Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Friday 18 August 2017

22/8/17 jactto geo strike

*22. 8 .17 அன்று ஜேக்டோ-ஜியோ சார்பாக திட்டமிட்டபடி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும் .

அன்புடைய ஆசிரியர்களே - அரசு ஊழியர்களே வணக்கம் 
22. 8 .17 அன்று ஜேக்டோ-ஜியோ சார்பாக திட்டமிட்டபடி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும் . 
நமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராடுவோம் . 
போராட்ட களப்பணிகள் மிகச் சிறப்பாக உள்ளது என்பதனை பறைசாற்றும் விதமாகவே மதிப்புமிகு தமிழக அரசின் தலைமைச் செயலாளரின் ஆணை (No work - No pay ) இருக்கின்றது , அதாவது போராட்ட களத்தை பிசுபிசுக்க இது போன்ற அறிக்கைகளை ஒரு நாள் முன்னதாக வெளியிடும் அரசு இப்போது 5 நாட்களுக்கு முன்னதாகவே வெளியிடுகிறது என்றால் களப்பணியில் நமது ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் ஆற்றி வருகின்ற பணிக்கு கிடைத்த முதல் வெற்றியாகவே கருத வேண்டும் . 
போராட்ட களம் இது போன்ற அறிவிப்புகளை கண்டு தொய்வடையாது , களப்பணிகளை மேலும் தீவிர படுத்திட வேண்டுகிறோம். 
சிந்திப்பீர் !! ஒரு நாள் ஊதியமா , தன்மானத்தோடு வாழ்ந்திட ஓய்வூதியமா !!! 
நாம் ஒன்றுபட்டு போராடுவோம் , 
நமது உரிமைகளை மீட்போம் . 

இவன் 
பெ.இளங்கோவன் & ஜெ.கணேசன் 
தொடர்பாளர்கள் ஜாக்டோ - ஜியோ (JACTTO - GEO ).

www.mandramtn.blogspot.com

No comments:

Post a Comment