Labels
- 112.
- 7 வது ஊதியக் குழு பரிந்துரைகளில் திருத்தம்:
- B
- ed கற்பித்தல் பயிறசி அதே பள்ளியில் எடுக்கலாம.
- http://www.agae.tn..nic.in/onlinegpf/
- Mandram news
- www.mandramtn.blogspot.com
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்..
- நீதி மன்ற வழக்கு
- போலியோ சொட்டு மருந்து முகாம்
- ஜேக்டோ மனித சங்கி போராட்டம்.நாளேடுகளில் வந்த் செய்திகள்
Blog Archive
-
▼
2014
(105)
-
▼
June
(23)
- மாவட்டம் மாறுதல தேதி தள்ளிவைப்பு.
- தமிழ்பபல்கலைகழகம் ்b,ed
- விதவை/திருமணமாகாத மகளுக்கு ஒய்வூதியம்
- பழமொழியின் உண்மை பொருள் .
- வழக்கு அவமதிப்பு.
- மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை.
- M.b.b.s/b.d.s randam numbee
- Transfer application
- Transfer application.
- தொடக்கக்கல்வி துறை ஆசிரியருக்கான பதவியுயரவு/ பணிமா...
- தமிழ்நாடு திறந்தநிலைப்பல்கலைகழகம் பி.எட்படிப்பு வி...
- மத்திய அரசு ஊழியர்களுக்குஆறு நாட்கள் வேலையாட்கள
- எம்.எஸ.சி்இண்டஸ்டிரியல் கெமிஸ்ட்ரி க்கு பட்டதாரி பணி.
- ஆலயத்தில கடைப்பிடிக்க வேண்டியவை.
- கல்வித்துறையில் சீர்திருத்தம். தேவை
- பெயரில் தமிழில் தலையெழுத்து.
- தலைமை ஆசிரியர் கூட்டம்.
- தலைமையாசிரியர்க்கு நோட்டிஸ்
- மழை நீர் சேகரிப்பு.வாரம்
- தமிழில் தலையெழுத்து( initial in tamil) போட உத்மரவ
- இலங்கை பிரதமரின் தற்போதைய பரிதாபநிலை.
- ஆசிரியர் பயிற்சி குஜராத் பின்பற்ற மத்திய அரசு முட...
- புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் முறை.
-
▼
June
(23)
Saturday 7 June 2014
எம்.எஸ.சி்இண்டஸ்டிரியல் கெமிஸ்ட்ரி க்கு பட்டதாரி பணி.
எம்.எஸ்.சி இண்டஸ்டிரியல் கெமிஸ்ட்ரி படித்தவர்களுக்கு வேதியியல் பாடப்பிரிவு பட்டதாரி ஆசிரியர் பணி
உயர் நீதிமன்றத்தில் இண்டஸ்டிரியல் கெமிஸ்ட்ரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் படிப்பை முடித்த திருவருட்செல்வன், மதிவாணன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் பாடப்பிரிவில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி யிடத்துக்கு நாங்கள் விண்ணப்பம் செய்தோம். நாங்கள் இண்டஸ்டிரியல் கெமிஸ்ட்ரி பாடப்பிரிவில் எம்எஸ்சி படித்துள்ளோம். எம்எஸ்சி வேதியியல் படித்தவர்களுக்கு மட்டும்தான் வேதியியல் பாடப்பிரிவில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி வழங்கப்படும் என்று கூறி எங்களுக்கு பணி வழங்கவில்லை. கடந்த 20102011ல் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில் எங்களின் பாடப்பிரிவைக் காட்டி எங்களுக்கு பணி வழங்கவில்லை. எனவே, எங்களுக்கு பணி வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் பால்வசந்தகுமார், சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார் பில் ஆஜரான கே.வெங்கடரமணி வாதிடும்போது, பாரதியார்பல்கலைக்கழகத்தில் உள்ள எம்எஸ்சி இண்டஸ்டிரியல் கெமிஸ்ட்ரி பாடப்பிரிவும் எம்எஸ்சி வேதியியல் பாடப்பிரிவும் சமமானது தான் என்று உயர் நீதிமன்றம் ஏற்கனவே பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் மனுதாரர்கள் இருவரும் அதே பிரச்னையில்தான் உள்ளனர் என்றார். இதையடுத்து, நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு:
மனுதாரர்கள் இருவரும் படித்த எம்எஸ்சி இண்டஸ்டிரியல் கெமிஸ்ட்ரி படிப்பும், எம்எஸ்சி வேதியியல் படிப்பும் சமமானதுதான் என்றும் இரு பிரிவுகளில் படித்தவர் களுக்கான கல்வித் தகுதியும் ஒன்று தான் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு தீர்ப்பளித்துள்ளது. எனவே, இந்த வழக்கில் மனுதாரர்கள் மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் பாடப்பிரிவில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்ற தகுதியுள்ளவர்கள்தான். எனவே, அவர்களுக்கு பணி வழங்குவது குறித்து 8 வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உத்தரவிட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment