Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Sunday 2 May 2021

தளபதி,மாண்புமிகு**மு.க.ஸ்டாலின்* *அவர்களின் தலைமையிலான தமிழக அரசுக்கு வரவேற்புத்தெரிவித்து,* *வாழ்த்தும்,பாராட்டும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் தெரிவித்துக் கொள்கிறது.*

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நிறுவனர் பாவலர் க.மீனாட்சிசுந்தரம் ஐயா அவர்களின் புகழ் ஓங்குக*
🟩🟩🟩🟩🟩🟩🟩


*திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர்* - *தளபதி,மாண்புமிகு*
*மு.க.ஸ்டாலின்* *அவர்களின் தலைமையிலான தமிழக அரசுக்கு வரவேற்புத்தெரிவித்து,* *வாழ்த்தும்,பாராட்டும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் தெரிவித்துக் கொள்கிறது.*
----------------------------------------
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலப்பொதுச் செயலாளர் முனைவர்- மன்றம் திரு.நா.சண்முகநாதன் விடுக்கும்* *செய்தியறிக்கை:*

*தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டு காலமாக ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் தொடர்ந்து பல்வேறு வகைகளில்  அஇஅதிமுக அரசால்  கடுமையாக பாதிக்கப்பட்டு  வந்தனர்.*

*மத்திய ஊதியம் வழங்கிட வேண்டும்,புதிய தன்பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்தினை இரத்து செய்திட வேண்டும்,* *ஏழை-எளிய குழந்தைகளுக்கான தொடக்கப்பள்ளிகளை மூடும் முடிவினைக் கைவிட வேண்டும்,பள்ளிகள் இணைப்புத்திட்டத்தினை கைவிட வேண்டும்,புதியகல்விக்கொள்கையை நிராகரித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நியாயமான   கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தம்*
 *உள்ளிட்ட அனைத்துவகையான* *போராட்டங்களையும் தமிழ்நாட்டின் ஆசிரியர்கள் -அரசு ஊழியர்கள் ஒன்றுபட்டு மேற்கொண்டனர்.*

*ஆசிரியர்கள்-அரசூழியர்கள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து  போராடும் காலங்களில் எல்லாம் ,போராடும் ஆசிரியர்கள் -அரசூழியர்கள்* *இயக்கங்களின் தலைவர்களை* *அழைத்துப்பேசி,இணக்கமான முறையில்  கோரிக்கைகளை நிறைவேற்றித்தருவதற்கு நேர்மாறாக*
*ஆசிரியர்-அரசூழியர்களின் மீது* *கடுமையான தாக்குதல்களையும்,*
*அடக்குமுறைகளையும்*
*தமிழக அரசு ஏவியது.*


*இத்தகு கடுமையான தாக்குதல்களை மேற்கொண்ட அஇஅதிமுக அரசு, நடைமுறையில் இருந்து வந்த உரிமைகளையும்  ஈவு இரக்கமற்ற வகையில் பறித்துக்கொண்டது*.

*நடைமுறையில் இருந்து வந்த,அனுபவித்து வந்த  உரிமைகளை  இழந்து தவித்திட்ட  ஆசிரியர்கள் -அரசூழியர்கள், அஇஅதிமுக  அரசின் மிகமோசமான தாக்குதல்களையும் எதிர்கொண்டு வந்தனர்.*

*ஆசிரியர்-அரசு ஊழியர்களை எதிரிகள் போலவும்,விரோதிகள் போலவும் நடத்தி வந்த அஇஅதிமுக அரசுக்கு*
*அனைத்து தரப்பு மக்களின் ஆதரவோடு தக்க பதிலடி தருவதற்கு காத்திருந்தனர்.*
*தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தையும்  பெரிதும் விரும்பினர்.*

*இத்தகு பெரும் விருப்பம் , பெரும் எதிர்பார்ப்பு தமிழக மக்களின் பேராதரவோடு தற்போது நிறைவேறி இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.**

*கடந்த 06.04.2021 அன்று நடந்து முடிந்துள்ள 16வது  தமிழக சட்டமன்றப்பொதுத் தேர்தலில் அறுதிபெரும்பாண்மையோடு வெற்றி பெற்றுள்ள திராவிட முன்னேற்றக்கழகத்திற்கும், திராவிட முன்னேற்றக்கழகத்தின்* *தலைவர்-தளபதி.மாண்புமிகு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அமைச்சரவைக்கும்,*
*தமிழக அரசுக்கும் பேரன்பு பெரும் வாழ்த்தும்-பெரும் பாராட்டும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறது*

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்*,
*திராவிட முன்னேற்றக் கழகத்தின் மிகப்பெரிய வெற்றியை பெரிதும் வரவேற்று பாராட்டுகிறது*.

*திராவிட முன்னேற்றக்கழகத்திற்கு* *மிகப்பெரும்வெற்றியை வாரி வழங்கி தந்து உள்ள தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழ்நாடு* *தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்* 
*நன்றி பாராட்டுகிறது.*

*இங்ஙனம்,*
*முனைவர்-மன்றம்*
*நா.சண்முகநாதன்*,
*மாநிலப்பொதுச்*
*செயலாளர்,*
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்.*

No comments:

Post a Comment