Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Thursday 15 September 2016

தேசிய திறனாய்வு தேர்வு தேதி மாற்றம்!!!

தேசிய திறனாய்வு தேர்வு தேதி மாற்றம்!!!

பத்தாம் வகுப்பு மாணவர்கள் எதிர்கொள்ளவிருக்கும், தேசிய திறனாய்வு தேர்வு தேதி திடீரென மாற்றப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களில் திறன்மிக்கவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு மத்திய அரசு, பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை, மாதந்தோறும், கல்வி உதவி தொகை வழங்கி வருகிறது. மாநில, தேசிய அளவில் இரண்டு கட்டங்களாக நடக்கும், நடப்பு ஆண்டுக்கான மாநில தேர்வு, நவ., 6ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வரும் நவ., 6 ல் தமிழகத்தில் நடக்க இருந்த தேசிய திறனாய்வு தேர்வு தேதி மட்டும் ஒரு நாள் முன்கூட்டியே, நவ., 5ல் நடத்தப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்வி அதிகாரிகளிடம் விசாரித்த போது, தமிழக அரசு சார்பில் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் 4 தேர்வு, நவ., 6ல் நடக்கிறது; தேசிய திறனாய்வு தேர்வுக்கான தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது, என்றனர்.

No comments:

Post a Comment