Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Monday 23 May 2016

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் 17 பேர் இடமாற்றம்

ஆளுநரின் ஆணைப்படி தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் 17 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் 8 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை நியமித்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''வேலூர் மாவட்ட ஆட்சியராக நந்தகோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியராக வி.சம்பத் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக கணேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியராக கருணாகரனும், திருவாரூர் மாவட்ட ஆட்சியராக மதிவாணனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக ஹரிஹரனும், தேனி மாவட்ட ஆட்சியராக வெங்கடாச்சலமும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக ஞானசேகரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அனைவருக்குல் கல்வி திட்ட இயக்குனராக பூஜா குல்கர்னியும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனராக சமயமூர்த்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொல்லியல் துறை ஆணையரராக கார்த்திகேயனும்,போக்குவரத்துத் துறை ஆணையரராக சத்தியபிரபா சாகுவும் நியமனம் செய்யப்பட்டனர்.

அரசு இ சேவை மைய இயக்குனராக நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். துணி நூல் கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனராக வெங்கடேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

டுபிட்ஃகோ நிறுவன மேலாண்மை இயக்குனராக சொர்ணா நியமிக்கப்பட்டுள்ளார். பூம்புகார் கப்பல் கழக மேலாண்மை இயக்குனராக ராஜேந்திர ரத்னூ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அரசு கேபிள் டிவி மேலாண் இயக்குனராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment