நிறுத்தற்குறிகள் அறிவோம்...!!! 1. காற்புள்ளி (,) 2. அரைப்புள்ளி( ; ) 3. முக்காற்புள்ளி (:) 4. முற்றுப்புள்ளி ( . ) 5. வினாக்குறி (?) 6. உணர்ச்சிக்குறி (!) 7. இடையீட்டுக்குறி ( – ) 8. பிறைக்குறி அல்லது அடைப்புக்குறி ( () ) 9. ஒற்றை மேற்கோள்குறி (' ') 10.இரட்டை மேற்கோள்குறி (" ") 11. விழுக்காடு குறி (%) 12. விண்மீன் குறி (*) 13. வலம் சாய்க்கோடு (/) 14. இடம் சாய்க்கோடு (\) 15.கொத்துக்குறி(#) 16. தொப்பிக்குறி(^) 👇🏻 📚 காற்புள்ளி 1) பொருட்களைத் தனித்தனியே கூறும்போது காற்புள்ளி இடவேண்டும். அ) தாய், தந்தை, தமையன், தங்கை என்னும் நால்வர் வீட்டில் உள்ளனர். ஆ) நான் வங்கிக்குச் சென்று, பணத்தை எடுத்து, பின்பு கடையில் சில பொருட்கள வாங்கிக் கொண்டு, வரும்வழியில் கோவிலுக்கும் சென்றுவந்தேன். இ) ஆடுகள், மாடுகள், நாய்கள், கோழிகள் ஊரில் வாழ்கின்றன. 2) விளிப்பெயர்களை அடுத்து, காற்புள்ளி இடவேண்டும். அ) ஆருயிர்த் தந்தையே, வணக்கம் ஆ) இன்பத்திலும், துன்பத்திலும் இணைபிரியா நண்பரே, வருக. 3) வினை எச்சத்திற்குப்பின் பொருள் விளக்கத்தைக் கருதி, காற்புள்ளி இடவேண்டும். அ) கண்ணன் அண்ணனைப் பார்த்து, ‘ உங்கள் வரவை நெடுநேரம் எதிர்பார்த்து நிற்கின்றேன்’ என்றான். ஆ) ஒருவன் நன்றாகப் படித்து முடித்தபின், பரீட்சைக்குப் பயப்படமாட்டான். 4) இணைமொழிகளுக்கு இடையில் காற்புள்ளி இடவேண்டும். அ) மேலோர் கீழோர், அரசன் ஆண்டி என்ற பாகுபாடு காலனிடம் இல்லை. 5) ஆனால்,ஆயின், ஆகையால், எனவே, போன்ற சொற்களுக்கு முன் காற்புள்ளி அவசியம். அ) கந்தன் மிக நல்லவன் ; ஆனால் , அவன் படிப்பில் குறைந்தவன். ஆ) வள்ளுவர் மிகச் சிறந்த ஞானியே; ஆனால் அவர் தம்மை உலகிற்கு அறிவிக்காமல் போனது பெருங்குறையே. இ) இளமையில் கல்வி சிலையில் எழுத்து; ஆகையால், சிறுவயது தொட்டே சிரத்தையுடன் கல்விகற்கவேண்டும். 🔹அரைப்புள்ளி 1) பல செயல்களைக் குறிக்கும் ஓர் எழுவாய் வரும்போது அரைப்புள்ளி இடவேண்டும். அ) கோவலன் கொலையுண்டதைக் கேட்ட கண்ணகி எழுந்தாள் ; மதுரை மாநகர் வீதி வழியே சென்றாள் ; அரண்மனை வாயிலை அடைந்தாள் ; காவலனிடம் தன் கருத்தை விளக்கினாள் ; அரசன் ஆணையால் அவனைக் கண்டாள். ஆ) பண்டை இலக்கியங்கள் அனைத்தும் சிறந்தனவே; ஆனால், அவை எளிய நடையில் அமைந்தன என்று கூறல் இயலாது. 🔹முக்காற் புள்ளி 1)சொற்றொடரில் கூறிய ஒன்றை விரித்துக் கூறும்போது முக்காற்புள்ளி இடவேண்டும். அ) பால் ஐந்து வகைப்படும்: ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால்,பலவின்பால் என்பன. ஆ) பொருள் கூறுக: கோன், மஞ்சு, குஞ்சரம். இ) முத்தமிழ்: இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ். 🔹முற்றுப்புள்ளி 1)சொற்றொடர்கள் பொருளால் முற்றுப்பெற்றல் என்பதை அறிவிக்க முற்றுப்பெறல் என்பதை அறிவிக்க முற்றுப்புள்ளி இடுதல் வேண்டும். அ) அன்பும் பண்பும் அமைந்ததே இல்வாழ்க்கை. ஆ) நான் நேற்று என் பிறந்தநாளைக் கொண்டாடினேன். 2) சொற்குறுக்கத்தையும் (திரு.) பெயர்க்குறுக்கத்தையும் (ம.ப.பா.) அறிவிக்க முற்றுப்புள்ளி இடுதல் வேண்டும். வினாக்குறி வினாப்பொருளைத் தரும் சொற்றொடர்களுக்குப் பின் வினாக்குறி இடுதல் வேண்டும். 🔹உணர்ச்சிக்குறி 1)மகிழ்ச்சி, வியப்பு, அச்சம், அவலம், இரங்கல் போன்ற உணர்ச்சி உரைகளுக்குப் பின் உணர்ச்சிக்குறி இடுதல் வேண்டும். அ) போட்டியில் எனது நண்பர் வென்றுவிட்டார்! (மகிழ்ச்சி) ஆ) எனது உறவினர் ஒருவருடன் இப்பொழுததான் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தேன். அதற்குள் அவர் இறந்துவிட்டதாக செய்தி வந்துவிட்டதே! (வியப்பு) இ) கொடியவன் ! கொடியவன் ! (அச்சம்) இடையீட்டுக் குறி ( ) ] ஒரு சொற்றொடரின் இடையில் கருத்தை நன்கு விளக்கும் பொருட்டு, அச் சொற்றொடருடன் தொடர்புற்ற தனிக்கூற்றுச் சொற்களை அடக்கி எழுதும்போது, அவ்வாறு அடங்கி இருப்பதைக் காட்ட, அத் தனிக்கூற்றின் இருபக்கங்களிலும், இவ்வாறு சிறுகோடு அல்லது பிறைக்குறி, அல்லது பகர வளைவுக்குறி இடுதல் வேண்டும். அ) திருக்குறள் தமிழகத்திற்கு (ஏன் உலகத்திற்கே) பெருமை தேடித்தருகின்றது. ஆ) சிற்றம்பலத்திற்கு இன்றோடு பன்னிரண்டு அகவை (ஆண்டு) நிறைவுற்றது. இ) இயற்கைப் பண்பாட்டோடு வாழ்கின்றவர், உலகத்தையே பரிசாகக் கொடுத்தாலும் ஒழுக்கத்தினின்று தவறமாட்டார். பிறைக்குறி மொழிபெயர்க்கும் போதும், அருஞ்சொற்பொருளை விளக்கும்போதும், சிறுபிரிவுகளை எண்ணிக்கொண்டு வரும்போதும், பிறைக்குறி இடவேண்டும். இக்குறியை இடைப்பிறவரல் என்றும் கூறுவர். அ) பேச்சுத்திறன் (oratory) மாணவரிடம் இருத்தல் வேண்டும். இரட்டை மேற்கோள் குறி பொன்மொழிகளை மேற்கோளாகக் காட்டும்போதும், நேர்கூற்றிற்கு முன்னும் முடிவிலும், இரட்டை மேற்கோள் குறி இடுதல் வேண்டும். ‘அறஞ்செய்ய விரும்பு’ என்று ஒளவையார் கூறியுள்ளார். ஒற்றை மேற்கோள் குறி இரட்டை மேற்கோள் குறிகளுக்கு இடையில் மேற்கோள் வரும்போது ஒற்றை மேற்கோள் குறி இடுதல் வேண்டும். எழுத்துக்களையோ சொல்லையோ, ஒருவர் கருத்தில்
Labels
- 112.
- 7 வது ஊதியக் குழு பரிந்துரைகளில் திருத்தம்:
- B
- ed கற்பித்தல் பயிறசி அதே பள்ளியில் எடுக்கலாம.
- http://www.agae.tn..nic.in/onlinegpf/
- Mandram news
- www.mandramtn.blogspot.com
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்..
- நீதி மன்ற வழக்கு
- போலியோ சொட்டு மருந்து முகாம்
- ஜேக்டோ மனித சங்கி போராட்டம்.நாளேடுகளில் வந்த் செய்திகள்
Blog Archive
-
▼
2016
(482)
-
▼
March
(81)
- தஞ்சை மன்ற மாவட்டச் செயலாளர் பணி ஓய்வு செய்திதாள் ...
- Election class date
- பங்களிப்பு ஓய்வூதிய தொகை 25% எடுத்துக்கொள்ளலாம்.
- புதுச்சேரி பள்ளிகளுக்கு நேரம் மாற்றம்...
- மன்றம் மாநில மாநாடு ,ஆயத்தக்கூட்டம்
- தேர்தல் ஆணையம் அனுமதி.
- மாநில மாநாடு
- தமிழக முதலமைச்சர்கள் பட்டியல் 1920 முதல் தமிழக முத...
- Opposite words
- தஞ்சை மன்றவிழா
- 27/3/16 செய்திகள்
- 7வது ஊதியக்குழு ஒர் கண்ணோட்டம்
- பெண்ணைப் பெற்றவர்களுக்கு் ஒரு தகவல்
- வள்ளலார்- 42 வகை பாவங்கள்
- ஏழின் சிறப்புகள்
- நிறுத்தற்குறிகள் அறிவோம்...!!!
- பொதுச்செயலாளர் மடல்
- ஆசிரியர் வருங்கால வைப்புநிதியில் (TPF) இருந்து த...
- Hemalatha
- துறைகளின் தந்தை யார்?
- PAVALAR photos
- துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை...
- ஆதார் பிழைத்திருத்தம் செய்ய..
- மதிய உணவுத்திட்டத்தை கண்காணித்தல்
- மத்திய அரசு 6% அகவிலைப்படி அறிவிப்பு.
- அனைத்து ஊடகங்களின் விபரங்கள்
- வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்
- சினிமா பாடகருக்கு ,,,சூப்பர்சிங்கரில் முதல் இடம்?
- தபால் ஓட்டுகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
- Ignou - 29-வது பட்டமளிப்பிற்கான இணைய வழிப் பதிவு வ...
- SG & MG தொகை மார்ச் 31க்குள் பயன்படுத்தவேண்டும்
- Income tax is to be deducted in proportionate rat...
- நட்சத்திரத்தின்அடிப்படையில் உங்களது பொதுகுணம் :
- G.O.No.65 Dt: February 26, 2016 COMMITTEE – Exper...
- JOINT DIRECTORS-TAMIL NADU
- IMEI அறிய..
- அரசு தடை செய்த மாத்திரைகள்
- வீட்டு பூஜை குறிப்புகள்-80
- சாதி,மதம் குறிப்பிடத் தேவையில்லை
- சித்ரை திருவிழா மதுரை
- வருகால வைப்புநிதி..
- 14/3/16; செய்திகள்
- Manonmaniam Sundaranar University Convocation
- உலகில் கல்வியில் பின்லாந்து முதல் இடம்
- செய்திகள் மார்ச் 13...
- நாம் பழங்கள் எடுத்துக் கொள்ளும் முறை
- பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்…!
- தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் ...
- HOW TO INCREASE THE MEMORY POWER FOR STUDENTS:
- எல்லாம் பழகிடும்
- 23.3.2016-நெல்லை மாவட்டம் உள்ளூர் விடுமுறை
- ரயில்களில் தனியாகச் செல்லும் பெண்கள் இருக்கையை மாற...
- இடமாற்றம்- தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்க...
- தமிழ் நாட்டின் சிறப்புகள்..
- சிறுநீரக கற்களை கரைக்கும் இயற்கை பானங்கள்
- கல்வித்துறையை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!! பா...
- சித்தர்கள் வகுத்த தமிழ் எண்கள் வடிவங்கள்...
- தேர்தல் அதிகாரிகளை தொடர்புக்கொள்ள...
- பேஸ் புக் மூடு விழா..
- திடீர் ஆய்வு மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவு
- அரசு பள்ளி, கல்லூரிகளில் ஆண்டு விழா நடத்த, தேர்தல்...
- INDIAN GOVERNMENT INTRODUCED ONLINE SERVICES
- VI and VII Material for Maths
- CPS A/c statement
- உண்மைத்தன்மை
- கல்வித்துறையை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!! பா...
- Cps Rti act
- 1/4/2012 முதல் CPS.- RTI act.
- 2016-17 SSA Training details.
- முக்கிய கல்வி செய்திகள்.
- மகளிர் தின வாழ்த்துகள்
- மகளிர் தினம் வந்த வரலாறு.
- SLAS 2015 result.
- Very use ful for u.
- திருமணம் என்ற சொல்லின் விளக்கம்:
- வரைபடம் பொருத்த இயக்குனர் ஆணை.
- Zoom and see 1330 Thirukkural has written on his face
- www.mandramtn.blogspot.com
- Doctors Prescription: (Common Abbreviations)
- நடிகர் விவேக் மனம் திறந்த உருக்கமான பேச்சு
- EXAMINATIONS MAY-2016 NOTIFICATION. TNPSC DEPART...
-
▼
March
(81)
No comments:
Post a Comment