Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Saturday 7 June 2014

மழை நீர் சேகரிப்பு.வாரம்

பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு வாரம்: பள்ளி கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை பள்ளி கல்வித்துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 'அனைத்து வகை பள்ளிகளிலும், மழைநீர் சேகரிப்பு வாரம் கொண்டாட வேண்டும்' என, முதல்வர், உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஜூன் 9 முதல், 13 வரை, 6 முதல், 9ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியரிடையே, மழைநீர் சேகரிப்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டும். வரும், 9ம் தேதி, பள்ளி அளவில், மழைநீர் சேகரிப்பு, விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும். பள்ளியை சுற்றியுள்ள பகுதியில், பேரணி நடத்த வேண்டும். ஜூன் 10 ல், 'மழைநீர் சேகரிப்பு, வளமான எதிர்காலம்' என்ற தலைப்பில், கட்டுரை போட்டியும், ஜூன் 11 ல், ஓவிய போட்டியும், ஜூன்13 ல் மாணவர்களை, 'புராஜக்ட்' செய்யவும், அறிவுறுத்த வேண்டும். மாவட்ட அளவில், 13ம் தேதி, கண்காட்சி நடத்த வேண்டும். சிறந்த படைப்புகளுக்கு, பரிசு வழங்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment