Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Sunday 21 February 2016

10,&12ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் நடைமுறைகள்.

📝 விடைத்தாளில் எழுதிய விடைகளை அடித்து வைத்தால் இனி 2 பருவ தேர்வுகள் எழுத முடியாது என்று எச்சரித்துள்ளது  அரசு தேர்வுத்துறை.

📝 எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் விடைத்தாளில் மாணவ-மாணவிகள் எழுதிய விடைகள் அனைத்தையும் கோடிட்டு அடிக்கக் கூடாது.
-  தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன்.

📋 ''பிளஸ்-2 தேர்வு மார்ச் மாதம் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி முடிவடைகிறது.

📋 எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி முடிவடைய உள்ளது.

📋 இந்த ஆண்டு அரசு தேர்வுத்துறை புதிதாக ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

📋 மாணவ-மாணவிகள் விடைத்தாளில் தாம் எழுதிய அனைத்து விடைகளையும் தாமே முழுவதுமாக கோடிட்டு அடிக்கும் செயலானது இனி ஒழுங்கீனச்செயலாக கருதப்படும்.

📋 அவ்வாறு விடைத்தாளில் விடைகளை அடிக்கும் மாணவ-மாணவிகள் அடுத்து வரும் இரு பருவங்களிலும் தேர்வு எழுத முடியாது.

📋 இது ஒரு தண்டனை.

📋 இதை அனைத்து மாணவர்களும் அறியும் வண்ணம் பள்ளிக்கூட பிரார்த்தனை கூடத்தில் கண்டிப்பாக தலைமை ஆசிரியர்கள் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

📋 இதை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

📋 அரசாணையின்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் முன்னிலையில் இந்த ஆண்டு அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளும் தமது ஆளுகைக்கு உட்பட்ட தேர்வு மையங்களுக்கான அறை கண்காணிப்பாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும்.

📋 தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தவிர மற்றவர்கள் எவரும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2.30 மணிவரை தேர்வு மைய வளாகத்திற்குள் (ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பார்வையாளர்கள், பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்கள்) கண்டிப்பாக வரக்கூடாது.

📋 அப்படி மீறி வந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

📋 பொதுத்தேர்வு முக்கியத்துவம் கருதி ‘தேர்வு அவசரம்' என்ற வாசகத்தை தாளில் அச்சிட்டு வாகனங்களில் வழித்தட அதிகாரிகள் ஒட்ட வேண்டும்.

📋 வழித்தட அதிகாரிகள் தங்கள் வழித்தடத்தில் உள்ள தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களின் செல்போன் நம்பரை பெற்றுக்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment