Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Thursday 29 May 2014

Ignou term exam start from June 2nd.

இக்னோ பருவத்தேர்வுகள் ஜூன் 2-ல் துவக்கம் இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில்(இக்னோ) பருவத் தேர்வுகள் ஜூன் 2-ம் தேதி முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக, மதுரை மண்டல மைய இயக்குநர் எஸ்.மோகனன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பது: மதுரை மண்டலத்தில் 2,500 மாணவர்கள் இத்தேர்வை எழுதவுள்ளனர். ஜூன் 2014 பருவத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இக்னோ இணையதளத்தில்(www.ignou.ac.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்குச் செல்லும் மாணவர்கள், தங்களுக்குரிய நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான தேர்வு மையங்கள் மதுரை, கோவை, ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர், உத்தமபாளையம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், தங்களுக்கான இக்னோ அடையாள அட்டையுடன் தேர்வுக்கு செல்ல வேண்டும். தேர்வு அறைக்குள் கைபேசி கொண்டு செல்ல அனுமதி கிடையாது. பிசிஏ, எம்சிஏ படிக்கும் மாணவர்களுக்கு, செய்முறை தேர்விற்கான நுழைவுச்சீட்டு ஜூன் மாத இறுதியில் அனுப்பப்படும். தேர்வு மற்றும் நுழைவுச்சீட்டு சம்பந்தமான விளக்கங்களுக்கு மாணவர்கள் மதுரை மண்டல மையத்தினை 0452-2370733, 2380733 ஆகிய தொலைபேசி எண்களிலும்,remadurai@ignou.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment