*சட்டம் அறிந்துகொள்வோம்!*
*வெற்று காசோலையில் கையெழுத்து போட்டு கடன் வாங்குபவர்கள் மீது...,* CRL.M.P.No 808/2017 Dated 26/03/2018,
மிக முக்கியமான தீர்ப்பு...
வெற்று காசோலையில் கையெழுத்து போட்டு கடன் வாங்குபவர்கள் மீது , கடன் வாங்கிய தொகைக்கு மேல் பல மடங்கு அதிக தொகையை இட்டு காசோலையை நிரப்பி வழக்கு தொடுக்கப்படும் நிலையில், கை எழுத்தை தவிர, மற்ற வாசகங்களை கடன் வாங்கியவர்தான் எழுதினாரா என கண்டுபிடிக்க, கை எழுத்து நிபுணர் முன்பு, குற்றம் சாட்டப்பட்டவர் முன்னிலையாகி, 30 தடவை அதே காசோலை வாசகங்களை எழுதி காண்பிக்க வேண்டும். அதை காசோலையில் உள்ள எழுத்துக்களின் தன்மையை ஒப்பிட்டு பார்த்து, கை எழுத்து நிபுணர் அறிக்கை தர வேண்டும். அதை முக்கிய சாட்சியாக கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும் என சமீபத்தில் மதுரையில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்திரவிட்டுள்ளது.
CRL.M.P.No 808/2017
Dated 26/03/2018
நீதியரசர் பி.என் . பிரகாஷ் இந்த தீர்ப்பை அளித்தார்
❀
No comments:
Post a Comment