Powered By Blogger
Powered By Blogger

Blog Archive

Sunday 24 April 2016

தேர்தல் முடிவினை தலைகீழாய் திருப்பிப் போட்ட தபால் ஓட்டுகள் என்ற தலைப்புச் செய்தியை மே 19-ல் நாம் அனைத்து ஊடகங்களிலும் காணலாம்..

தேர்தல் முடிவினை தலைகீழாய் திருப்பிப் போட்ட தபால் ஓட்டுகள் என்ற தலைப்புச் செய்தியை மே 19-ல் நாம் அனைத்து ஊடகங்களிலும் காணலாம்..
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் இயக்க நடவடிக்கைகளுக்கு செவிமடுக்காத ஆட்சியாளர்களை இரு செவி கொடுத்து கேட்க வைக்க- நமது 100% தபால் ஓட்டுகள் தேவை.
இதுவரை ஆட்சிசெய்தவர்களாகட்டும்,
இனி ஆட்சி செய்யப் போகிறவர்களாகட்டும்..
யாராக இருந்தாலும் சரி...
நம் வலிமையை அவர்களுக்கு உணர்த்த இதுவே தருணம்..
ஒவ்வொரு முறையும் (வரலாற்றின் பக்கங்களை திருப்பிப் பார்த்தவர்களுக்கு தெரியும்) நாம் தெருவில் இறங்கிப் போராடியது போதும்...
இனியும் இந்த நிலை நீடிக்காமல் இருக்க நமது 100% தபால் ஓட்டுகள் தேவை..
இம்முறை நமது வாக்குரிமையை இழந்தோமானால்...
இழப்பதற்கு வேறொன்னும் இல்லா நிலையை ஆட்சியாளர்கள் விரைவில் ஏற்படுத்திவிடுவார்கள்.
கடந்த தேர்தலில் பெருவாரியான ஆசிரியர்கள் தபால் வாக்குரிமையை இழந்தது போல் இந்த முறை நடந்துவிடக் கூடாது தோழர்களே.
தேர்தல் முடிவு நம் கையில் தான் (தபால் ஓட்டை பொறுத்து) உள்ளது என்பதை மீண்டும் நிலைநாட்டுவோம்.
எனவே இன்று தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு செல்லும் ஆசிரியர்கள் தயவுசெய்து தங்களின் வாக்காளர் அடையாள அட்டை நகல், சட்டமன்ற தொகுதி, பாகம் எண், வரிசை எண் ஆகியவற்றை குறித்து எடுத்துச்செல்லவும் .
உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை type செய்து
1950 என்ற எண்ணிற்கு SMS
அனுப்புங்கள் உடனே உங்கள் தொகுதி எண், பாகம் எண், வரிசை எண் ஆவகியவற்றை தமிழிலும் ஆங்கிலத்திலும் இலவசமாக பெறலாம்.
நமது வாக்குகள் நமக்கே வாய்க்கரிசிகளாய் மாறிவிடக்கூடாது தோழர்களே...
நம் பலத்தை மறந்த (குறைத்து எடை போட்ட) ஆட்சியாளர்களுக்கு இனி என்றும் மறவாத படி செய்திடுவோம்..
இதை மற்ற குழுவிலும் பகிர்ந்து ஆசிரியர்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்த உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment