai Trust 2011 150 Permitted for renewal of permission u/s 10(A) for 2013-14. 2 M.B.B.S. Tamil Nadu Chennai Medical College Hospital and research centre,Irungalur,Trichy The Tamilnadu Dr. MGR Medical University,Chennai Trust 2009 150 Permitted for renewal of permission for the year 2013-2014 (vide high court order dated 07/08/2013). 3 M.B.B.S. Tamil Nadu Dhanalakshmi Srinivasan Medical College and Hospital,Perambalur The Tamilnadu Dr. MGR Medical University,Chennai Trust 2011 150 Permitted for renewal of permission u/s 10(A) for 2013-14. 4 M.B.B.S. Tamil Nadu ESIC Medical College, Chennai The Tamilnadu Dr. MGR Medical University,Chennai Govt. 2013 100 Permitted u/s 10(A)for 2013-14. 10/07/2013 5 M.B.B.S. Tamil Nadu Government Sivgangai Medical College, Sivaganga The Tamilnadu Dr. MGR Medical University,Chennai Govt. 2012 100 Permitted for renewal of permission for the year 2013-14. 6 M.B.B.S. Tamil Nadu Govt. Thiruvannamalai Medical College, Thiruvannamalai The Tamilnadu Dr. MGR Medical University,Chennai Govt. 2013 100 Permitted u/s 10(A) for 2013-14. 10/07/2013 7 M.B.B.S. Tamil Nadu Karpaga Vinayaga Institute of Medical Sciences,Maduranthagam The Tamilnadu Dr. MGR Medical University,Chennai Trust 2009 100 Permitted for renewal of permission for the year 2013-2014. 8 M.B.B.S. Tamil Nadu Karpagam Faculty of Medical Sciences & Research, Coimbatore The Tamilnadu Dr. MGR Medical University,Chennai Trust 2012 150 Permitted for renewal of permission u/s 10(A) for 2013-14. 9 M.B.B.S. Tamil Nadu Madha Medical College and Hospital, Thandalam, Chennai The Tamilnadu Dr. MGR Medical University,Chennai Trust 2011 150 Permitted for renewal of permission u/s 10(A) for 2013-14 (Ref. order dated 04.10.2013 passed by Honble Supreme Court) 10 M.B.B.S. Tamil Nadu Melmaruvathur Adiparasakthi Instt. Medical Sciences and Research The Tamilnadu Dr. MGR Medical University,Chennai Trust 2008 150 Permitted for renewal of permission u/s 10(A) for 2012-13. 11 M.B.B.S. Tamil Nadu Sri Muthukumaran Medical College,Chennai The Tamilnadu Dr. MGR Medical University,Chennai Trust 2010 150 Permitted for renewal of permission for the year 2013-14. 12 M.B.B.S. Tamil Nadu Tagore Medical College and Hospital, Chennai The Tamilnadu Dr. MGR Medical University,Chennai Trust 2010 150 Permitted for renewal of permission for the year 2013-14 vide Honourable Supreme Court order dt.13.07.13 in SLP No.25812. 13 M.B.B.S. Tamil Nadu Thiruvarur Govt. Medical College, Thiruvarur The Tamilnadu Dr. MGR Medical University,Chennai Govt. 2010 100 Permitted for renewal of permission for the year 2013-14. 14 M.B.B.S. Tamil Nadu Velammal Medical College Hospital and Research Institute, Madurai The Tamilnadu Dr. MGR Medical University,Chennai Trust 2013 150 Permitted u/s 10(A) for 2013-14. 10/07/2013 15 M.B.B.S. Tamil Nadu Villupuram Medical College, Villupuram The Tamilnadu Dr. MGR Medical University,Chennai Govt. 2010 100 Permitted for renewal of permission u/s 10(A) for 2013-14

Monday 12 May 2014

நரசிம்ம ஜெயத்தி

ஆசிரியர்குரல் சிறப்பு பதிவு-நரசிம்ம ஜெயந்தி - Lakshmii narasimha Ashtottaram http://shrinarasimha.com/Slokas/lakshmiinrisimhaashtottaram.mp3 Navanaarasimha Mangalaa shaasanam http://shrinarasimha.com/Slokas/navanaarasimhamangalaashaasanam.mp3 http://shrinarasimha.com/Slokas/nrisimhastuti.mp3 http://shrinarasimha.com/Slokas/runavimochana.mp3

கருவூலத்தில் நமது பணப்பயன் நிலை அறிய உதவும் விபரம்

Asiriyar Kural கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா? என்பதை அறிய... அகவிலைப்படி ஊதிய நிலுவைத் தொகை பெற்றுவிட்டீர்களா? அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், ஊதியப்பட்டியல் கருவூலத்தில் சமர்ப்பித்துவிட்டோம் என்று இழுத்தடிக்கிறார்களா? கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா? எந்த நாளில் சம்பளம் வரவு வைக்கப்படும் போன்ற தகவகல்களை நீங்களே இணையத்தில் தெரிந்து கொள்ளலாம். 1. http://treasury.tn.gov.in/Public/ecstokenno.aspx என்ற தளத்திற்குச் செல்லவும். 2. உங்களது மாவட்டத்தினைத் தெரிவு செய்யவும். 3. Sub treasury ஐத் தெரிவு செய்யவும். 4. Select branch என்னும் பகுதிக்கு அருகில் உள்ள கட்டத்தில் உங்கள் வங்கியின் MICR code ஐப் பதிவு செய்யவும்.(உங்கள் காசோலைப் புத்தகத்தில் பார்த்தால் தெரியும்) 5. உங்கள் வங்கிக் கணக்கு எண்ணைப் பதிவு செய்யுங்கள். அவ்வளவு தான் நண்பர்களே! எந்த தேதியில் உங்கள் அலுவலர் கருவூலத்தில் ஊதியப்பட்டியலைச் சமர்பித்தார், எந்த தேதியில் அது காசாக்கப்படும் என அறியலாம். மேலும் கடந்த காலத்தில் நீங்கள் பெற்ற ஊதிய விபரங்களையும் அறிய முடியும். Thanks to MPTNPTF find IFSC, MICR Codes, Address, All Bank Branches in India, for NEFT, RTGS, ECS: BankIFSCcode.com bankifsccode.com http://bankifsccode.com/

பிறந்த தேதி திருத்தம் செய்வது எப்படி.

Priyaamathi Mathi shared a link. பிறந்த தேதி திருத்தம் செய்வது எப்படி? பள்ளி / கல்லூரி சான்றிதழ்களில் பிறந்த தேதியோ, வருடமோ, மாதமோ தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்தந்தஎ ல்லைக்குட்பட்ட சிவில் (முன்சீஃப்) நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும்.இதற்கு பிறப்புச் சான்றிதழ் இணைக்க வேண்டும். ஒருவேளை பிறப்புச் சான்றிதழ் இல்லாத பட்சத்தில் உள்ளூர் மருத்துவர்

பெயர் மாற்றம் செய்வது எப்படி.

சான்றிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி? பள்ளி, கல்லூரிகளில் சான்றிதழ் பெறும்போது அதில் பெயரில் பிழைகள் நேர்ந்துவிட்டால் (ஒற்றுப் பிழைகளோ, குறில், நெடில் பிழைகளோ) அந்தந்தப் பள்ளி / கல்லூரிகளிலேயே திருத்தம் செய்து வாங்கிக் கொள்ளலாம் (உதாரணத்திற்கு – சந்திர குமார் என்ற பெயர் சந்திரா குமார் என்றிருத்தல்) ஆனால் பெயரில் திருத்தம் / மாற்றம், இனிஷியல் மாற்றம்/ திருத்தம் செய்ய வேண்டுமாயின் அரசிதழில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ள வேண்டும். எவ்வாறு விண்ணப்பிப்பது? பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதினை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, தமிழக / மத்திய அரசின் ‘அ’ மற்றும் ‘ஆ’ பிரிவு அலுவலர்கள் / சான்றுறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும். பிற மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் – தமிழ்நாட்டில் வசிப்பதற்கு ஆதாரமாக உணவுப் பங்கீட்டு அட்டை/கடவுச் சீட்டு/ வாக்காளர் அடையாள அட்டை/ வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.தத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் தத்துப்பத்திரத்தின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும். கட்டணம்: பொதுவாக பெயர் மாற்றக் கட்டணம் 9-2-2004 முதல் ரூ. 415/- மட்டும் .தமிழில் பெயர் மாற்றக் கட்டணம் ரூ. 50/- மற்றும் அரசிதழ் + அஞ்சல் கட்டணம் ரூ. 65/- செலுத்தும் முறை: அலுவலகத்திற்கு நேரில் சென்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை, பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை பணமாக செலுத்தலாம். அஞ்சல் மூலம் செலுத்த: உதவி இயக்குநர் (வெளியீடுகள்), எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம், சென்னை-600 002, என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலை மூலம் செலுத்தலாம்.பண விடைத்தாள்/ அஞ்சல் ஆணைகள் ஏற்றுக் கொள்ளப்படாது. விண்ணப்பிக்கும் முன் கவனிக்கவேண்டியவை: பெயர் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்.பழைய பெயர் ( ம ) புதிய பெயரில், ‘என்கிற’என்று பிரசுரிக்க இயலாது.பிரசுரம் செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள் ஏதுமிருப்பின் அவற்றை ஆறு மாதங்களுக்குள் சரிசெய்து கொள்ள வேண்டும். அதற்குப்பின் பிழைகளை திருத்தம் செய்யக்கோரும் எவ்விதக் கோரிக்கையும் கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது.பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே. அதற்கான உறுதிமொழியினை உரிய இடத்தில் அளிக்க வேண்டும்.விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களிலும் கெசட்டட் அலுவலரிடம் கையெழுத்துப் பெற்று இணைக்க வேண்டும். நிபந்தனைகள்: விண்ணப்பதாரர் தவிர வேறு எவரும் எவ்விதத் தொடர்பும் கொள்ளக் கூடாது.பணம் செலுத்துவது தொடர்பாக விண்ணப்பதாரருக் கு நினைவூட்டு ஏதும் அனுப்பப்பட மாட்டாது.இத்துறையால் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.வெளியில் அச்சிட்ட அல்லது ஒளிப்பட நகல் படிவம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. எப்படிப் பெறுவது? அரசிதழை நேரில்பெற விருப்பம் தெரிவிப்பவர்கள், அரசிதழ் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில்வந்து அரசிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் அரசிதழ் தபால் மூலம் உரிய நபருக்கு அனுப்பப்படும்.தபால் மூலம் அனுப்பப்படும் அரசிதழ்கள், தபால்துறை மூலம் திருப்பப்படும் பட்சத்தில், அரசிதழ்கள், உரியநபர்களுக்கு மீண்டும் தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது. இது போன்ற நிகழ்வுகளில், உரிய நபர்கள் 6 மாதங்களுக்குள் நேரில் வந்து, தபால்துறை மூலம் திருப்பப்பட்ட, அவர்களுக்கான அரசிதழ்களைப் பெற்றுச் செல்லலாம். விண்ணப்பத்தில் கையெழுத்திடுமுன்: சுவீகாரம் தொடர்பாக பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில், சுவீகாரம் எடுத்துள்ள தந்தை (ம) தாயார் மட்டுமே பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து, படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பம் இட வேண்டும்.விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக (Minor) இருந்தால், தந்தை, தாயார் அல்லது பாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். பாதுகாப்பாளராக இருப்பின் அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டத ற்கான ஆணை நகல் (Legal Guardianship Order) சான்றொப்பம் பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும். கையொப்பத்தின்கீழ் உறவின் முறையை (Capital Letter-இல்) தந்தை/ தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிட வேண்டும்.' மேலும் விவரங்களுக்கு: உதவி இயக்குநர் (வெ), சென்னை-2 இல் 2852 0038, 2854 4412 மற்றும் 28544413 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் www.stationeryprinting.tn.gov.in/service_to_public.htm > என்கிற தளத்திற்கு சென்று மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ளலாம். www.stationeryprinting.tn.gov.in/forms.htm > என்கிற தளத்திற்குச் சென்று விண்ணப்பப்படிவங்களை தரவிறக்கிக் கொள்ளலாம்.

CPS

ஓய்வூதியம் அவசியமாவது ஏன்? பெரும்பாலோர் அரசாங்க உத்தியோகத்தில் சேர விரும்புவதற்கான முக்கியக் காரணமே ஓய்வூதியம் (பென்ஷன்) என்ற கவர்ச்சிகரமான விஷயமே. நாளுக்கு நாள் கூட்டுக் குடும் பங்கள் சிதைந்து தனி மரமாக மாறிக் கொண்டிருக்கும் சூழ் நிலையில், ஓய்வூதியம் தனி மனிதனுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். இன்று நாம் ஓய்வூதியத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான சில காரணங்கள் 1. ஒருவர் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு, அவர்களால் முன்பு போல பொருள் ஈட்டுவது கடினம். 2. உதாரணங்கள், நிறைய தனிக் குடித்தனங்கள்! இன்றைய இளைய சமுதாயம் ஒன்றிணைந்து வாழ விரும்புவதில்லை. 3. விலைவாசி உயர்வு கட்டுப் பாடில்லாமல் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கிறது. 4. மருத்துவ உலகின் வளர்ச் சியினால் ஒருவருடைய ஆயுட் காலம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 5. இளைய சமுதாயம் விரை வில் ஓய்வு பெற விரும்புவதால் அவர்கள் பணியில் இருக்கும் காலத்தை விட ஓய்வுக் காலம் அதிகம். அதனால் பென்ஷன் மிக மிக அவசிமாகிறது. ஜனவரி 1 2004 முதல் பணி யில் சேரும் மாநில மற்றும் மத்திய அரசாங்க ஊழியர்களுக் குக் கண்டிப்பாக New Pension Scheme எனப்படும் NPS மூலம் தான் ஓய்வூதியம் தரப்படும். மே 1 2009 முதல் அனைத்து இந்திய குடிமக்களும் இதில் பங்கு பெற லாம் என்ற அறிக்கை விடப்பட்டது. பிரிவு-1மற்றும் பிரிவு-2 என்று இரண்டு உட்பிரிவுகள் உள்ளன. பிரிவு-1ல் 60 வயதில்தான் பணத்தை எடுக்கமுடியும். பிரிவு-2ல் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும். இதில் இணைபவர்களுக்கு PRAN எண் தரப்படும். ஒருவரின் பேரில் ஒரு திட்டம் மட்டுமே அனு மதிக்கப்படும். நிறுவனம் மாறி னாலோ அல்லது ஊர் மாறினாலோ அருகில் உள்ள அலுவலகத்தை அணுகி பயன் பெற முடியும். அரசாங்க உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அவர்களு டைய சம்பளத்தில் 10% பிடிக்கப் பட்டு, அரசாங்கமும் 10% அவர்கள் கணக்கில் முதலீடு செய்கிறது. ஒருவர் விரும்பினால் 10% மேலும் இதில் சேர்க்கலாம், ஆனால் அரசாங்கம் 10% மட்டுமே நமக்காக தரும். வயது 18 முதல் 60 வரை. நடுவில் பணம் எடுக்கவோ அல்லது அதில் கடன் வாங்குவதோ முடியாத காரியம். பென்ஷன் முதிர்வு தொகையில் 60% வரை பணத்தை எடுத்துக் கொள்ளலாம். குறைந்தது 40% பென்ஷன் மூலமாக மாதா மாதம் தரப்படும். அந்த 60% பணத்தை ஒருவர் தன்னுடைய 60 வயது முதல் 70 வயதுக்குள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஒருவர் இறந்து விட்டால் அவருடய நாமினிக்கு பென்ஷன் தொகை அனைத்தும் திருப்பித்தரப்படும். தொடர்ந்து அதிகரிக்கும் பண வீக்கத்தினால் பாதுகாப்பான முதலீட்டால் பயன் இல்லை. அதற் காகத்தான் அரசாங்கமே இந்தத் திட்டத்தை பெரிதளவில் விளம் பரப்படுத்துகிறது. இதை நிர்வகிக் கும் செலவு மிக மிகக் குறைவு. அவ்வாறு திரட்டிய பணத்தை எங்கு முதலீடு செய்கிறார்கள் என்று பார்க்கலாம். முதலீட்டுவகைகள் ஈக்விட்டி (அதிகபட்சமாக 50%, குறைந்தது 10%) வைப்பு நிதித் திட்டங்கள் அரசங்கம் சாராதது (அதிகபட்சமாக30%) அரசாங்கக் கடன் பத்திரங்கள் (குறைந்த பட்சமாக 20%, அதிகபட்சமாக 80%). இந்தத் திட்டத்தில் உள்ள சாதக, பாதகங்களை உணர்ந்தால் ஒருவர் இதில் இணையலாமா வேண்டாமா என்று முடிவெடுத்துக்கொள்ளலாம். NPS சாதகங்கள் 1. ஒருவருக்கு சேமிக்கக் கூடிய ஒழுங்கு கட்டுப்பாட்டை ஏற்படுத்தும். எல்லோரும் பென் சனுடைய முக்கியத்துவத்தை உணர்வதால் இந்தத் திட்டத் திலிருந்து அவ்வளவு சீக்கிரம் வெளியே வரமாட்டார்கள். 2. இதனுடைய NAV தினசரி தெரியாததால், சந்தையின் ஏற்ற இறக்கத்தை பலர் கவனிப்ப தில்லை, ஆனால் இதுவும் சந்தை யின் போக்கிற்கேற்ப ரிடர்ன்ஸ் மாறுபடும். 3. சுமார் 8 நிறுவனங்கள் நம் முடைய முதலீட்டை நிர்வகிப்ப தால் ஒன்றிலிருந்து மற்றொன் றுக்கு நாம் வருடம் ஒரு முறை எளிதாக மாற முடியும். 4. நிறைய நிறுவனங்கள் இருப்பதால் நன்றாக செயல்பட வேண்டும் என்ற போட்டி மனப் பான்மை வரும் அது முதலீட்டாள ருக்கு நல்ல பலனையே தரும். 5. பிரிவு-1ல் குறைந்தது 6000 ருபாய், பிரிவு- 2 ல் குறைந்தது 2000 ரூபாய் சேர்த்தாலே போது மானது. அதைவிடக் குறைவாகச் சேர்த்தால் 100 ரூபாய் அபராதம் கட்டி மீண்டும் தொடரலாம். 6. சந்தையைப் பற்றி அதிகம் தெரியாதவர்கள் முதலீடு அவர்களுடைய வயதிற்கேற்ப ரிஸ்க் அறிந்து முதலீடு செய்யப்படும். அதற்கு ஆட்டோ அலகேஷன் முறை என்று பெயர். 7. வருமான வரிப் பிரிவில் பிரிவு 80CCD ல் ஒரு லட்சம் வரை வரிச் சலுகை பெற முடியும். இது சாதாரணமாகக் கிடைக்கும் சலுகையை தவிர்த்து இந்த 1 லட்சம் என்பது ஒரு நல்ல வரவேற்கத்தக்க விஷயம். NPS பாதகங்கள் 1. நீண்ட கால முதலீட்டு சந்தை யில் எப்போதுமே நல்ல ரிடர்ன்ஸ் தந்திருக்கிறது. அவ்வாறு இருக்கும்போது 50%க்கு மேல் சந்தையில் முதலீடு கூடாது என்பது, நீண்ட கால ரிடர்ன்சை அதிகம் பாதிக்கும். 2. வழக்கம்போல அரசாங்கத் தில் நிறைய கெடுபிடி விதிகள், பல இன்றைய கால கட்டத்திற்கு உதவாது. 3. இன்று சந்தையைப் போல கடன் திட்டங்களும் ரிஸ்க் வாய்ந் தவை, அதனால் மீதமுள்ள 50% பாதுகாப்பு என்று எண்ணக்கூடாது. 4. நீண்ட கால அடிப்படையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த லாம். ஆனால் ஓய்வு பெற்ற பின்பு நாம் வாங்கக்கூடிய பென்ஷன் நமக்குப் போதுமா என்பது கேள்விக்குறியே 5. முதலீடும் சென்செக்ஸ் மற்றும் நிப்டி வகை நிறுவனங் களில் முதலீடு மேற்கொள்வதால் பல சிறந்த நிறுவனங்களில் பங் களிப்பை நாம் தவற விடுகிறோம். 6. ஒருவர் வேலைக்குச் சேர்ந்தவுடன் 50% ஈக்விட்டி என்பது மிகக்குறைவு. அதுவும் 35 வயதுவரை 50%. அதற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் 2% குறைந்து கொண்டே வரும். 7. இதில் ஒவ்வொரு முதலீட்டிற்கும் 0.25% முதலீட்டின் ரூபாய் மதிப்பில் அல்லது 20 ரூபாய், இதில் எது அதிகமோ அது எடுத்துக் கொள்ளப்படும். அதிக பட்சமாக 2500 வரை. எஸ்.ஐ.பி முறை மேற்கொண்டால் மாதம் 1000 சேமித்தால் கூட 25 ரூபாய் எடுத்துக்கொள்ளப்படும். இது மாதாந்திர சேமிப்பை தொடர்பவர்களை நிராகரிப்பதற்குச் சமம். இந்தத் திட்டத்தைப் பற்றி நிறைய பேருக்கு விழிப்புணர்வு இல்லை. இது அரசாங்கத்தால் நடத்தப்படுவது என்பதற்காகவே பலர் இதில் இணைய விரும்புகிறார்கள். இந்தத் திட்டம் எளிதாக எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு நிறைய இடத்தில் ஆலோசனை மையங்கள் வைக்க வேண்டும். சாராம்சம்: உங்களுக்குள் ஒழுங்கு கட்டுப்பாடு இல்லை என்றால் இத்தகைய முதலீட்டை மேற்கொள்ளலாம். அந்த ஒழுங்குக்கு நீங்கள் கொடுக்கும் விலை பல லட்சம் ரூபாய் 30 வருட முடிவில்! தயவு செய்து மனதில் நிறுத்திக்கொள்ளவும். கடந்த 10 ஆண்டுகளில் இத்தகைய திட்டத்தின் ரிடர்ன்ஸ் சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் அரசாங்க உத்தியோகம் இல்லாதவர்களில் சேர்ந்தவர்கள் வெறும் 2.3 லட்சம் மட்டுமே. இத்திட்டத்திற்கு இதுவரை சரியான வரவேற்பு இல்லை. பென்ஷன் திட்டம் என்பது நல்ல விஷயம், அரசாங்கம் கொஞ்சம் ப்ராக்டிகலாக சிந்தித்து, மறுபரிசீலனை செய்தால் நிறைய பேர் இணைய வாய்ப்புள்ளது. இந்த க் கட்டுரையில் சில முக்கிய விஷயங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இணைய தளத்தில் விரிவாக படிக்க நினைப்பவர்கள் படிக்கலாம். இப்போது இத் திட்டத்தைத் தவிர்ப்பது நல்லது.

Wednesday 7 May 2014

கோவில் கோபுர உயரம்
1, ஸ்ரீரங்கம் – 236 அடி 2, திருவண்ணாமலை – 217 அடி ராஜகோபுரம் கிழக்கு. 3, தஞ்சாவூர் – 216 அடி பிரகதீஸ்வரர் கோபுரம் 4, ஆவுடையார் கோவில் – 200 அடி www.brahminsnet.com

Tuesday 6 May 2014

அனுமான் படம்

26,500 மணிகள் சேர்த்து செய்யப்பட்ட ஹனுமான் வடிவம்: பாதம் தொட்டால் ஒலியெழுப்பும் விநோதம் சாருவி டிசைன் லேப் (http://cdl.tv/) என்ற தனியார் அமைப்பு, தாங்கள் தயாரித்துள்ள ஹனுமான் அனிமேஷன் படத்துக்காக, துளசிதாசரின் ஹனுமான் சாலிசா என்ற 40 வரிப் பாடலைப் பாடி பிரபலப்படுத்தியது. அப்போது, அந்த நிறுவனத்துக்குத் தோன்றிய வித்தியாசமான கருத்தின் விளைவாக, 16,500 மணிகள் மூலம் ஹனுமான் வடிவம் ஒன்று உருவாக்கப்பட்டது. வெவ்வெறு நீள அகலங்களில் மணிகளைக் கோத்து, அவற்றை மேலிருந்து கீழாக கட்டித் தொங்கவிட்டு, அவற்றுக்கு ஒரு உருவம் வருமாறு அமைக்கப்பட்டது. இதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இந்த உருவம், நம் மனதுக்கு ரம்யமாக இருக்கும் வகையில் ஒலியெழுப்பும்.இந்த ஹனுமனின் பாதுகைகளைத் தொட்டால் போதும்… அதன் அதிர்வலைகள் ஒரு மணிக்குக் கடத்தப்பட்டு, பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக அனைத்து மணிகளும் ஒலிக்கும். அந்த ஒலி, மனதுக்கு ரம்யமாக இருப்பதுடன், நம்மை தியான நிலைக்கும் அழைத்துச் செல்கிறது. மணி ஒலி என்பது இந்து மதத்தில் முக்கியமான ஆன்மிக நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. ஹனுமான் சாலீஸா அனிமேஷன் படத்தின் விளம்பரத்துக்காக இது அமைக்கப்பட்டாலும் இது மக்கள் மனதில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், பெரும்பாலானோர் இதனை வணங்கி, ரசித்துச் சென்றனர். 26 அடி உயரத்தில் மணிகளால் ஆன இந்த ஹனுமான் வடிவம், மிகச் சிறந்த கலைநுணுக்க வேலைபாடாகக் கருதப் படுகிறது. இதற்காக, பொறியாளர்கள் 48 மணி நேரத்துக்கும் மேல் உழைத்துள்ளனர். https://www.youtube.com/watch?v=73-7DA-vMEM

Monday 5 May 2014

இரத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க...

ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி… Raisin on a white plate on a white backgroundஉடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக்கொண்டு அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள், காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்று விட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள். நாட்கள் காலை 6 மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி. 1-வது நாள் 1, 1, 1, -3. 2-வது நாள் 2, 2, 2, = 6. 3-வது நாள் 3, 3, 3, = 9. 4-வது நாள் 4, 4, 4, = 12. 5-வது நாள் 4, 4, 4, = 12. 6-வது நாள் 4, 4, 4, = 12. 7-வது நாள் 3, 3, 3, = 9. 8-வது நாள் 2, 2, 2, = 6. 9-வது நாள் 1, 1, 1, = 3. ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள். தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும். உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். இப்படி செய்து இருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர், ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும் செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்.