*பொதுமாறுதல் கலந்தாய்வு 2018-19 : தொடக்கக் கல்வித்துறைக்கான முக்கிய மாற்றங்கள்*
🛡 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2018-19-ற்கான நெறிமுறைகள் அடங்கிய பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண் 403-ல் தொடக்கக் கல்வித்துறை சார்ந்து வகுக்கப்பட்டுள்ள புதிய நெறிமுறைகளை இங்கு காண்போம்!
*⚡4 நிலைகளில் மாறுதல் நடைபெறும்⚡*
*ஒன்றியத்திற்குள்*/ *ஒன்றியம் விட்டு ஒன்றியம்.(ஒரே கல்வி மாவட்டத்தில்*)
(புதிய) *ஒரே கல்வி மாவட்டத்திற்குள்*
🛡 *வருவாய் மாவட்டத்திற்குள்*
*புதிய (கல்வி மாவட்டங்களிடையே)
🛡 வருவாய் மாவட்டம் விட்டு பிற மாவட்டம்
*⚡மாறுதல் வழங்கும் அதிகாரம்⚡*
*ஒன்றியத்திற்குள்* & *ஒன்றியம் விட்டு ஒன்றியம்* (அதே கல்வி மாவட்டத்திற்குள்) : *கல்வி மாவட்டக் கல்வி அலுவலர்*
🛡 *வருவாய் மாவட்டத்திற்குள்*: முதன்மைக்கல்வி அலுவலர்
🛡 *வருவாய் மாவட்டம் விட்டு வருவாய் மாவட்டம் மாறுதல்*: இயக்குநர்.
*⚡சிறப்பு முன்னுரிமையில் பகுப்பு⚡*
🛡 50% & அதற்கு மேலுள்ள மாற்றுத்திறனாளி (IV)
🛡 50%-க்கு கீழுள்ள மாற்றுத்திறனாளி (VII)
🛡 1.6.18-ல் 5 வருடங்களுக்கு மேல் ஆசிரியராகவுள்ள இராணுவ வீரர் மனைவி (V)
🛡 5 வருடங்களுக்குக் கீழ் பணிபுரியும் ஆசிரியராகவுள்ள இராணுவ வீரர் மனைவி (VIII)
🛡 1.6.18-ல் ஒரே பள்ளியில் குறைந்தது *5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல்* பணிபுரிந்தோர் (X)
*⚡பிற முக்கிய கூறுகள்⚡*
🛡 1.6.2017-க்கு முன் தற்போது பணிபுரியும் பள்ளியில் பணியேற்றிருக்க வேண்டும்.
🛡 1.6.2017-ற்குப் பின் தன் இணையை இழந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு நிகழ்வாக மாறுதல் வழங்கலாம்.
🛡 *மாறுதல் பெறுவோர் இனி குறைந்தது 3 ஆண்டுகள் மாறுதல் பெறும் பள்ளியில் பணியாற்ற வேண்டும்*.
🛡 2017-18-ல் பணிநிரவல் செய்யப்பட்டோருக்கு அனுமதி உண்டு.
🛡 *2018-19 முதல் முன்னுரிமை குறித்து விபரம் மாறுதல் ஆணையில் இடம் பெறும்.*
🛡 இணையர் உரிமை (SPOUSE) (XI) கோருவோர் தமது இணை பணியாற்றும் மாவட்டத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
🛡 *அலகு விட்டு அலகு மாறுதல் இல்லை.*
🛡 மாநிலச் சராசரிக்கும் அதிகமான *காலிப் பணியிடங்கள் உள்ள மாவட்டங்களில்* இருந்து *வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் வழங்குவதைத் தவிர்ப்பதோடு,*
*மாறுதல் & பதவி உயர்வில் வெளி மாவட்டங்களில் இருந்து அம்மாவட்டங்களுக்கு நிரப்புதல் வேண்டும்.*
🛡 *ஈராசிரியர் பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமனம் செய்யப்படும் வரை பணிவிடுவிப்பு இல்லை*.
*⚡வழக்கத்திற்கான மாற்றம்⚡*
🛡 *நிர்வாக மாறுதலானது கலந்தாய்விற்கு முன்னரோ பின்னரோ எப்பொழுது வேண்டுமானாலும் வழங்கப்படலாம்.*
No comments:
Post a Comment