Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Thursday 15 December 2016

7% அகவிலைப்படி உயர்வு (125% ,,லிருந்து 132%)

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்வு: முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு*

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் 18 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். அகவிலைப்படி உயர்வு கடந்த ஜூலை மாதம் முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். உயர்த்தப்பட்ட அகவிலைப்படித் தொகை இந்த மாத ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படும் என்றும், ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான நிலுவைத் தொகை அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் அரசிற்கு ஆண்டொன்றிற்கு ரூ.1833.33 கோடி கூடுதலாக செலவாகும் என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

http://www.Mandramtn.blogspot.com

No comments:

Post a Comment