Labels
- 112.
- 7 வது ஊதியக் குழு பரிந்துரைகளில் திருத்தம்:
- B
- ed கற்பித்தல் பயிறசி அதே பள்ளியில் எடுக்கலாம.
- http://www.agae.tn..nic.in/onlinegpf/
- Mandram news
- www.mandramtn.blogspot.com
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்..
- நீதி மன்ற வழக்கு
- போலியோ சொட்டு மருந்து முகாம்
- ஜேக்டோ மனித சங்கி போராட்டம்.நாளேடுகளில் வந்த் செய்திகள்
Blog Archive
-
▼
2014
(105)
-
▼
May
(36)
- June 2nd school Re open.
- English medium .
- Ignou term exam start from June 2nd.
- பிறந்த தேதி திருத்தம்.
- UPSC சலுகை.
- 2/6/2014 அனைத்து பள்ளிகளும் திறப்பு.
- no BT promotion for this yr
- பாடப் புத்தகம்
- usefull website for students.
- ரயில்கட்டணம் உயர்வு.
- திருமணமாகதவர்க்கு குடும்ப ஓய்வூதியம்
- cps ,,,எண் பெற்றபின்னர் சம்பளம்.
- குடும்ப ஒயவூதியம்
- வீட்டுக்கடன். பெறுவது எப்படி
- டான்செடதேர்வு முடிவுகள்
- வங்கி கடன் வட்டி உயர்வு.
- சித்ரா பௌரணமி
- தபால்ஓட்டு எண்ணுவது எப்படி.
- தாய்மொழிக்கும் தடை வந்துவிடுமோ?
- கடவுள் எங்கே?
- ஓய்வூதியம் ்court order.
- sslc last exam
- கோவில் உயரம்
- TET CV
- தொலைந்த சான்று மீண்டும் பெற
- நினைவூட்டல்
- MBBS seat details.
- நரசிம்ம ஜெயத்தி
- கருவூலத்தில் நமது பணப்பயன் நிலை அறிய உதவும் விபரம்
- பிறந்த தேதி திருத்தம் செய்வது எப்படி.
- பெயர் மாற்றம் செய்வது எப்படி.
- CPS
- +2 result
- கோவில் கோபுர உயரம் 1, ஸ்ரீரங்கம் – 236 அடி 2, திர...
- அனுமான் படம்
- இரத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க...
-
▼
May
(36)
Monday 12 May 2014
CPS
ஓய்வூதியம் அவசியமாவது ஏன்?
பெரும்பாலோர் அரசாங்க உத்தியோகத்தில் சேர விரும்புவதற்கான முக்கியக் காரணமே ஓய்வூதியம் (பென்ஷன்) என்ற கவர்ச்சிகரமான விஷயமே. நாளுக்கு நாள் கூட்டுக் குடும் பங்கள் சிதைந்து தனி மரமாக மாறிக் கொண்டிருக்கும் சூழ் நிலையில், ஓய்வூதியம் தனி மனிதனுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.
இன்று நாம் ஓய்வூதியத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான சில காரணங்கள்
1. ஒருவர் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு, அவர்களால் முன்பு போல பொருள் ஈட்டுவது கடினம்.
2. உதாரணங்கள், நிறைய தனிக் குடித்தனங்கள்! இன்றைய இளைய சமுதாயம் ஒன்றிணைந்து வாழ விரும்புவதில்லை.
3. விலைவாசி உயர்வு கட்டுப் பாடில்லாமல் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கிறது.
4. மருத்துவ உலகின் வளர்ச் சியினால் ஒருவருடைய ஆயுட் காலம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
5. இளைய சமுதாயம் விரை வில் ஓய்வு பெற விரும்புவதால் அவர்கள் பணியில் இருக்கும் காலத்தை விட ஓய்வுக் காலம் அதிகம். அதனால் பென்ஷன் மிக மிக அவசிமாகிறது.
ஜனவரி 1 2004 முதல் பணி யில் சேரும் மாநில மற்றும் மத்திய அரசாங்க ஊழியர்களுக் குக் கண்டிப்பாக New Pension Scheme எனப்படும் NPS மூலம் தான் ஓய்வூதியம் தரப்படும். மே 1 2009 முதல் அனைத்து இந்திய குடிமக்களும் இதில் பங்கு பெற லாம் என்ற அறிக்கை விடப்பட்டது. பிரிவு-1மற்றும் பிரிவு-2 என்று இரண்டு உட்பிரிவுகள் உள்ளன. பிரிவு-1ல் 60 வயதில்தான் பணத்தை எடுக்கமுடியும். பிரிவு-2ல் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும்.
இதில் இணைபவர்களுக்கு PRAN எண் தரப்படும். ஒருவரின் பேரில் ஒரு திட்டம் மட்டுமே அனு மதிக்கப்படும். நிறுவனம் மாறி னாலோ அல்லது ஊர் மாறினாலோ அருகில் உள்ள அலுவலகத்தை அணுகி பயன் பெற முடியும்.
அரசாங்க உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அவர்களு டைய சம்பளத்தில் 10% பிடிக்கப் பட்டு, அரசாங்கமும் 10% அவர்கள் கணக்கில் முதலீடு செய்கிறது. ஒருவர் விரும்பினால் 10% மேலும் இதில் சேர்க்கலாம், ஆனால் அரசாங்கம் 10% மட்டுமே நமக்காக தரும். வயது 18 முதல் 60 வரை. நடுவில் பணம் எடுக்கவோ அல்லது அதில் கடன் வாங்குவதோ முடியாத காரியம்.
பென்ஷன் முதிர்வு தொகையில் 60% வரை பணத்தை எடுத்துக் கொள்ளலாம். குறைந்தது 40% பென்ஷன் மூலமாக மாதா மாதம் தரப்படும். அந்த 60% பணத்தை ஒருவர் தன்னுடைய 60 வயது முதல் 70 வயதுக்குள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஒருவர் இறந்து விட்டால் அவருடய நாமினிக்கு பென்ஷன் தொகை அனைத்தும் திருப்பித்தரப்படும்.
தொடர்ந்து அதிகரிக்கும் பண வீக்கத்தினால் பாதுகாப்பான முதலீட்டால் பயன் இல்லை. அதற் காகத்தான் அரசாங்கமே இந்தத் திட்டத்தை பெரிதளவில் விளம் பரப்படுத்துகிறது. இதை நிர்வகிக் கும் செலவு மிக மிகக் குறைவு. அவ்வாறு திரட்டிய பணத்தை எங்கு முதலீடு செய்கிறார்கள் என்று பார்க்கலாம்.
முதலீட்டுவகைகள்
ஈக்விட்டி (அதிகபட்சமாக 50%, குறைந்தது 10%) வைப்பு நிதித் திட்டங்கள் அரசங்கம் சாராதது (அதிகபட்சமாக30%) அரசாங்கக் கடன் பத்திரங்கள் (குறைந்த பட்சமாக 20%, அதிகபட்சமாக 80%).
இந்தத் திட்டத்தில் உள்ள சாதக, பாதகங்களை உணர்ந்தால் ஒருவர் இதில் இணையலாமா வேண்டாமா என்று முடிவெடுத்துக்கொள்ளலாம்.
NPS சாதகங்கள்
1. ஒருவருக்கு சேமிக்கக் கூடிய ஒழுங்கு கட்டுப்பாட்டை ஏற்படுத்தும். எல்லோரும் பென் சனுடைய முக்கியத்துவத்தை உணர்வதால் இந்தத் திட்டத் திலிருந்து அவ்வளவு சீக்கிரம் வெளியே வரமாட்டார்கள்.
2. இதனுடைய NAV தினசரி தெரியாததால், சந்தையின் ஏற்ற இறக்கத்தை பலர் கவனிப்ப தில்லை, ஆனால் இதுவும் சந்தை யின் போக்கிற்கேற்ப ரிடர்ன்ஸ் மாறுபடும்.
3. சுமார் 8 நிறுவனங்கள் நம் முடைய முதலீட்டை நிர்வகிப்ப தால் ஒன்றிலிருந்து மற்றொன் றுக்கு நாம் வருடம் ஒரு முறை எளிதாக மாற முடியும்.
4. நிறைய நிறுவனங்கள் இருப்பதால் நன்றாக செயல்பட வேண்டும் என்ற போட்டி மனப் பான்மை வரும் அது முதலீட்டாள ருக்கு நல்ல பலனையே தரும்.
5. பிரிவு-1ல் குறைந்தது 6000 ருபாய், பிரிவு- 2 ல் குறைந்தது 2000 ரூபாய் சேர்த்தாலே போது மானது. அதைவிடக் குறைவாகச் சேர்த்தால் 100 ரூபாய் அபராதம் கட்டி மீண்டும் தொடரலாம்.
6. சந்தையைப் பற்றி அதிகம் தெரியாதவர்கள் முதலீடு அவர்களுடைய வயதிற்கேற்ப ரிஸ்க் அறிந்து முதலீடு செய்யப்படும். அதற்கு ஆட்டோ அலகேஷன் முறை என்று பெயர்.
7. வருமான வரிப் பிரிவில் பிரிவு 80CCD ல் ஒரு லட்சம் வரை வரிச் சலுகை பெற முடியும். இது சாதாரணமாகக் கிடைக்கும் சலுகையை தவிர்த்து இந்த 1 லட்சம் என்பது ஒரு நல்ல வரவேற்கத்தக்க விஷயம்.
NPS பாதகங்கள்
1. நீண்ட கால முதலீட்டு சந்தை யில் எப்போதுமே நல்ல ரிடர்ன்ஸ் தந்திருக்கிறது. அவ்வாறு இருக்கும்போது 50%க்கு மேல் சந்தையில் முதலீடு கூடாது என்பது, நீண்ட கால ரிடர்ன்சை அதிகம் பாதிக்கும்.
2. வழக்கம்போல அரசாங்கத் தில் நிறைய கெடுபிடி விதிகள், பல இன்றைய கால கட்டத்திற்கு உதவாது.
3. இன்று சந்தையைப் போல கடன் திட்டங்களும் ரிஸ்க் வாய்ந் தவை, அதனால் மீதமுள்ள 50% பாதுகாப்பு என்று எண்ணக்கூடாது.
4. நீண்ட கால அடிப்படையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த லாம். ஆனால் ஓய்வு பெற்ற பின்பு நாம் வாங்கக்கூடிய பென்ஷன் நமக்குப் போதுமா என்பது கேள்விக்குறியே
5. முதலீடும் சென்செக்ஸ் மற்றும் நிப்டி வகை நிறுவனங் களில் முதலீடு மேற்கொள்வதால் பல சிறந்த நிறுவனங்களில் பங் களிப்பை நாம் தவற விடுகிறோம்.
6. ஒருவர் வேலைக்குச் சேர்ந்தவுடன் 50% ஈக்விட்டி என்பது மிகக்குறைவு. அதுவும் 35 வயதுவரை 50%. அதற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் 2% குறைந்து கொண்டே வரும்.
7. இதில் ஒவ்வொரு முதலீட்டிற்கும் 0.25% முதலீட்டின் ரூபாய் மதிப்பில் அல்லது 20 ரூபாய், இதில் எது அதிகமோ அது எடுத்துக் கொள்ளப்படும். அதிக பட்சமாக 2500 வரை. எஸ்.ஐ.பி முறை மேற்கொண்டால் மாதம் 1000 சேமித்தால் கூட 25 ரூபாய் எடுத்துக்கொள்ளப்படும். இது மாதாந்திர சேமிப்பை தொடர்பவர்களை நிராகரிப்பதற்குச் சமம்.
இந்தத் திட்டத்தைப் பற்றி நிறைய பேருக்கு விழிப்புணர்வு இல்லை. இது அரசாங்கத்தால் நடத்தப்படுவது என்பதற்காகவே பலர் இதில் இணைய விரும்புகிறார்கள். இந்தத் திட்டம் எளிதாக எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு நிறைய இடத்தில் ஆலோசனை மையங்கள் வைக்க வேண்டும்.
சாராம்சம்:
உங்களுக்குள் ஒழுங்கு கட்டுப்பாடு இல்லை என்றால் இத்தகைய முதலீட்டை மேற்கொள்ளலாம். அந்த ஒழுங்குக்கு நீங்கள் கொடுக்கும் விலை பல லட்சம் ரூபாய் 30 வருட முடிவில்! தயவு செய்து மனதில் நிறுத்திக்கொள்ளவும்.
கடந்த 10 ஆண்டுகளில் இத்தகைய திட்டத்தின் ரிடர்ன்ஸ் சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் அரசாங்க உத்தியோகம் இல்லாதவர்களில் சேர்ந்தவர்கள் வெறும் 2.3 லட்சம் மட்டுமே. இத்திட்டத்திற்கு இதுவரை சரியான வரவேற்பு இல்லை.
பென்ஷன் திட்டம் என்பது நல்ல விஷயம், அரசாங்கம் கொஞ்சம் ப்ராக்டிகலாக சிந்தித்து, மறுபரிசீலனை செய்தால் நிறைய பேர் இணைய வாய்ப்புள்ளது. இந்த க் கட்டுரையில் சில முக்கிய விஷயங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இணைய தளத்தில் விரிவாக படிக்க நினைப்பவர்கள் படிக்கலாம். இப்போது இத் திட்டத்தைத் தவிர்ப்பது நல்லது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment