Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Wednesday 4 June 2014

இலங்கை பிரதமரின் தற்போதைய பரிதாபநிலை.

கழுகார் பதில்கள்! ராஜபக்ஷேவின் டெல்லி வருகையை எதிர்த்து, டெல்லி சென்று வைகோ போராட்டம் நடத்தினாரே... அதன் பயன் என்ன? 'ராஜபக்ஷே இந்தியாவுக்கு எப்போது வந்தாலும் கறுப்புக் கொடி காட்டப்படும்’ என்று வைகோ அறிவித்து இருந்தார். அதன்படி இந்தப் போராட்டமும் நடத்தப்பட்டு இருக்கிறது. 'சார்க் நாடுகளின் அனைத்து தலைவர்களையும் அழைக்கிறோம்’ என்று மத்திய அரசு அதிகாரிகள் இதற்குக் காரணம் சொன்னார்கள். இந்த எதிர்ப்புகள் காரணமாக ராஜபக்ஷேவின் வருகையைத் தடுக்க முடியவில்லை என்பது உண்மைதான். ஆனால், மோடியின் பதவியேற்பு விழாவுக்கு மறுதினம் ராஜபக்ஷே உள்பட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு விருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதனை கடைசி நேரத்தில் பிரதமர் மோடி, ரத்து செய்துவிட்டார். 'செக்யூரிட்டி காரணங்களுக்காக இந்த விருந்து கேன்சல் செய்யப்படுகிறது’ என்று சொல்லப்பட்டது. உண்மையான காரணம், 'இப்படி ஒரு விருந்து நடப்பது விமர்சனங்களை இன்னும் அதிகமாக்கும்’ என்று அவர் நினைத்ததாக டெல்லி அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு இருக்கிறது. வைகோ, பழ.நெடுமாறன், சீமான், வேல்முருகன், ம.க.இ.க மற்றும் பல்வேறு இயக்கத்தினர் நடத்திய எதிர்ப்புப் போராட்டங்கள், முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை, கருணாநிதி வெளியிட்ட கருத்து... 'ஈழப்பிரச்னையை பக்குவமாகக் கையாள வேண்டும்’ என்பதை மத்திய அரசுக்கு உணர்த்தியிருக்கிறது.

No comments:

Post a Comment