வங்கி கல்விக் கடன் வட்டி விகிதம் திடீர் உயர்வு: வங்கி கல்விக் கடன் வட்டி விகிதம் திடீர் உயர்வு: அதிகரிக்கிறது பெற்றோரின் சுமைவங்கிகளில்கல்விக் கடனுக்கான வட்டிவிகிதம் உயர்த்தப்பட்டுள் ளதால் பெற்றோரின் சுமைஅதிகரித் துள்ளது.மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்குதேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும், தனியார் வங்கிகளும் கல்விக்கடன் வழங்கி வருகின்றன. கல்விக்கடனுக்கான வட்டியை பெற்றோர் மாதந்தோறும்செலுத்த வேண்டும். இக்கடனுக்கான அசல் தொகையை மாணவர்படித்து முடித்து வேலைக்குப் போன பிறகு செலுத்தினால்போதும். கல்விக்கடனைப் பொருத்தவரை மகனாக இருந்தால் படித்துமுடித்து வேலைக்குப் போய் கடனை அடைத்துவிடுவான்என்று நினைக்கும் பெற்றோர், மகளாக இருந்தால் படித்துமுடித்து வேலைக்குப் போனாலும் திருமணத்துக்குப் பிறகு கல்விக் கடனைஅடைக்காமல் போய்விடக் கூடும் என்பதால் மகளைகடன் வாங்கி படிக்க வைக்கஅவர்கள் விரும்புவதில்லை. இதுபோன்ற காரணத்தால் மாணவிகள் படிக்கா மல் இருந்துவிடக்கூடாதுஎன்பதால், மாணவிகளுக்கு அரை சதவீதம் குறைவானவட்டியில் வங்கிகள் கல்விக் கடன் அளிக்கின்றன. “ஆண்டுதோறும் சத்தமில்லாமல் கல்விக் கடனுக்கான வட்டிவிகிதத்தை வங்கிகள் அதிகரித்து விடுகின்றன” என்று பெற்றோர் புகார்கூறுகின்றனர். இந்தியன்வங்கியில் கல்விக் கடன் வட்டிமாணவனுக்கு 12.05 சதவீதமாகவும், மாணவிக்கு 12 சதவீதமாகவும் இருந்தது. இது, தற்போது மாணவனுக்கு0.50 சதவீதமும், மாணவிகளுக்கு 0.05 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அந்த வங்கியின்அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆண்டுக்குசராசரியாக ரூ.1 லட்சம் வரைகல்விக் கடன் வழங்கப்படுகிறது. இதுவரைவாங்கிய கடன் ரூ.3 லட்சம்என்று வைத்துக் கொண் டால் மேற்கண்டபுதிய வட்டி விகிதத்தின்படி மாணவனாகஇருந்தால் ஆண்டுக்கு ரூ.1500-ம், மாணவியாகஇருந்தால் ரூ.150-ம் அதிகமாகசெலுத்த வேண்டும். இந்தியன்ஓவர்சீஸ் வங்கியில் மாணவனுக்கான கல்விக் கடன் வட்டி12.25 சதவீதம், மாணவிக்கு 11.75 சதவீதம், கனரா வங்கியில் மாணவனுக்கு11.75 சதவீதம், மாணவிக்கு 11.25 சதவீதம், தனியார் வங்கியான தமிழ்நாடுமெர்கன்டைல் வங்கியில் மாணவ, மாணவி எனஇருபாலருக்கும் ஒரேமாதிரியாக 14.25 சதவீதம் கல்விக் கடன்வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்த வங்கிகளில் கடந்தஆண்டு வட்டி விகிதமே நீடிக்கிறதுஎன்றும் இந்தாண்டு இதுவரை வட்டி விகிதம்உயர்த்தப்படவில்லை என்றும் அந்த வங்கிகளின்அதிகாரிகள் தெரிவித்தனர். பாரத ஸ்டேட் வங்கியைப் பொருத்தவரைரூ.4 லட்சம் வரையிலான கல்விக்கடனுக்கு மாணவனிடம் 13.50 சதவீத வட்டியும், மாணவியிடம்13 சதவீத வட்டியும் தற்போது வசூலிக்கப்படுகிறது. கடந்தஆண்டு நவம்பர் 7-ம் தேதி 0.20 சதவீதம்கல்விக் கடன் வட்டி உயர்த்தப்பட்டதுஎன்று அவ்வங்கி அதிகாரி ஒருவர் கூறினார். இது தொடர்பாக அகில இந்திய வங்கிஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.ஹெச்.வெங்கடா சலம்கூறுகையில், “கல்விக் கடன் வட்டிவிகிதம் அதிகரிக்கப்பட் டிருப்பதற்கு தாராள மயமாக்கலின் தாக்கமேகாரணம். தாராளமயமாக் கலுக்கு முன்பு இதுபோலவட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை. கடன்அல்லது டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்தோஅல்லது அதிகரித்தோ அந்தந்த வங்கி நிர்வாகமேநிர்ணயித்துக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கிஅனுமதி அளித்திருப்பதும் ஒரு காரணம்தான்” என்றார். “ஆண்டுக்குஇத்தனை லட்சம் மாணவ, மாணவிகளுக்குகோடிக் கணக்கான பணம் கல்விக்கடனாக வழங்கப்பட்டுள்ளது என்று அரசியல் வாதிகள்மார்தட்டிக் கொள்கின்றனர். ஆனால், கல்விக் கடனுக்கானவட்டி விகித உயர்வால் பெற்றோரின்சுமை அதிகரித்திருப்பது பற்றி அவர்கள் கவலைப்படுவதேயில்லை. இதுவே பெரிய நிறுவனங் களுக்குபாதிப்பு என்றால் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி விடுவார்கள்” என்கின்றனர்விவரம் தெரிந்தவர்கள்.
Labels
- 112.
- 7 வது ஊதியக் குழு பரிந்துரைகளில் திருத்தம்:
- B
- ed கற்பித்தல் பயிறசி அதே பள்ளியில் எடுக்கலாம.
- http://www.agae.tn..nic.in/onlinegpf/
- Mandram news
- www.mandramtn.blogspot.com
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்..
- நீதி மன்ற வழக்கு
- போலியோ சொட்டு மருந்து முகாம்
- ஜேக்டோ மனித சங்கி போராட்டம்.நாளேடுகளில் வந்த் செய்திகள்
Blog Archive
-
▼
2014
(105)
-
▼
May
(36)
- June 2nd school Re open.
- English medium .
- Ignou term exam start from June 2nd.
- பிறந்த தேதி திருத்தம்.
- UPSC சலுகை.
- 2/6/2014 அனைத்து பள்ளிகளும் திறப்பு.
- no BT promotion for this yr
- பாடப் புத்தகம்
- usefull website for students.
- ரயில்கட்டணம் உயர்வு.
- திருமணமாகதவர்க்கு குடும்ப ஓய்வூதியம்
- cps ,,,எண் பெற்றபின்னர் சம்பளம்.
- குடும்ப ஒயவூதியம்
- வீட்டுக்கடன். பெறுவது எப்படி
- டான்செடதேர்வு முடிவுகள்
- வங்கி கடன் வட்டி உயர்வு.
- சித்ரா பௌரணமி
- தபால்ஓட்டு எண்ணுவது எப்படி.
- தாய்மொழிக்கும் தடை வந்துவிடுமோ?
- கடவுள் எங்கே?
- ஓய்வூதியம் ்court order.
- sslc last exam
- கோவில் உயரம்
- TET CV
- தொலைந்த சான்று மீண்டும் பெற
- நினைவூட்டல்
- MBBS seat details.
- நரசிம்ம ஜெயத்தி
- கருவூலத்தில் நமது பணப்பயன் நிலை அறிய உதவும் விபரம்
- பிறந்த தேதி திருத்தம் செய்வது எப்படி.
- பெயர் மாற்றம் செய்வது எப்படி.
- CPS
- +2 result
- கோவில் கோபுர உயரம் 1, ஸ்ரீரங்கம் – 236 அடி 2, திர...
- அனுமான் படம்
- இரத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க...
-
▼
May
(36)
No comments:
Post a Comment